ஜெகன் அரசின் ரூ.1,500 கோடி பாக்கியால் ஆந்திராவில் இலவச மருத்துவ காப்பீடு முடக்கம்: பொதுமக்கள் கடும் அவதி https://ift.tt/EtJm6NO
அமராவதி: ஆந்திராவில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச மருத்துவ காப்பீடு திட்ட சேவைகள் நேற்று முதல் முடங்கின. ஜெகன் அரசு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளதால் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ’ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ’ எனும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தினார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை,நடுத்தர வர்க்க குடும்பத்தினர் இலவசமாக கார்ப்பரேட் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக