கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு https://ift.tt/nDGP5if

புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற தடைகோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க கோரப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக