சவுதி பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு: பிரதமர் உதவ வேண்டும் என வேண்டுகோள்  https://ift.tt/lD9Wk01

புதுடெல்லி: உத்தர பிரதேசம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் ஹாண்​டியா பகு​தி​யைச் சேர்ந்த இளைஞர், சவுதி அரேபி​யா​வில் வேலை பார்க்க சென்​றுள்​ளார். அவருக்கு பாலை​வனத்​தில் ஒட்​டகம் மேய்க்​கும் வேலை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வேலை மிக​வும் சிரம​மாக உள்​ள​தால் அவர் தாய்​நாடு திரும்ப விரும்​பு​கிறார். ஆனால், அவரது முதலாளி கபில் என்​பவர், தொழிலா​ளி​யின் பாஸ்​போர்ட்டை வாங்கி வைத்​துக்​கொண்​டு, கொன்​று​விடு​வ​தாக மிரட்​டி​யுள்​ளார். அந்த இளைஞர் சமூக ஊடகத்​தில் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர், ‘‘எனது கிராமம் அலகா​பாத். நான் வேலை பார்க்க சவுதி அரேபியா வந்​தேன். எனது பாஸ்​போர்ட் கபில் என்​பவரிடம் உள்​ளது. நான் வீட்​டுக்கு போக வேண்​டும் என அவரிடம் கூறினேன். ஆனால், அவர் என்னை கொன்​று​விடு​வ​தாக மிரட்​டு​கிறார். நான் என் அம்​மா​விடம் செல்ல விரும்​பு​கிறேன். எனக்கு பிரதமர் நரேந்திர மோடி​யும், வெளி​யுறவுத்​துறை அமைச்​சரும் உதவ வேண்​டும். இல்​லை​யென்​றால் நான் இறந்​து​விடு​வேன்’’ என உருக்​க​மாக வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD