“டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பஞ்சாபை கட்டுப்படுத்துகின்றனர்” - பிரதமர் மோடி https://ift.tt/EdnAsvT
குர்தாஸ்பூர்: டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பஞ்சாப் மாநிலத்தை கட்டுப்படுத்தி வருவதாக வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தது.
“பஞ்சாப் மாநிலத்தில் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நடந்து வருகிறது. இது துரதிருஷ்டவசம். டெல்லி தர்பாரில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் அதை செய்து வருகின்றனர். பஞ்சாப் மாநில முதல்வரால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக