ம.பி.யில் ஓய்வூதியத்துக்காக 50 ஆண்டாக போராடும் மூதாட்டி https://ift.tt/V8i4QSF

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த சங்கர்லால் ஸ்ரீவாஸ்தவா 23 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி 1971-ல் பணியிலிருந்து விலகி 1985-ல் காலமானார். அவருடைய மனைவி மிதிலேஷ் ஸ்ரீவாஸ்தவா (79), தனது கணவரின் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை கேட்டு அளித்த மனுக்கள், ஆவணங்கள் துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் காணாமல் போயின. இதையடுத்து அவர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதற்கு நடுவே, அவருக்கு தற்காலிக ஓய்வூதியமாக மாதத்துக்கு வெறும் ரூ.33 வழங்கப்படுகிறது. பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு. 2005-ல் மிதலேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் காணாமல் போன ஆவணங்களை காரணம் காட்டி ஓய்வூதியம் தருவதை அரசு தாமதப்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD