பணம் பறிக்கவே சல்மான் கானுக்கு மிரட்டல்: கைதான இளைஞர் வாக்குமூலம் https://ift.tt/nkGTCWg
மும்பை: கடந்த அக்டோபர் 12-ம் தேதி தசரா கொண்டாட்டத்தின்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. சல்மான் கான் மற்றும் தாவூத் இப்ராஹிம் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததன் காரணமாகவே பாபா சித்திக்கை கொலை செய்துள்ளோம் என்று அக்கும்பல் தெரிவித்தது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் வரத் தொடங்கியது. கடந்த வாரம் சல்மான் கானுக்கும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக்குக்கும் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். அவ்விருவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக