100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு https://ift.tt/uRLcn3e
புதுடெல்லி: கிராமப்புறங்களில் 100 நாள் வேலையை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 4 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக அதிகரித்துள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கிராமங்களில் வசிக்கும் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்கு ஓர் ஆண்டில் 100 நாள்வேலைக்கு உறுதி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் சாலை அமைத்தல், கால்வாய், குளம், கிணறு வெட்டுதல், தூர்வாருதல் போன்ற பணிகளில் இந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக