ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும்: பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்தல்

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இரு ஆண்டுகள் மட்டும் பதவி வகிக்கும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு குறைந்த செல்வாக்கு மட்டுமே உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முழு ஆதரவு அளித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினும் ஆதரவு வழங்கி உள்ளார். இந்த சூழலில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்று முன்தினம் பேசும்போது, “இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் மற்றும் இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD