சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/GqP6Qvl
புதுடெல்லி: சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகை என்பது வரி அல்ல. அது குத்தகை கட்டணம்தான் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழக அரசுக்கு அந்த நிறுவனம் ராயல்டி (உரிமைத் தொகை) வழங்கியது. ஆனால், அத்துடன் சேர்த்து தமிழக அரசு ‘செஸ்’ வரியும் விதித்தது. இதையடுத்து, ‘சுரங்கங்கள், கனிம நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே, தமிழகஅரசு விதித்த வரியை திரும்ப பெற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தங்கள் பகுதிக்கு உட்பட்ட கனிம நிலத்தை பயன்படுத்த வரி விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக