சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்து பாஜக-வின் மனோஜ் சோன்கர் ராஜினாமா https://ift.tt/jBoMSbP
சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்து பாஜக-வின் மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்துள்ளார். மேயர் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணை இன்று (பிப்.19) நடைபெற உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மனோஜ் சோன்கர்.
சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை இண்டியா கூட்டணி இணைந்து எதிர்கொண்டது. பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்ட நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக