இராக் வணிக வளாகத்தில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு - நடந்தது என்ன?

பாக்தாத்: இராக்கில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்கு இராக்கின் வசிட் மாகாணம் குட் நகரில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு புதிய வணிக வளாகம் திறக்கப்பட்டது. 5 தளங்களைக் கொண்ட அதில் உணவகம், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை இரவு அந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் படையினரும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக