மகா கும்பமேளாவில் 2,000 டிரோன்களில் வானில் வண்ண மயமான லேசர் கண்காட்சி https://ift.tt/fs8vQ1R

மகாகும்ப நகர்: உத்தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜில் அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்​ரவரி 26-ம் தேதி வரை மகா கும்​பமேளா நடைபெறுகிறது. இது 12 ஆண்டு​களுக்கு ஒரு முறை கொண்​டாடப்​படு​கிறது.

கும்​பமேளா​வின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்​சி​யின் போது, சங்கம் முனைப் பகுதி​யில் இரவு நேரத்​தில் ட்ரோன்கள் மூலம் லேசர் கண்காட்​சிக்கு உத்தர பிரதேச சுற்றுலாத்​துறை ஏற்பாடு செய்​துள்ளது. இது குறித்து மாவட்ட சுற்றுலாத்​துறை அதிகாரி அபரஜிதா சிங் கூறிய​தாவது: மூன்று நதிகள் சங்கமிக்​கும் சங்கம் முனைப் பகுதி​யில் இரவு நேரத்​தில் வானில் ஒளிரும் ட்ரோன் கண்காட்​சிக்கு ஏற்பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. 2,000-க்​கும் மேற்​பட்ட ஒளிரும் ட்ரோன்​கள், கடலில் அமுதம் கடையும் ‘சமுத்ர மந்தன்’ நிகழ்ச்​சியை வானில் நடத்தி காட்டும். இது தனிச்​சிறப்பான அனுபவமாக இருக்​கும். இவ்​வாறு அபரஜிதா சிங் கூறினார்​.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD