காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு: செப். 18-ல் தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது https://ift.tt/gjQVO81
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டமாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2 மாநிலங்களிலும் அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதுதொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 2024 மக்களவை தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டது. பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். இத்தேர்தலில் பல வரலாற்று சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தியாவின் ஜனநாயகம் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக