இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை தாண்டியது: பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/WL7QrUg
நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னைத் தாண்டி சாதனை படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை தாண்டியுள்ளது. இது இந்தியாவுக்கு மிகவும் பெருமைமிகு தருணம். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா உறுதியுடன் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சொந்த வளங்களின் மூலம் தன்னிறைவு அடைவதற்கு மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்த துறையுடன் தொடர்புடைய அனைவரின் அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் இந்த சாதனை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக