நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/v4Ul8VR

புதுடெல்லி: நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்பகங்களில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த 4 வாரங்களுக்குள்வழிகாட்டு செயல்முறைகளை உருவாக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்பட்டது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நாடு முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ‘விலங்குகள் கருத்தடை விதிகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக