அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்
அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் பங்குச் சந்தை குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும் பங்கு விலையை செயற்கையாக அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியது. இதனால் அப்போது அதானி குழும பங்குகள் 50% வரை சரிந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக