சட்டவிரோதமாக செயல்பட்ட 13 சுரங்கங்களுக்கு சீல்: அசாம் அரசு நடவடிக்கை https://ift.tt/y5ZRaUS
அசாமில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சுரங்கங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அசாமின் திமா ஹசாவ் மாவட்டம், உம்ரங்சூ பகுதியில் செயல்பட்ட நிலக்கரி சுரங்கம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்து வந்தனர். கடந்த 6-ம் தேதி எலிவளை சுரங்கம் அமைத்து அவர்கள் நிலக்கரி வெட்டியபோது தண்ணீர் பெருக்கெடுத்து சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்து இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 7 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக