இந்தியாவின் ஒரே இலவச ரயில் https://ift.tt/rJ0olwc
இமாச்சல பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டம், பக்ரா பகுதியில் சட்லஜ் நதியின் குறுக்கே கடந்த 1948-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கியது. இதற்காக பஞ்சாபின் நங்கல் பகுதியில் இருந்து சிமென்ட், கற்கள் அணை கட்டும் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டன.
கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல 1948-ம் ஆண்டில் பஞ்சாபின் நங்கல், இமாச்சல பிரதேசத்தின் பக்ரா இடையே 13 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 1963-ம் ஆண்டு வரை பக்ரா அணை கட்டும் பணி நடைபெற்றது. இந்த காலத்தில் நங்கல் பகுதியில் இருந்து பக்ராவுக்கு நாள்தோறும் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் இலவசமாக பயணம் செய்தனர். கனரக கட்டுமான பொருட்கள் ரயிலில் எளிதாக எடுத்துச் செல்லப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக