கடற்படை தளத்தை தாக்க முயன்ற 4 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம்
புதுடெல்லி: பாகிஸ்தானின் 2-வது பெரிய கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்த முயன்ற 4 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் துர்பத் நகரில் பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளம் அமைந்துள்ளது. அங்கு சீனாவின் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 4 மர்ம நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட கடற்படை வீரர்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக