குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை https://ift.tt/YqwGrXm
புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த 11-ம் தேதி அமலுக்கு வந்தது. இதனிடையே, சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
ஆனால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் அதன் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து தஞ்சமடைந்த அந்நாட்டு சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக கருதப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக