இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போலீஸார் அகற்றிய தள்ளுவண்டி கடைகளுக்கு மீண்டும் அனுமதி: தெலங்கானா முதல்வருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு https://ift.tt/UvFprOG

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது: போக்குவரத்து துறை அமைச்சர் சம்பய் சோரன் புதிய முதல்வராகிறார் https://ift.tt/LWMbZPg

படம்
ராஞ்சி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஹேமந்த் சோரன், அங்கிருந்து ராஞ்சிக்கு ரகசியமாக திரும்பினார். அவர் விமானத்தில் வராமல், தனி காரில் ரகசிய வழியாக வந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் https://ift.tt/9LnzJ4g

படம்
புதுடெல்லி: அரசு நிர்வாகத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இது 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: புதிய நாடாளுமன்றத்தில் இது எனது முதல் உரையாகும். அமிர்த காலத்தின் தொடக்கத்தில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கொள்கைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசின் ரகசிய ஆவணங்களை கசிய விட்டதாக புகார்: பாக். முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு 10 ஆண்டு சிறை

படம்
இஸ்லாமபாத்: அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அந்நாட்டின் ராணுவ ஆதரவை இழந்தபின், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையை தடுக்க, அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமலாக்கத் துறை விசாரணையை தவிர்க்க டெல்லியில் இருந்து காரில் தப்பிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் https://ift.tt/ThzIstU

படம்
புதுடெல்லி: பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறை விசாரணையை தவிர்க்கும் வகையில் டெல்லியில் இருந்து தப்பினார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அமலாக்கத் துறைவட்டாரங்கள் கூறியதாவது: நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் பண மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, அவரது டெல்லி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார், வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை https://ift.tt/p1Vaw9r

படம்
திருவனந்தபுரம்: கேரள பாஜக நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் சீனிவாசன். கேரள பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுதலைவராக பதவி வகித்து வந்த அவர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர்19-ம் தேதி காலையில் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட தயாரானார். அப்போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஞ்சித் சீனிவாசனை சரமாரியாக தாக்கினர். இதில், அவரது உடலில் 56 இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது முகம் முழுமையாக சிதைக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே ரஞ்சித் சீனிவாசன் உயிரிழந்தார். தாய், மனைவி, மகளின் கண்எதிரேகொடூரமாக அவர் படுகொலை செய்யப்பட்டது, கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பிரமுகர் மன்வேந்திர சிங் சாலை விபத்தில் படுகாயமடைந்தார் https://ift.tt/WcGAHvZ

படம்
அல்வார்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், முன்னாள் எம்.பி-யுமான மன்வேந்திர சிங், சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் அவருடன் பயணித்த அவரது மனைவி சித்ரா சிங் உயிரிழந்தார். டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதில் அவரது 25 வயது மகன் ஹமிர் சிங் மற்றும் ஓட்டுநர் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். குடும்பத்துடன் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் பயணித்த போது விபத்தில் சிக்கி உள்ளார். அவர்கள் பயணித்த காரினை மன்வேந்திர சிங் தான் ஓட்டி வந்துள்ளார். சாலையோர தடுப்பக்கட்டையில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பயணித்த காரணத்தால் காரின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை மீட்ட இந்திய போர்க்கப்பல்

படம்
புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர் களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை இந்திய போர்க்கப்பல் பத்திரமாக மீட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: பிப்.1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் https://ift.tt/CF46Pg5

படம்
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இதில் பல சலுகைகள், புதிய திட்டங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இது மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டமாக அமையும். ஜனவரி 31-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வானிலை ஆய்வுக்காக ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது https://ift.tt/9mMCHSh

படம்
சென்னை: வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள், அடுத்தமாதம் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது. இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. புயல், கனமழை போன்றஇயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத இண்டியா கூட்டணி: நிதிஷ்குமார் குற்றச்சாட்டு https://ift.tt/Qz5u2rN

படம்
பாட்னா: பதவியேற்பு விழாவுக்கு முன்பு, ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ‘‘பிஹாரில் தற்போதைய கூட்டணியோடு (ராஷ்டிரிய ஜனதா தளம்) இணைந்து அரசை நடத்த முடியவில்லை. அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்து பேசினேன். கூட்டணியில் இருந்து வெளியேற அவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். தேசிய அளவிலான இண்டியா கூட்டணியும் எனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. தற்போது பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளேன்’’ என்றார். முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் கூறியபோது, ‘‘தேஜஸ்வி யாதவ் எதுவுமே செய்யவில்லை. இருந்த இடத்துக்கே திரும்பி வந்துள்ளேன். இனி வேறு எங்கும் செல்ல மாட்டேன். நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வராக 9-வது முறை பதவியேற்றார் நிதிஷ்குமார்: பிஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி https://ift.tt/auK0wBX

படம்
பாட்னா: பிஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. முதல்வராக 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பிஹார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெற்றது. இதில், நிதிஷ்குமாரின் ஐக்கியஜனதா தளம், பாஜக ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிக கல்லூரிகள் உள்ள மாநிலங்களில் உ.பி. முதலிடம் https://ift.tt/jNroJWH

படம்
புதுடெல்லி: 2011-ம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சகம், உயர்கல்வி தொடர்பாக அகில இந்திய கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதன்படி, நாட்டிலேயே அதிக கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 8,375 கல்லூரிகள் உள்ளன. இந்தப் பட்டியலில் 2-வது இடத்தில் மகாராஷ்டிரா (4,692), 3-வது இடத்தில் கர்நாடகா (4,430), 4-வது இடத்தில் ராஜஸ்தான் (3,934), 5-வது இடத்தில் தமிழ்நாடு (2,829) உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைச்சரவையை மட்டும் மாற்றியமைக்க நிதிஷ் குமார் முடிவு: பாஜக ஆதரவுடன் பிஹாரில் புதிய ஆட்சி https://ift.tt/D4o9bCJ

படம்
பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் இன்று தனது அமைச்சரவையை மாற்றியமைத்து புதிய ஆட்சி அமைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தனது கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார். பாஜக, காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி அமைத்து அவர் ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு ‘பல்து ராம்’ (அடிக்கடி கட்சி மாறுபவர்) என்ற புனைப் பெயரும் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிஹாரில் புதிய ஆட்சியை அமைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இண்டியா’ கூட்டணியில் இருந்து விலகுகிறார் - பாஜக கூட்டணிக்கு வருகிறார் நிதிஷ் குமார்? https://ift.tt/AjSNt4v

படம்
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி உள்ளது.மேலும் இண்டியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. கடந்த சில மாதங்கள் வரை,இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் முப்படை அணிவகுப்புகளுக்கு பெண்கள் தலைமை தாங்கினர் - தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் https://ift.tt/wjFbvZD

படம்
புதுடெல்லி: நாட்டின் ராணுவ வலிமை, அறிவியல் வளர்ச்சி, கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணி அளவில் அஞ்சலி செலுத்தினார். 10.25 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் கடமைப் பாதைக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், 21 பீரங்கி குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா: பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிப்பு https://ift.tt/eE58c04

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாடு முழுவதும் இன்று 75-வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீஸார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றிரவு 10 மணி முதல் டெல்லியின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே டெல்லியில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவில் மீண்டும் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்: எம்எல்சி பதவி வழங்கியும் காங்கிரஸை விட்டு விலகினார் https://ift.tt/DIU29aJ

படம்
பெங்களூரு/புதுடெல்லி: கடந்த தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக மூத்த தலைவரும், முன்னாள்முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு (67) பாஜக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். ஹூப்ளி-தர்வாட்மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் மேலிடம் எம்எல்சி பதவி வழங்கியது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவர் மீண்டும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தன்னை மீண்டும்கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலையொட்டி உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் தொடங்கினார் பிரதமர் மோடி https://ift.tt/nKYxI15

படம்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிட உள்ள பிரதமர் மோடி, நேற்று உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷண், விஜயகாந்துக்கு பத்ம பூஷண் - பத்ம விருதுகள் முழு பட்டியல் https://ift.tt/MKIk6Bz

படம்
புதுடெல்லி: கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமண்யம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகன்), தமிழகத்தின் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என தகவல். சிரஞ்சீவி, பத்மா சுப்ரமண்யம், வெங்கய்ய நாயுடு என பெருவாரியான மக்களால் அறியப்படுபவர்களுக்கும் விருதுகள் அறிவிப்பு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil...

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ‘இண்டி’ கூட்டணியில் விரிசல் https://ift.tt/Y98c05e

படம்
மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து பல மாதங்களுக்கு முன்பே இண்டி கூட்டணியை உருவாக்கின. ஆனால் நாடாாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான கே.சி. தியாகி சமீபத்தில் கூட்டணிக்கென ஒரு திட்டமோ அல்லது செயல்வடிவமோ இல்லையென்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ‘இண்டி' கூட்டணியானது பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்றால், கிரிக்கெட் பாணியில் சொல்வதானால் - பேட்டிங்கில் திறமையாக இருந்தால் அதிக ரன்களைக் குவிக்க வேண்டும். அல்லது பந்து வீச்சில் பலமாக இருந்தால் எதிரணியை இத்தனை ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பது போல எத்தனை இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு வேண்டும். அல்லது பாஜகவை எத்தனை இடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம், பஞ்சாபில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: தனித்து போட்டியிடுவதாக திரிணமூல், ஆம் ஆத்மி அறிவிப்பு https://ift.tt/jkxlZsD

படம்
கொல்கத்தா/ சண்டிகர்: மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி, பகவந்த் மான் ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அவர்கள் அறிவித்திருப்பது, இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில், தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமரும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தன. இக்கூட்டணியில் திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) உட்பட 28 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். சமீபத்தில் காணொலி வாயிலாகவும் ஒரு கூட்டம் நடந்தது. ஆனாலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu...

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு 81% பேர் ஆதரவு https://ift.tt/dGXTsq3

படம்
புதுடெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவாக 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 2023 செப்டம்பரில் அமைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு https://ift.tt/AeDvBqr

படம்
புதுடெல்லி : பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு . பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (ஜன.23) அறிவித்தார். கர்பூரி தாக்கூர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னம் விருது வழங்கப்படுகிறது. கர்பூரி தாக்கூர் பிப்ரவரி 17, 1988ல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தியில் பால ராமர் கண் திறந்தார் : கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் செய்தார் பிரதமர் மோடி https://ift.tt/FpgItPo

படம்
அயோத்தி : அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பூஜை செய்தார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - டெல்லியிலும் அதிர்வு உணரப்பட்டது https://ift.tt/6zhjNQS

படம்
புதுடெல்லி : சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் இரவு 11 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சீனாவை தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 80 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன்” - ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி https://ift.tt/VQkTNxX

படம்
அயோத்தி : "உண்மையில் நான்தான் அதிர்ஷ்டசாலி" என அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை யை வடிவமைத்த சிற்பி கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிற்பி அருண் யோகிராஜ், "இப்போது நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன். இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள்" என நெகிழ்ச்சியுடன் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

"இன்றாவது ராவணனை பற்றி பேச வேண்டாம்" - ராகுலை குறிப்பிட்டு அசாம் முதல்வர் சாடல் https://ift.tt/4WeLdu8

படம்
குவாஹாட்டி : "இன்றைக்காவது ராவணனைப் பற்றி பேச வேண்டாம்" என்று ராகுல் காந்தியை குறிப்பிட்டு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார். சட்டம் - ஒழுங்கு காரணங்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அசாம் தடைவிதித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் இவ்வாறு பேசியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்துடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்குள்ள ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் நேற்று (ஜன.22) சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். துறவி, அறிஞர், சமூக - மத சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவா, அசாம் கலாச்சாரம், மத வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அறியப்படுகிறார். ஆனால், அந்தக் கோயிலுக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவ...

உலகின் பெரிய பணக்கார அரசியல்வாதி அதிபர் புதின்

படம்
புதுடெல்லி : ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வ ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. தான் வசிப்பது 800 சதுர அடி வீடுதான் என்றும் தன்னிடம் 3 கார்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் முன்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. விளாதிமிர் புதின் 2012-ம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர் (ரூ.16 லட்சம் கோடி) என்றும் கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளது என்றும் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா: நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் https://ift.tt/cjVtXQG

படம்
அயோத்தி : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது. உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் திறப்பு விழா | ரஜினி முதல் ராம்தேவ் வரை - அயோத்தி வந்த விஐபிகள் லிஸ்ட் https://ift.tt/TKy4Nql

படம்
புதுடெல்லி : நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழா விற்காக பல முக்கிய பிரபலங்கள் அயோத்திக்கு வந்திறங்கி உள்ளனர். நடிகர்களான ரஜினிகாந்த், தனுஷ், கங்கணா ரணாவத், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பாபா ராம்தேவ் என இந்தப் பட்டியல் நீள்கிறது. உத்தரப்பிரதேசம் அயோத்தியில் நாளை திறக்கப்பட உள்ள ராமர் கோயில் விழா வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிமிருந்தும் பல முக்கியப் பிரபலங்களும் அயோத்தி வந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பையிலிருந்து அயோத்திக்கு1,425 கி.மீ தூரம் நடைபயணமாகச் செல்லும் முஸ்லிம் பெண் https://ift.tt/l0tMKpb

படம்
மும்பை : மும்பையிலிருந்து ராமர் கோயில் திறக்கப்படவுள்ள அயோத்திக்கு 1,425 கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக முஸ்லிம் பெண் ஒருவர் சென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் 1,425 கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபயணம் தொடங்கியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு https://ift.tt/OMxScLq

படம்
அயோத்தி : ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசம், அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறை பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என 11,000 விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு சிறப்பு அழைப்பிதழ் https://ift.tt/vDof75h

படம்
புதுடெல்லி : ஸ்ரீ ராம ஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வில் இடம்பெற்றிருந்த தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட 5 நீதிபதிகளுக்கு ராமர் கோயில் பிரதிஷ்டைக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமஜென்மபூமி வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு வழங்கிய தீா்ப்பில், ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பசுக்களுக்கு உணவளித்து, வெறும் தரையில் உறங்கி 11 நாட்கள் கடுமையாக விரதம் இருக்கும் பிரதமர் மோடி https://ift.tt/lf71unY

படம்
புதுடெல்லி : ராமர் கோயில் திறப்பையொட்டி 11 நாள் விரதத்தை கடைபிடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், பசுக்களுக்கு உணவளித்தும், கட்டாந்தரையில் படுத்து உறங்கியும் தினந்தோறும் அவர் கடுமையான விரதத்தை கடைபிடித்து வருகிறார். அயோத்தியில் வரும் 22-ம்தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு, பிரதமர் 11 நாள் விரதத்தை அறிவித்து அதனை கடுமையாக பின்பற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் நாட்டில் வேலை | ஹரியாணா அரசு ஆட்சேர்ப்பு முகாம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு https://ift.tt/X3exlHh

படம்
புதுடெல்லி : காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்யும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஹரியாணா அரசு, இஸ்ரேலில் உள்ள 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரங்களை கடந்த டிசம்பரில் வெளியிட்டது. தச்சர்கள், பீங்கான் டைல்ஸ் ஒட்டுநர்கள், மேஸ்திரிகள், உருக்காலை தொழிலாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.1.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவின் மேற்பரப்பை அடைந்த 5-வது நாடு: சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது ஜப்பான் விண்கலம்

படம்
டோக்கியோ : ஜப்பான் நாட்டின் விண்கலமான 'ஸ்லிம்' நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற வரலாற்றை ஜப்பான் உருவாக்கியுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலனை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான் . நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் வகையில் அதன் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தங்க வில் - அம்பு: அயோத்தி ராமர் சிலையின் முழு தோற்றம் வெளியீடு https://ift.tt/ARvT7fe

படம்
மைசூரு : அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராமர் குழந்தையாக நிற்கும் நிலையில் தங்க வில் மற்றும் அம்புகளை ஏந்தியவாறு சிலை சித்தரிக்கிறது. 51 இன்ச் உயரம் கொண்ட இந்த குழந்தை ராமர் சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ளார். நேற்று கருவறைக்குள் சிலை வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகின. என்றாலும் அது துணியால் மூடப்பட்டிருந்தது. பின்னர் சிலையின் கண்கள் மட்டும் மூடியிருந்த மற்றொரு படம் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதனிடையேதான் முழுமையான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களில் குழந்தை ராமரின் முகம் மற்றும் தங்க வில் மற்றும் அம்பு ஆகியவற்றை அடங்கிய முழுமையான தோற்றமாக காட்சியளிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏடன் வளைகுடாவில் 9 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் https://ift.tt/o23ktZj

படம்
புதுடெல்லி : ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்ற சரக்கு கப்பல் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பையடுத்து, இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடியாக உதவிக்கு சென்றது. அரபிக் கடல், ஏடன் வளைகுடா, பெர்ஷியன் வளைகுடா, செங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்கள் சமீபகாலமாக டிரோன் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இந்த தாக்குதலில் ஹவுதி தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். இஸ்ரேலுக்கு செல்லும் அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ட்ரோன் தாக்குதல் மற்றும் கடற் கொள்ளையர்களை தடுக்கும் பணியில் இந்திய போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கடத்தப்பட்ட மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட பல கப்பல்களை இந்திய கடற்படை கப்பல்கள் மீட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது: ஜன.22-ல் அரைநாள் விடுமுறை https://ift.tt/kLhHBGp

படம்
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கருவறையில் 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டு 4 மணி நேரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முன்னதாக, அயோத்தி ராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கின. அன்று பிராயச்சித்தா உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள 22-ம் தேதி வரை இந்த சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பூஜையில் 11 புரோகிதர்கள் ஈடுபட்டுள்ளதாக ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறினார். தீர்த்த பூஜை, ஜல யாத்திரை, கங்காதிவஸ் போன்ற பூஜைகள் இனி வரும் நாட்கள் நடைபெற உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுற்றுலா சென்றபோது துயரம் - 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து ஏற்பட்டது எப்படி? https://ift.tt/l7XkPWM

படம்
வதோதரா : வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல். மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், விபத்து தொடர்பாக 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார். ஹார்ணி என்ற ஏரியில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்த மாணவர்கள் தேடும் பணி நிகழ்விடத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வட மாநிலங்களில் தொடர்ந்து வாட்டியெடுக்கும் கடும் குளிர்: பனிமூட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் https://ift.tt/gZCvpK8

படம்
புதுடெல்லி: வட மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன் காரணமாக இம்மாத தொடக்கத்தில் டெல்லி, உ.பி,, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், தொடர்ந்து உறைய வைக்கும் குளிர் நீடிப்பதால் இந்த வாரம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிஹாரில் வரும் 20-ம் தேதிவரை, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல் டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. உத்தர பிரதேசத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த திட்டம்: பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு https://ift.tt/TPtirLd

படம்
புதுடெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இதில், மக்கள் பயன்பெறும் வகையில் பல சலுகைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் திறப்பு விழா | இலவச விஐபி நுழைவுச் சீட்டு குறித்த போலி மெசேஜ்: வாட்ஸ்அப் மோசடி https://ift.tt/vSVlDaM

படம்
சென்னை: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப்பில் இலவச விஐபி நுழைவுச் சீட்டு குறித்த போலி மெசேஜ் வலம் வந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை எக்ஸ் தளத்தில் பயனர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர் முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையையும் வழங்கி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் சுமார் 6,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு https://ift.tt/Q5xGlZA

படம்
அமராவதி: திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில், ஒரு முன்னாள் முதல்வரான என்னை கைது செய்ய 17-ஏ சட்டப்பிரிவின் படி, ஆளுநருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், திடீரென சிஐடி போலீஸார் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்தது சட்டப்படி செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடு தரப்பில் கடந்தஆண்டு செப்டம்பர் 23ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே சந்திரபாபு நாயுடுவுக்கு இதே வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

படம்
புதுடெல்லி: பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது. அண்மையில் ஈராக், சிரியா மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானை இப்போது தாக்கியுள்ளது. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமானி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடமாநிலங்களில் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, ரயில்கள் தாமதம், பள்ளிகளுக்கு விடுமுறை https://ift.tt/yKFsean

படம்
புதுடெல்லி: வடமாநிலங்களில் உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இதன்காரணமாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன்காரணமாக இந்த மாத தொடக்கத்தில் டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், உறைய வைக்கும் குளிர் நீடிப்பதால் இந்த வாரம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிஹாரில் வரும் 20-ம் தேதி வரை, 1 முதல் 8-ம்வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க அதிபர் தேர்தல் | குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப் வெற்றி: நிக்கி, விவேக் ராமசாமிக்கு பின்னடைவு

படம்
வாஷிங்டன் : 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளார். ஐயோவா மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவிக் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியை வாட்டும் குளிர் - 17 விமானங்கள் ரத்து; ரயில் சேவை கடுமையாக பாதிப்பு https://ift.tt/ljRpA7e

படம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குளிருடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால், டெல்லி பாலம் மற்றும் சஃப்டர்ஜங் விமான நிலையங்களில் காணும் திறன் 500 மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 30 விமானங்கள் தாமதமாகின. 17 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.16) காலை வெளியிட்ட அறிக்கையில், “பஞ்சாப் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லி, ஹரியாணா, வடக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்குவங்கத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கிழக்குப் பகுதிகளிலும் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது. குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டமும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தொடரும். இதனால் டெல்லிக்கு செவ்வாய் ம...

மும்பைக்கு திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்: ஓடுதளத்துக்கு அருகிலேயே அமர்ந்த பயணிகள் https://ift.tt/MsdzP8v

படம்
மும்பை: மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6E 2195 விமானத்தில் இருந்த பயணிகள் விரைந்து அதிலிருந்து வெளியேறினர். தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள டார்மாக் (விமானங்கள் நிறுத்தும் இடம்) பகுதியில் அமர்ந்தபடி உணவும் உண்டனர். இந்த காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலானது. இந்த சூழலில் இது குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. கோவாவில் இருந்து டெல்லி சென்ற இந்த விமானம் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் டெல்லியில் தரையிறங்க விமானங்கள் திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்