ஜப்பான் - இந்தியா இணைந்தால் புதிய தொழிற்புரட்சி: டோக்கியோவில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை

டோக்கியோ: ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்தால், 21-ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று டோக்கியோவில் நடைபெற்ற இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 15-வது இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளன. 80 சதவீத ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை விரிவுபடுத்த விரும்புகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD