ம.பி.யில் கான்ஸ்டபிள் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்: கேட்பாரற்று கிடந்த காரில் ரூ.40 கோடி தங்கம் https://ift.tt/rUkqCKs
போபால்: ம.பி.யில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போபாலின் மிண்டோரி வனப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த காரில் இருந்து 52 கிலோ தங்கத்தை நேற்று பறிமுதல் செய்தனர். போபாலில் திரிசூல் கன்ஸ்ட்ரக் ஷன், குவாலிட்டி குரூப், இஷான் குரூப் உட்பட 51 இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் இந்தத் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேட்பாரற்று கிடந்த கார் போலீஸாரால் தேடப்படும் பில்டர் ஒருவரின் பெயரில் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக