டிராக்டர்களுடன் நுழைந்து டெல்லியை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு https://ift.tt/3G690Jb
புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டினர்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம்தேதி (நேற்று) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், 2 மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், உத்தர பிரதேசம், ஹரியாணா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டருடன் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக