மத்திய அரசுக்கு சுங்க கட்டணம் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வருவாய் https://ift.tt/npuIgF2
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.1.44 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: தேசிய நெடுஞ்சாலைகளில் பிபிபி எனப்படும் பொது தனியார் பங்களிப்பு மாடல் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிடமிருந்து கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி சுங்க கட்டணமாக மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக