திருமணம் நின்றது, வேலையும் பறிபோனது: சயீப் அலிகான் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதானவர் கண்ணீர் https://ift.tt/0H9Tb32
மும்பை: கடந்த 15-ம் தேதி மும்பையில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக, சத்தீஸ்கரை சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கடந்த 18-ம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கூறியதாவது: நான் மும்பையின் கொலாபா பகுதியை சேர்ந்தவன். எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. எனது வருங்கால மனைவியை நேரில் பார்க்க மும்பையில் இருந்து சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். துர்க் நிலையத்தில் ரயில் நின்றபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் என்னை வலுக்கட்டாயமாக ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மும்பை போலீஸார் என்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது அடித்து உதைத்து துன்புறுத்தினர். நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டினர். எனது விளக்கத்தை போலீஸார் ஏற்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகே என்னை விடுவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக