சுனாமி தாக்கிய போது போர்க்கப்பலில் பிறந்த குளோரிக்கு கடற்படையில் இணைந்து சேவை செய்ய விருப்பம் https://ift.tt/8wqE5zR

குட்டி அந்தமான் என்று அழைக்கப்படும் ஹட் பே தீவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலராமன், லட்சுமி தம்பதி. இவர்களை கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் சுனாமி தாக்கிய போது அருகில் உள்ள குன்றின் மீது ஏறி உயிர்தப்பினர். அப்போது, லட்சுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனது கிராமம் அழிவதை கண் முன்னால் கண்ட லட்சுமி சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வாடியிருந்த நான்கு நாட்களுக்குப் பிறகு அவரை காப்பாற்ற ஏஞ்சல் போல ஐஎன்எஸ் கரியல் போர்க்கப்பல் வந்தது. அந்த கப்பலில் ஏறிய பிறகு லட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து, போர்ட் பிளேர் செல்வதற்கு முன்பாகவே அவரு்க்கு பிரசவம் பார்க்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. கொஞ்சமும் முன் அனுபவம் இல்லாத கப்பலில் இருந்த மருத்துவர் மற்றும் அவரது உதவியாள லட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். டிசம்பர் 29, 2004 மாலை 7 மணிக்கு லட்சுமிக்கு அழகான குளோரி என்ற பெண் குழந்தை பிறந்தது. போர்க் கப்பலில் பிறந்த முதல் குழந்தை இது.

இப்போது குளோரிக்கு 20 வயது ஆகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “ இந்திய கடற்படை போர்க்கப்பலின் உதவியால் பிறப்பெடுத்தேன். தற்போதும் அவர்களின் உதவியால்தான் படித்து வருகிறேன். ஜேஎன்ஆர்எம் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு இந்திய கடற்படையில் அதிகாரியாக சேர வேண்டும் என்பதே எனது ஆசை. அப்போதுதான் நான் பிறந்த கடனை திரும்ப செலுத்த முடியும். அதற்கு ஏதுவாக இப்போதே எஸ்எஸ்பி தேர்வுக்கு தயாராகி வருகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை