ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்

ஹைபா: இஸ்ரேலின் ஹைபா நகரில் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறியதாவது: வரலாற்று சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழுமையான ஆராய்ச்சி செய்த புத்தகம் ஒன்றை வழங்கினார். அதில், இந்த நகரத்தை ஒட்டோமான்களிடமிருந்து விடுவித்தது ஆங்கிலேயர்கள் அல்ல, இந்தியர்கள் தான் என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார்.
ஆனால், அதுவரை இந்த நகரம் பிரிட்டிஷ் வீரர்களால்தான் விடுவிக்கப்பட்டது என்பதாக எங்களுக்கு தொடர்ச்சியாக போதிக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட தீரம் மிகுந்த இந்திய வீரர்களுக்கு இங்கு அஞ்சலி செலுத்துவது பெருமையாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக