ராகுல் காந்தியை பப்பு என கிண்டல் செய்த ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை https://ift.tt/mcQoRkz
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கவுதம் புத்த நகர் மாவட்ட ஆட்சியரான மணீஷ் குமார் வர்மாவின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ராகுல் காந்தியை பப்பு என்று அழைத்து கருத்து பதிவிட்டிருந்தார். ஆனால் சில மணி நேரத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அதிகாரத்துவம் மற்றும் அரசியல் சாராத அதிகாரிகளின் அதிகரித்து வரும் அரசியல்மயமாக்கலை இது எடுத்துக்காட்டுகிறது. ராகுல் காந்தியை பப்பு என்று அழைத்த மாவட்ட ஆட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக