வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கி கணக்கை பயன்படுத்த அனுமதி https://ift.tt/EcOkAU5
புதுடெல்லி: வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக, காங்கிரஸ் கட்சியின் 4 பிரதான வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. காங்கிரஸ் முறையீடு செய்ததன் பேரில், இந்த நடவடிக்கையை தற்காலிகமாக ரத்து செய்துள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வங்கிக் கணக்குகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் நேற்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் 4 பிரதான வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை திடீரென முடக்கியுள்ளது. பொது மக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட எங்கள் கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. காசோலைகளை வாங்க மறுப்பு: இதனால், நாங்கள் அளிக்கும் காசோலையை வங்கிகள் வாங்குவது இல்லை. இது எங்கள் செயல்பாட்டை பெரிதும் பாதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக