நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடக்கம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு https://ift.tt/4sGT1EZ

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவாதங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்த விவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதேபோல, மழைக்கால கூட்டத் தொடரின் 2-ம் நாளான நேற்று முன்தினமும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக