எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம்; இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: மத்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை https://ift.tt/hv1CaLD
வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அச்சம் நிலவுவதால், இந்தியர்கள் யாரும் இஸ்ரேல், ஈரான் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத் துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையில் மோதல் நடந்து வரும் நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக வளாகம் மீது கடந்த 1-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது. ஆனால் அதனை இஸ்ரேல் மறுத்தது. எனினும், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக