இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொள்ளையரிடம் இருந்து உயிருடன் மீட்ட கடற்படைக்கு நன்றி - ‘இந்தியா ஜிந்தாபாத்’ கோஷமிட்ட பாகிஸ்தான் மீனவர்கள் https://ift.tt/TUQlobB

படம்
புதுடெல்லி: கடற்கொள்ளையர்களிடம் இருந்து உயிருடன் மீட்டவுடன், உணர்ச்சிப் பெருக்கில் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் மீனவர்கள் ‘‘இந்தியா ஜிந்தாபாத்’’ என்று கோஷமிட்டனர். அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானிய மீன்பிடி படகில் 23 பாகிஸ்தானியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த கடற்கொள்ளையர்கள், ஆயுதங்களைக் காட்டி கப்பலை கடத்தினர். தகவலறிந்தவுடன் இந்திய கடற்படை போர்க் கப்பல் ஐஎன்எஸ் சுமேதா, ஐஎன்எஸ் திரிசூல் ஆகியவை கடற்கொள்ளையர்களை துரத்த ஆரம்பித்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் இன்று போராட்டம் https://ift.tt/HkwbjDF

படம்
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான கோபால் ராய் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயகத்தை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்துகிறது. இது எந்த தனி நபருக்கு ஆதரவான போராட்டம் அல்ல’’ என கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 5 பேருக்கு பாரத ரத்னா விருது https://ift.tt/51gFx4Y

படம்
புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மறைந்த நரசிம்ம ராவ், சரண்சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கவுரவித்தார். நாட்டிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மறைந்த நரசிம்ம ராவ், சரண்சிங், உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். நரசிம்ம ராவ் சார்பாக அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார். சரண்சிங் சார்பாக அவரது பேரன் ஜெயந்தன்சிங் பெற்றுக்கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வீடுகளில் வீணாகும் உணவு மூலம் 100 கோடி மக்களின் பசியை தீர்க்கலாம்: ஐ.நா. அறிக்கை வெளியீடு

படம்
புதுடெல்லி: உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை கடைகளில் 13 கோடி டன் என உலக அளவில் 105 கோடி டன் உணவு விரயம் செய்யப்படுகிறது. வீடுகளில் ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.1,800 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமான வரித் துறை அதிகாரிகள் அனுப்பினர் https://ift.tt/SJ7E2Hi

படம்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறி, வட்டி மற்றும் அபராதத்துடன் ரூ.1,823 கோடி வரி நிலுவை செலுத்துமாறு அக்கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த 2017-18 முதல் 2020-21 வரையிலான 4 ஆண்டுகளுக்கான வரி கணக்கை காங்கிரஸ் முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அக்கட்சிகளை நிதி ரீதியாக முடக்குவதே பாஜகவின் உத்தி. காங்கிரஸை முடக்கவரி பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது பாஜக” என்று குற்றம்சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு https://ift.tt/uRLcn3e

படம்
புதுடெல்லி: கிராமப்புறங்களில் 100 நாள் வேலையை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 4 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கிராமங்களில் வசிக்கும் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்கு ஓர் ஆண்டில் 100 நாள்வேலைக்கு உறுதி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் சாலை அமைத்தல், கால்வாய், குளம், கிணறு வெட்டுதல், தூர்வாருதல் போன்ற பணிகளில் இந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணம் https://ift.tt/hmxV495

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் காலமானார்: பிரதமர் மோடி, மம்தா இரங்கல் https://ift.tt/zxXT1Ov

படம்
கொல்கத்தா: ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் (94) கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். சுவாமி ஸ்மரணானந்தா 1929-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பிறந்தார். 1952-ல் தன்னுடைய 22-வது வயதில் ராமகிருஷ்ணா மடத்தில் இணைந்தார். நீண்ட காலமாக ஆன்மிக சேவையாற்றி வந்த அவர், 2017-ம் ஆண்டு ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷனின் 16-வது தலைவராக பொறுப்பேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை’ - நிர்மலா சீதாராமன் https://ift.tt/BUFgArk

படம்
புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் அது குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து போட்டியிட எனக்கு பரிந்துரை வந்தது. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இதனை முன்மொழிந்தார். இருந்தும் நான் போட்டியிடவில்லை என சொன்னேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

படம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பாலம் சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மோதியதில் நேற்று இடிந்து விழுந்தது. நீருக்குள் மூழ்கியவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பால்டிமோர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள பாலம் சரக்கு கப்பல் மோதி இடிந்து விழுந்த சம்பவம் நள்ளிரவில் தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கப்பல் மோதியதில் பாலத்தின் ஒவ்வொரு பகுதியாக அடுத்தடுத்து இடிந்து விழும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடற்படை தளத்தை தாக்க முயன்ற 4 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

படம்
புதுடெல்லி: பாகிஸ்தானின் 2-வது பெரிய கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்த முயன்ற 4 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் துர்பத் நகரில் பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளம் அமைந்துள்ளது. அங்கு சீனாவின் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 4 மர்ம நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட கடற்படை வீரர்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெப்ப அலையில் இருந்து வாக்காளர்களை பாதுகாக்க நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுரை https://ift.tt/Zizrlwc

படம்
புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களை வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வரவிருக்கும் கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாமில் பாஜக, காங். வேட்பாளர் நேருக்கு நேர் சந்திப்பு https://ift.tt/TvybCFW

படம்
திஸ்பூர்: அசாம் மாநில மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர். தேர்தலில் வெற்றி பெற பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அசாமில் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் அசாம்கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளன. பாஜக 11, அசாம்கண பரிஷத் 2, ஐக்கிய மக்கள் கட்சி ஓரிடத்தில் போட்டியிடுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அனைத்து பெண்களும் கண்ணியத்திற்குரியவர்கள்’ - காங்கிரஸின் சுப்ரியா கருத்துக்கு கங்கனா பதிலடி https://ift.tt/ymZL178

படம்
மண்டி: சமூக வலைதளத்தில் தன்னை மோசமாக விமர்சித்து பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் சுப்ரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகையும், பாஜக மண்டி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத். அது குறித்து விரிவாக பார்ப்போம். “அன்புள்ள சுப்ரியா அவர்களுக்கு. கடந்த 20 ஆண்டு காலமாக ஒரு நடிகையாக பல்வேறு பாத்திரங்களில் நான் நடித்துள்ளேன். அப்பாவி பெண்ணாக, கடவுளாக, பேயாக, தலைவியாக என அந்த பாத்திரங்கள் அமைந்துள்ளன. நம் மகள்கள் குறித்த தவறான கருத்துகளில் இருந்து நாம் அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களின் உடல் உறுப்புகளை குறித்த ஆர்வத்தை கடந்து நாம் வளர வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இண்டியா கூட்டணி மார்ச் 31-ல் போராட்டம் https://ift.tt/rIwPt6g

படம்
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் வரும் 31-ம்தேதி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2021-22-ம் ஆண்டில் மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்பவர்கள் 12 சதவீதமும், சில்லறை விற்பனையாளர்கள் 185 சதவீதமும் லாபம் ஈட்டும் வகையில் மதுபான கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சிக்குரூ.100 கோடி லஞ்சம் கிடைத்ததாகவும், இந்த ஊழலில் மூளையாக செயல்பட்டது டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் என்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அப்ரூவர்’ ஆக சுகேஷ் சந்திரசேகர், சிக்கலில் கேஜ்ரிவால்... சுனிதாவுக்கு மாறுகிறதா ‘பவர்’? https://ift.tt/LCSyoAz

படம்
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ,அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். வரும் 28-ம் தேதி வரை அவரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி விவகாரம் இனி? - ஒரு விரைவுப் பார்வை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு https://ift.tt/daAYhvS

படம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் போட்டி - தமிழக காங். 7 வேட்பாளர்கள் அறிவிப்பு https://ift.tt/OwXkDfg

படம்
புதுடெல்லி: மக்களவை தேர்தல் 2024க்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள இந்த 4வது பட்டியலில், மொத்தம் 45 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேஜ்ரிவால் கைது விவகாரம்: ஜெர்மனியின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் https://ift.tt/Xb9dZl8

படம்
புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் , காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு ஏற்பு https://ift.tt/8hlma5M

படம்
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோருக்கு எதிரான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. வழக்கு விசாரணை வரும் மே மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறேன்’ - பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்

படம்
லண்டன்: பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 42 வயதான அவர், பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி ஆவார். ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது https://ift.tt/5E4weAH

படம்
புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பயந்துபோன சர்வாதிகாரி மாண்ட ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்’ - ராகுல் காந்தி @ கேஜ்ரிவால் கைது https://ift.tt/q8GzFiy

படம்
புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. இந்நிலையில், இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. “பயந்துபோன சர்வாதிகாரி மாண்ட ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். அனைத்து விசாரணை அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாயம் பெறுவது மற்றும் முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்றவை போதாதென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்வதையும் வழக்கத்துக்குள் கொண்டு வருகிறார்கள். இதற்கு இண்டியா தக்க பதிலடி கொடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேஜ்ரிவால் கைதுக்கு மக்கள் வரவேற்பு!’ - டெல்லி பாஜக தலைவர் கருத்து https://ift.tt/r6ZuMxm

படம்
புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், மக்கள் இதனை வரவேற்பதாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார். “மதுபான கொள்கை தொடர்பான வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் கேஜ்ரிவால் இருந்தார். இந்த சூழலில் அவரை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளது உண்மைக்கு கிடைத்துள்ள வெற்றி. இளைஞர்களை மது பழக்கத்துக்கு தள்ள முயன்ற கேஜ்ரிவால் அரசு எதிர்கொண்டுள்ள வீழ்ச்சி இது. அவர் செய்த பாவத்துக்கான பலனை நிச்சயம் அனுபவிக்க வேண்டும். மக்கள் இதனை வரவேற்பார்கள்” என வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் தொடர்வார்’ - ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு https://ift.tt/Yh3dubg

படம்
புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி முதல்வராக அவரே தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மியின் அதிஷி தெரிவித்தது. “நாங்கள் முன்பு சொன்னது போல டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்வார் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் சிறையில் இருந்தபடி முதல்வராக செயல்படுவார். அவர் தனது பணியை தொடர்வதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. அவர் குற்றவாளி அல்ல” என அவர் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் https://ift.tt/zvP4nH7

படம்
புதுடெல்லி: மியான்மரில் ராணுவ நடவடிக்கைக்குப் பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் இந்தியாவின் ஜம்மு, உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் குடியேறினர். அவர்களை இனம் கண்டு மியான்மர் திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அத்துடன், சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்தியாவில் முகாம்களில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்கள் அகதிகளாக கருதப்பட வேண்டும் என்று பிரியாளிசர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த ஆவணத்தில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர், கூட்டாளி அசாமில் கைது https://ift.tt/oyMIe17

படம்
துப்ரி: அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநில காவல் துறையின் சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த இருவர் சர்வதேச நாடுகளின் எல்லையை கடந்து அசாமில் ஊடுருவி உள்ளதாக அந்த மாநில காவல் துறைக்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் துப்ரியில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அதன் மூலம் புதன்கிழமை அன்று ஹரிஸ் ஃபருக்கி என்கிற ஹரிஸ் அஜ்மல் ஃபருக்கி மற்றும் அனுராக் சிங் என்கிற ரெஹானை கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவின் பாலக்காட்டில் பிரதமர் மோடி வாகன பேரணி: பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் https://ift.tt/zJI1Ua3

படம்
பாலக்காடு: மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவின் பாலக்காட்டில், பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் சென்று பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். கேரளாவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 3-வது இடத்தை பிடித்தாலும் 21 சதவீத வாக்குகளை பெற்றது. இந்நிலையில் கேரளாவின் பாலக்காடு தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ண குமார் இந்த முறையும் போட்டியிடுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம்: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் https://ift.tt/ZjSNkm2

படம்
சென்னை: இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 20) நிறைவு பெறுகிறது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. செய்முறை விளக்க பயிற்சி: இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்க பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி https://ift.tt/58K7ZHJ

படம்
சேலம்: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகள் மிக முக்கியமானது. அதேபோல, ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகும் காலமும் அதுதான் என்று சேலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூகுள் மேப்பை நம்பி வர வேண்டாம்: சாலையோரம் பேனர் வைத்த குடகு கிராம மக்கள் https://ift.tt/FGfcZb5

படம்
பெங்களூரு: மேப் விவரம் தவறானது என்று கர்நாடகாவின் குடகு பகுதி மக்கள் சாலையோரம் பேனர் வைத்துள்ளனர். கர்நாடகாவின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் குடகு மலைப் பகுதி அமைந்துள்ளது. இது, ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. குடகு மலைப் பகுதியின் மடிகேரி, விராஜ்பேட்டையில் ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்' ஓய்வு விடுதிகள் செயல்படுகின்றன. இயற்கை எழிலை ரசிக்க விரும்பும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடகு மலைப் பகுதியில் அமைந்துள்ள ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்களுக்கு' வருகின்றனர். புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் கூகுள் மேப் உதவியுடன் குடகுமலைப் பகுதியில் பயணம் மேற்கொள்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பணவீக்கம் அதிகரிப்பதால் 22% வட்டி விகிதம் தொடரும்: பாகிஸ்தான் மத்திய வங்கி அறிவிப்பு

படம்
புதுடெல்லி: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 22 சதவீதமாகவே தொடரும் என அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பணவீக்க விகிதம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 32.89% என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, பாகிஸ்தான் மத்தியவங்கி ஆறாவது முறையாக வட்டிவிகிதத்தை 22% என்ற அளவிலேயே நிலைநிறுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவப் படையில் 6ஜி, ஏஐ தொழில்நுட்ப பிரிவு தொடக்கம் https://ift.tt/whjkmTp

படம்
புதுடெல்லி: பிற துறைகளைப் போன்று போர்க்களத்திலும் தொழில்நுட்ப மாற்றம் பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக தகவல் தொடர்புத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி யுத்த களத்தில் எதிரிகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், எதிரிப்படையை துல்லியமாகத் தாக்கவும் பெரிதும் உதவுகிறது. இது குறித்து ராணுவப் தொழில்நுட்ப பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய ராணுவத்தில் கம்பி மற்றும்கம்பியில்லா தொழில்நுட்ப முறைகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்ல ‘ஸ்டீக்’ (STEAG) எனப்படும் சமிக்ஞை தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தகவமைப்பு குழு எனும் புதிய தொழில்நுட்பப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ராஜினாமா: தேர்தலில் போட்டியிடுகிறார் https://ift.tt/4KPkYlQ

படம்
ஹைதராபாத்: ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 8-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார். கடந்த 2021-ல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக ஆட்சி அமைந்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்: ஆந்திராவில் பிரதமர் மோடி உறுதி https://ift.tt/jrGWkR0

படம்
சிலகலூரிபேட்டா: மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி இருந்தால், மாநிலத்தின் வளர்ச்சி நன்கு அமையும் என்று ஆந்திராவில் நடந்த தேர்தல்பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனாகட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது பிரதமர் மோடி தெலுங்கில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 411 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: புதிய கருத்துக் கணிப்பில் தகவல் https://ift.tt/z9TVDRt

படம்
புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக 350 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இண்டியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தொடர்பாக ‘நியூஸ் 18’ ஊடகம் சார்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு 77 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். இண்டியா கூட்டணி 2 தொகுதிகள், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெறும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘மோடி வெற்றி பெற வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே காரணம்’ - ராகுல் பேச்சு @ மும்பை நிகழ்வு https://ift.tt/85MZq0F

படம்
மும்பை: பிரதமர் மோடியின் வெற்றிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே காரணம் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனை மும்பையில் நடைபெற்ற ஒற்றுமை நீதி நடைபயண நிறைவு விழாவில் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு இண்டியா கூட்டணியன் அங்கம் வகிக்கும் பல்வேறு கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது.. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பாஜகவை விட இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் இல்லை’ - மும்பையில் ஸ்டாலின் பேச்சு https://ift.tt/cWev13Y

படம்
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் பாஜகதான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயண நிறைவு விழா மற்றும் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘வளர்ந்த இந்தியா’ இலக்கை எட்ட உங்கள் ஆதரவு தேவை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் https://ift.tt/I03ed9c

படம்
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது குடும்ப உறுப்பினர்களே, நம் கூட்டணி பத்தாண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உங்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமே மத்திய அரசின் சாதனை. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டதற்கான பலன்தான் இந்த மாற்றம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தமிழகம், புதுவையில் ஏப்.19-ல் வாக்குப்பதிவு https://ift.tt/RKLXdu6

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நான் 2047-க்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்” - பிரதமர் மோடி https://ift.tt/f7YKkTh

படம்
புதுடெல்லி: தான் ஏற்கெனவே 2047-ஆம் ஆண்டுக்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும், இந்தியா அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடியிடம், “2029 மக்களவை தேர்தலுக்கும் இப்போதே தயாராகி விட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர், “நீங்கள் 2029-ஆம் ஆண்டிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் ஏற்கெனவே 2047-ஆம் ஆண்டுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் பத்திர விவரங்களை முழுமையாக வழங்காதது ஏன்? - பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் https://ift.tt/n2CIRDf

படம்
புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தேர்தல் பத்திர விவரங்கள் அனைத்தையும் வெளியிட உத்தரவிட்டும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏன் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கவில்லை. தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார்? எந்த தேதியில் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் குறிப்பிட்ட தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொண்டது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட மிக தெளிவான உத்தரவை பிறப்பித்திருந்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது: டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் https://ift.tt/5DvJEn6

படம்
ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா கைது செய்யப்பட்டார். தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனாலும், அவர் கைது செய்யப்படாததால், சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் ரகசியஉடன்பாடு இருப்பதாக காங்கிரஸார் குற்றம்சாட்டி வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு 32 கட்சி ஆதரவு: குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல் https://ift.tt/NEBerkM

படம்
புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த 18,626 பக்க அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் குழு சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பாஜக, அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய அரசமைப்பு சட்டத்தின்கீழ் முதல் பொதுத் தேர்தல் 1952-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அது முதல் 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கிடையே, ஆட்சிக் கவிழ்ப்பு உள்ளிட்ட காரணங்களால் சில மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா https://ift.tt/oMyISNr

படம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் நெற்றிப் பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் வியாழக்கிழமை அன்று கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் https://ift.tt/yRZNiqA

படம்
புதுடெல்லி: கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019 முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த சூழலில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் அவர் நிர்வாக இயக்குனராக உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை https://ift.tt/YqwGrXm

படம்
புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த 11-ம் தேதி அமலுக்கு வந்தது. இதனிடையே, சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் அதன் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து தஞ்சமடைந்த அந்நாட்டு சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக கருதப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘மோடிதான் மீண்டும் பிரதமர்’ - அமெரிக்க எம்.பி. நம்பிக்கை

படம்
புதுடெல்லி: இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதியும், மக்கள் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினருமான ரிச்சர்ட் டீன் மெக்கார்மிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்திலிருந்து மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு எம்.பி.யாக கடந்த 2023-ல்தேர்வு செய்யப்பட்டவர் ரிச்சர்ட் மெக்கார்மிக். குடியரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வுசெய்யப்படுவார் என்று நேற்று ரிச்சர்ட் மெக்கார்மிக் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் https://ift.tt/hEkF5aw

படம்
புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி நேற்றுதாக்கல் செய்தது. அதில், ‘கடந்த2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி நேற்று முன்தினம் சமர்ப்பித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பித்தது எஸ்பிஐ https://ift.tt/AhH9zWy

படம்
புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி நேற்று சமர்ப்பித்தது. இந்தவிவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வரும்15-ம் தேதிக்குள் பொதுமக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு கடந்த 2018 ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெற தேவையில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்