அம்பேத்கர் பற்றிய அமித் ஷா பேச்சை நீக்க எக்ஸ் தளத்துக்கு அழுத்தம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு https://ift.tt/H93UYtF
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்க கோரி அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் தள தலைவர் சுப்ரியா ஸ்ரீநடே கூறியுள்ளதாவது: மாநிலங்களவையில் அம்பேத்கரை அவமரியாதை செய்யும் வகையில் அமித்ஷா பேசியதை காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் சமூக வலைதள நிர்வாகிகள் எக்ஸ் வலைதளத்தில் பகிரந்துள்ளனர். இந்த நிலையில், அமித் ஷா பேசிய பகிர்வை எக்ஸ் வலைதளத்திலிருந்து நீக்க கோரி மத்திய அரசிடம் இருந்து அழுத்தம் வந்துள்ளதாக அந்த நிறுவனம் எங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக