இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் - பாதிப்பு எத்தகையது?
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நேற்று 8-வது நாளாக நீடித்தது. இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் ராணுவ உயர் அதிகாரிகள், மூத்த அணு விஞ்ஞானிகள் உட்பட 224 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலில் 25 பேர் உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக