பெண் மருத்துவர் கொலையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் https://ift.tt/PrBp75e
புதுடெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதால், டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் மருத்துவர்கள் வாபஸ் பெற மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக