குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினரை சிறையில் அடைக்க உத்தரவு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமீனில் விடுதலையான சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக சிறையில் அடைக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினரை சிறையில் அடைக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 308 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD