தேர்தலுக்காக நன்கொடை திரட்டும் ஆதிஷி: 24 மணி நேரத்தில் ரூ.19 லட்சம் குவிந்தது https://ift.tt/VYINuA0
டெல்லி முதல்வர் ஆதிஷி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இணையவழியில் நன்கொடை திரட்டுகிறார். அவருக்கு 24 மணி நேரத்தில் ரூ.19 லட்சம் குவிந்தது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் ஆதிஷி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக ரூ.40 லட்சம் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, இணையவழியில் நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். அடுத்த 24 மணி நேரத்தில் 455 பேர் ரூ.19,32,728 நன்கொடை வழங்கி உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக