ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு: பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் உறுதி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி, டெலவர் மாநிலம் வில்மிங்டன் நகரில் சந்தித்து பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அதிபர் பைடன் முழு ஆதரவு தெரிவித்தார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள்அடங்கிய ‘குவாட்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்த ஆண்டில் இந்தியாவில் நடக்க இருந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதால் உச்சி மாநாட்டை நடத்த அமெரிக்க அரசு விருப்பம் தெரிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக