10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா https://ift.tt/qTxuz3R

பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக