அரசு நிறுவனங்கள், வங்கிகள் செய்திகள் அனுப்ப புதிய எண் https://ift.tt/5RjGrnZ
புதுடெல்லி: அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அழைப்பு விடுக்கவும், செய்திகள் அனுப்பவும் 160 என்ற தொடர் எண்ணை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) தெரிவித்துள்ளது.
மேலும், அழைப்புகள் மூலம் ஒரு முறை கடவுச் சொற்களை வழங்குவதற்கும், மார்க்கெட்டிங் அழைப்புகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கும் இந்த புதிய 160 என்ற தொடர் எண்ணை அறிமுகம் செய்துள்ளதாக டிஓடி தெரிவித்துள்ளது. அதேநேரம், டெலி மார்க்கெடிங் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 140 தொடர் எண்ணிலிருந்து மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர அழைப்புகள் தொடர்ந்து பெறலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக