பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே ஒருமித்த கருத்து: சீன தூதர் ஜு பீஹாங் தகவல் https://ift.tt/CYSb9JX
புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் போட்டி யாளர்கள் அல்ல என்றும் நட்பு நாடுகள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜி ஜின் பிங் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு ஜூன் 15-ல் கைகலப்பு ஏற்பட்டதில் இருதரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டது. எனினும், இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் போர் பதற்றம் தணிந்தது. படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. எனினும், இருதரப்பு உறவில் கடந்த 4 ஆண்டுகளாக விரிசல் நீடிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக