எச்1பி விசா கட்டண உயர்வால் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு அவசரமாக புறப்பட்ட இந்தியர்கள் https://ift.tt/5Mvjto6

புதுடெல்லி: எச்1பி விசா கட்டண உயர்வு விவகாரத்தால் இந்திய இளைஞர்கள் திருமணத்தை ரத்து செய்து விட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ரூ.1.32 லட்சமாக இருந்த இந்த விசா கட்டணத்தை அமெரிக்க அரசு திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தியது. புதிய கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் 7.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் மனைவி, பிள்ளைகள் என சுமார் 6 லட்சம் பேரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இதில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக