இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீதிமன்ற உத்தரவை மதிக்காத தொழிலாளர்கள்: செங்கல் சூளையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண் உரிமையாளர் https://ift.tt/HtfgVSx

படம்
திருவனந்தபுரம்: நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செங்கல் சூளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மதிக்காததால் தான் நடத்தி வந்த செங்கல் சூளையை மூடும் நிலைமைக்கு பெண் உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் திருபுரம் அருகிலுள்ள பழையகடா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பகுமாரி (57). இவர் தனது கணவர் தங்கப்பனுடன் சேர்ந்து பராசாலா பகுதியில் செங்கல் சூளையை நடத்தி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தங்கப்பன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமருடன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பேச்சு https://ift.tt/ulacseB

படம்
புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு ஒரே நாணயம், ஒரே விசா நடைமுறையை பின்பற்றுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக உர்சுலா வோன் டெர் லியென் பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹெலிகாப்டரில் இருந்து போர்க்கப்பலை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி https://ift.tt/5NnsGHD

படம்
ஹெலிகாப்டரில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பலை தகர்க்கும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்), டிஆர்டிஓ மற்றும் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தன. கடற்படை பயன்பாட்டுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்) டிஆர்டிஓ தயாரித்தது. சுமார் 50 கி.மீ தூரத்துக்குள் உள்ள இலக்கை, இந்த ஏவுகணை மூலம் துல்லியமாக தகர்க்கமுடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்டில் கடும் பனிச்சரிவில் சிக்கிய 25 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் https://ift.tt/IDbRXmc

படம்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கிய 57 தொழிலாளர்களில் 32 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் அதில் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன. பனிச் சரிவில் சிக்கிய 57 பேரில் 32 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் 25 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒற்றுமையின் மகா கும்பமேளா நிறைவடைந்தது: பிரதமர் நரேந்திர மோடி https://ift.tt/uyQ5qAn

படம்
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது இணைய பக்கத்தில் நேற்று வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையைவிட இருமடங்கு அதிக மக்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். பிரயாக்ராஜுக்கு நேரில் வர முடியாதவர்கள் உணர்வுபூர்வமாக இணைந்திருந்தனர். 140 கோடி இந்தியர்களும் மகா கும்பமேளாவை கொண்டாடினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2-ம் கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் தயார்

படம்
கான் யூனிஸ்: இஸ்ரேலுடன் அடுத்த கட்ட சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் ஆகியார் விடுவிக்கப்பட்டு வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை: பஞ்சாபில் 5 அமைச்சர்கள் குழு அமைப்பு https://ift.tt/z4qpDav

படம்
பஞ்சாபில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கம் குறித்து பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராக காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணி: பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் ரஷ்யா செல்கிறார் https://ift.tt/U8eqEXY

படம்
புதுடெல்லி: ரஷ்யாவின் 80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணியில் விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி வரும் மே மாதம் ரஷ்யா செல்ல திட்டமிட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனியின் நாஜி படைகள் இடையே கடந்த 1941-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இடையே போர் நடைபெற்றது. இது ரஷ்யாவில் ‘தி கிரேட் பேட்டிரியாட்டிக் வார்’ என அழைக்கப்படுகிறது. இதன் 80-ம் ஆண்டு வெற்றி தினத்தை மே 9-ம் தேதி,தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பமேளா சென்று திரும்பும் வழியில் ஜேஎம்எம் எம்.பி. மகுவா விபத்தில் காயம் https://ift.tt/DmX7NpP

படம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மாநிலங்களவை எம்.பி. மகுவா மாஜி உள்ளிட்ட 4 பேர் கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சாலை விபத்தில் காயம் அடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜேஎம்எம் எம்.பி. மகுவா மாஜி தனது மகன், மருமகளுடன் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளாவுக்கு சென்றார். திரிவேணி சங்கமத்தில் இவர்கள் புனித நீராடிய பிறகு நேற்று முன்தினம் இரவு ராஞ்சிக்கு புறப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம்: கேரள காங்கிரஸ் கட்சிக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா கண்டனம் https://ift.tt/bcT6Can

படம்
போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேரள காங்கிரஸ் கட்சிக்கு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகையான பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். இந்நிலையில், தனது சமூக வலைதள கணக்கை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடனை தள்ளுபடி பெற்றுள்ளதாக நடிகை பிரீத்தி ஜிந்தா மீது கேரள காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நியூ இண்டியா கோ ஆப்பரேட்டிவ் வங்கியில், நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு கணக்கு இருந்தது. அந்த வங்கி மூலம் 10 ஆண்டுக்கு முன்பு அவர் ரூ.18 கோடி கடன் பெற்றார். பின்னர், எந்தவித பாக்கியும் இல்லாமல் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்திவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீக்கியர் கலவர வழக்கில் காங். மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் https://ift.tt/Ddrq2kw

படம்
புதுடெல்லி: சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமாருக்கு (79) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. டெல்லியில் மட்டும் 2,800 பேர் உயிரிழந்தனர். டெல்லி உட்பட நாடு முழுவதும் 3,350 பேர் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாளில் 3 மாநில நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி https://ift.tt/pFPCEOg

படம்
புதுடெல்லி: டெல்லி தேர்தலுக்கு பிறகு அரசியல் நிகழ்ச்சிகள் மந்தமாக இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவ்வாறு இல்லை. பிரதமர் மோடி நேற்று முன்தினம் திங்கட்கிழமை 3 மாநிலங்களில் பயணம் மேற்கொண்டார். இதையொட்டி அவர் ம.பி.யில் காலை உணவையும் பிஹாரில் மதிய உணவையும் அசாமில் இரவு உணவையும் எடுத்துக்கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐ.நா. தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு: உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா புறக்கணிப்பு

படம்
நியூயார்க்: ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானமும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இடதுசாரி கொள்கையை நிராகரித்துவிட்டனர்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து

படம்
பெர்லின்: ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கடந்த 23-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 630 இடங்கள் உள்ளன. இதில் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் ஆப் ஜெர்மனி (சிடியு) மற்றும் கிறிஸ்டியன் சோசியல் யூனியன் இன் பவாரியா (சிஎஸ்யு) கட்சிகள் அடங்கிய வலதுசாரி கூட்டணி 208 அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பிரெட்ரிக் மெர்ஸ் (69) அடுத்த பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடல் பருமனை குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: நடிகர் மாதவன் உள்ளிட்ட 10 பேருக்கு பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/1GQIDad

படம்
புதுடெல்லி: உடல் பருமனை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கினார். இதுதொடர்பாக நடிகர்கள் மாதவன், மோகன் லால், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட 10 பேருக்கு அவர் சவால் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 119-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வானொலியில் ஒலிபரப்பானது. அப்போது உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பிரதமரின் பிஹார் வருகை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்; ஆனால்…” - மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் https://ift.tt/TV1GYNH

படம்
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி பிஹார் மாநிலத்துக்கு தொடர்ச்சியாக வருகை தருவது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இதற்கு முன்பும் அவர் பல்வேறு முறை அவர் இங்கு வந்து சென்றதை அறியாமல் அவர்கள் பேசுகின்றனர் என மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் திங்கள்கிழமை (பிப்.24) அன்று, பிரதமர் மோடி பிஹார் மாநிலத்துக்கு தொடர்ச்சியாக வந்து செல்வது குறித்து பேசியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விண்வெளியில் சதம் அடித்து இந்தியா சாதனை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/rcHYKRJ

படம்
விண்வெளியில் பாரதம் 100-வது சதம் அடித்திருக்கிறது. சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரலின் 119-வது நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கிரிக்கெட்டில் சதம் அடிக்கும்போது ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சியை நாம் அறிவோம். அதைவிட பெருமகிழ்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரோவின் 100-வது ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இதன்மூலம் விண்வெளியில் பாரதம் சதம் அடித்திருக்கிறது. நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள் என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 460 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம்: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார் https://ift.tt/GDz5C1M

படம்
நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார். பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றது இந்திய கலாச்சாரத்தின் பெருமையை பிரதிபலிக்கிறது

படம்
அமெரிக்காவின் உயரிய தேசிய புலனாய்வு அமைப்பான " எப்பிஐ"-யின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் படேல் (44) பகவத் கீதை மீது கைவைத்து சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் ஏற்றது இந்திய கலாச்சாரத்தை பெருமையை பிரதிபலிப்பதாக உள்ளது என அவரின் மாமாவான கிருஷ்ணகாந்த் படேல் பெருமிதம் தெரிவித்துள்ளார். பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த காஷ் படேல் நியூயார்க்கில் பிறந்திருந்தாலும் அவரது பூர்விகம் குஜராத் மாநிலம் வதேராவைச் சேர்ந்தது. இதுகுறித்து கிருஷ்ணகாந்த் படேல் கூறும்போது: வெளிநாட்டில் இந்திய கலாச்சாரம் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதற்கு மருமகன் காஷ் படேலின் பதவிப்பிரமாணம் நிகழ்கால சான்றாக அமைந்துள்ளது. எப்பிஐ இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் பகவத் கீதையின் மீது கைவைத்து சத்தியம் செய்து தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டுள்ளார். இது, அவர் இந்திய கலாச்சாரத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இது, மிகப் பெரிய விஷயம். இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் இந்திய கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் கடைபிடித்து வெளிநாட்டிலும் அதனை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். ...

மொரீஷியஸ் தேசிய நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

படம்
போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான மொரீஷியஸ், கடந்த 1968-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய நாளாக மொரீஷியஸ் கொண்டாடி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலவச பேருந்தால் தினமும் ரூ.3 கோடி இழப்பு: மகாராஷ்டிர போக்குவரத்து அமைச்சர் பேச்சு https://ift.tt/XNzQbUt

படம்
மும்பை: மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகையால் ஒவ்வொரு நாளும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படுவதாக மாநில போக்குவரத்து அமைச்சரக் பிரதாப் சர்நாயக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறியதாவது: அரசுப் பேருந்துகளில் நமது சகோதரிகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதுபோல் மூத்த குடிமக்களுக்கும் பல ஆண்டுகளாக சலுகை வழங்கப்படுகிறது. இதனால் மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு ஒவ்வொரு நாளும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹமாஸ் படையினருக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்ற இஸ்ரேலிய பிணைக் கைதி!

படம்
டெல் அவிவ்: காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மேலும் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாத படையினர் விடுவித்தனர். அப்போது பிணைக் கைதி ஒருவர் ஹமாஸ் படையினறின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்து வருகின்றனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: அட்டாரி-வாகா வழியாக தாயகம் திரும்பினர் https://ift.tt/YO9trSz

படம்
அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டில் சிறையில் இருந்த 22 இந்திய மீனவர்கள், சனிக்கிழமை (பிப்.22) அட்டாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர். பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்த காரணத்துக்காக அந்த நாட்டு பாதுகாப்பு படை பிரிவினர் இந்தியர்கள் 22 பேரை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கைது செய்தது. இவர்கள் அனைவரும் குஜராத் (18), உத்தர பிரதேசம் (1) மற்றும் டையூ (3) ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் நிழல் உலக தாதாவின் மனைவி டெல்லியில் கைது https://ift.tt/26QiJUR

படம்
ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் நிழல் உலக தாதாவின் மனைவி கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்தவர் ஹஷிம் பாபா. நிழல் உலக தாதாவான இவர் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவர் மீது போலீஸில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரது மனைவி ஸோயா கான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“என்னை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” - ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை! https://ift.tt/QolVnSs

படம்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸுக்கும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்படும் நிலையில் தன்னை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஷிண்டே கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: “நான் ஒரு சாதாரண கட்சி தொண்டன். ஆனால் நான் பால் தாக்கரேவின் விசுவாசியும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். ​​நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நில மோசடி வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா போலீஸார் தகவல் https://ift.tt/0ix1bPT

படம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் சித்தராமையாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதால், இவ்வழக்கை விசாரிக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாநதி ஆற்றில் 16 அணைகளை கட்ட ஒடிசா முதல்வர் திட்டம் https://ift.tt/70eHgFj

படம்
மகாநதி ஆற்றில் 16 அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் ரானேந்திரா பிரதாப் ஸ்வைன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாநதியின் மேல்நிலை நீர்பிடிப்புப் பகுதியில் தண்ணீரை திட்டமிடாமல் அதிகமாக பயன்படுத்துவதால் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் மாநிலங்களுக்கு அருகே அமைந்துள்ள ஹிராகுட் அணைப் பகுதியில் கீழ்நிலை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவு: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனி உறைவு 150 மீட்டர் குறைந்தது

படம்
கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவு காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனி உறைவு எல்லையின் அளவு 150 மீட்டர் குறைந்திருத்தது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்க்டிக், அண்டார்டிகா துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதாக செய்திகள் வெளியாயின. இதே நிலை கடல் மட்டத்தில் இருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலும் காணப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி நேபாளம் மற்றும் திபெத் இடையே அமைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நோன்பு நாட்களில் முஸ்லிம் ஊழியர்கள் மாலை 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்: தெலங்கானா முதல்வர் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு https://ift.tt/Pm0jEd9

படம்
ரம்ஜான் நோன்பு நாட்களில் தெலங்கானா மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் முஸ்லிம்கள் ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4 மணிக்கே வீடுகளுக்கு செல்லாம் என தெலங்கானா அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு தரப்பில் நேற்று அம்மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். அதாவது, ரம்ஜான் நோன்பு வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இது மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நாட்களில் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் நோன்பு இருப்பதால், அரசு, தனியார், கார்பரேஷன் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம்கள் மாலை 5 மணிக்கு பதிலாக ஒருமணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4 மணிக்கே தொழுகை செய்ய வீட்டிற்கு செல்ல இந்த அரசு சிறப்பு அனுமதி வழங்குகிறது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil N...

டெல்லி துணை நிலை ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரேகா குப்தா! https://ift.tt/At7OKHa

படம்
புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்த ரேகா குப்தா ஆட்சியமைக்க உரிமை கோரினார். டெல்லியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். வியாழக்கிழமை (பிப்.20) முதல்வராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் வேலையின்மை 6.4% ஆக குறைவு https://ift.tt/6lMsE0d

படம்
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதமாக குறைந்துளளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது: நகர்ப்புற பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில் இ்ந்த விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. இருப்பினும், முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது டிசம்பரில் வேலையின்மை விகிதத்தில் எந்தவிதவித மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.4 சதவீதமாகவே நீடிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி, கத்தார் மன்னர் ஷேக் தமீம் சந்திப்பு: முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து https://ift.tt/fkPprzD

படம்
கத்தார் மன்னரும், நாட்டின் அதிபருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்பது வாடிக்கை. ஆனால் கத்தார் மன்னரை, பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றுள்ளார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய கத்தார் மன்னருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட கத்தார் மன்னரை ஆரத் தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று அழைத்துச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி! https://ift.tt/1vDufeV

படம்
ஜாம்நகர்: குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் கடந்த ஜன.16 அன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2023-ம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் தேர்தல் இது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாளை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? https://ift.tt/MSRJA82

படம்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனால் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு https://ift.tt/gayejop

படம்
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் கடந்த 1991-ம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டு தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி, பிஹார் மாநிலங்களில் நிலநடுக்கம்: வடமாநிலங்களில் மக்கள் பதற்றம் https://ift.tt/dfyXOv6

படம்
டெல்லியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4 அலகுகளாக ஆக பதிவானது. டெல்லியில் நேற்று காலை 5.36 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவுகோளில் 4.0 அலகுகளாக பதிவானதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் துர்காபாய் தேஷ்முக் கல்லூரி பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம் https://ift.tt/cOYsap1

படம்
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை வைத்து சிலர் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) நிதியை ஒதுக்க இயலாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, பாமக, தவாக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசுக்கு தர வேண்டிய கல்வி நிதியை தர மத்திய அரசு மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் 10 மேயர் பதவிகளையும் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி https://ift.tt/RNaSkc5

படம்
சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு கடந்த 11-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

112 இந்தியர்களுடன் பஞ்சாப் வந்தடைந்தது 3-வது அமெரிக்க விமானம்! https://ift.tt/YZPT4u0

படம்
அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் வந்த 3-வது விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. ஞாயிறு இரவு 10 மணியளவில் தரையிறங்கிய சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தில் பஞ்சாபை சேர்ந்தவர்கள் 31 பேர், ஹரியானாவைச் சேர்ந்த 44 பேர், குஜராத்தை சேர்ந்தவர்கள் 33 பேர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இருவர், இமாச்சல் மற்றும் உத்தராகண்டிலிருந்து தலா ஒருவர் என மொத்தம் 112 பேர் இருந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவலர், ஆசிரியர் உட்பட 3 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் https://ift.tt/ka09zof

படம்
ஜம்மு: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவலர், ஆசிரியர் உட்பட 3 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், சமீப காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மறுஆய்வு கூட்டம் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்: இது 2-வது பேட்ச் https://ift.tt/c9qi5lJ

படம்
அமிர்தசரஸ்: அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த விமானம் சனிக்கிழமை (பிப்.15) பின்னிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அந்த வகையில் கடந்த 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்​தில் நேற்று 104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் கை மற்றும் கால்கள் விலங்கிட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளா செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்: 15 பேர் காயம் https://ift.tt/rf1NGhA

படம்
புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு செல்ல தலைநகர் டெல்லியில் உள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.15) அன்று கூட்டம் அலைமோதிய காரணத்தால் சுமார் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாக 4 பெண்கள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழில் ‘வணக்கம்’ கூறி காசி தமிழ்ச் சங்கமம் 3.0-ஐ தொடங்கிவைத்த உ.பி முதல்வர் யோகி! https://ift.tt/7WtL5VX

படம்
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) இன்று மாலை துவங்கியது. இதை துவக்கி வைத்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘அனைவருக்கும் வணக்கம்’ எனத் தமிழில் தெரிவித்தார். வாரணானாசியின் கங்கை கரையிலுள்ள நமோ காட்டில் இன்று கேடிஎஸ் 3.0 நிகழ்ச்சி தொடங்கியது. துவக்கத்தில், தமிழகக் கலைஞர்களின் நாதஸ்வரம், மேளதாள மங்கள இசை முழங்கியது. இந்நிகழ்ச்சியை மின்சாரப் பொத்தான் அழுத்தி உ.பி முதல்வர் யோகி துவக்கி வைத்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு தொடர குடியரசு தலைவர் அனுமதி கோரி உள்துறை அமைச்சகம் கடிதம் https://ift.tt/ZdQtaAF

படம்
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு தொடர குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மனுவை அனுப்பியுள்ளது. 2017-ல் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. மேலும், சத்யேந்தர் ஜெயின் அமைச்சராக இருந்தபோது ரூ. 11.78 கோடிக்கு செயல்படாத நிறுவனங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ-யும் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆண்டுக்கு 1 லட்சம் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்தியா இலக்கு: தேசிய திறன் மேம்பாட்டு கழகம் தகவல் https://ift.tt/yKJOfcu

படம்
இன்னும் 2 ஆண்டுகளில் ஜப்பான், இஸ்ரேல், ஜெர்மனி உட்பட இதர வெளி நாடுகளில், ஆண்டுக்கு 1 லட்சம் பேரை திறன் சார்ந்த வேலைகளில் பணியமர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030-ம் ஆண்டு செயல் திட்டத்தை வெளியிட்டுள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (என்எஸ்டிசி) கூறியிருப்பதாவது: திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற என்எஸ்டிசி முயற்சிக்கிறது. இதற்காக திறன்மேம்பாட்டு மையங்கள் விரிபடுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் 50 எதிர்கால திறன் மையங்கள், 10 சர்வதேச அகாடமிகள் ஆகியவை தொடங்கப்படவுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு https://ift.tt/A2r6Bol

படம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து அமெரிக்க அதிபர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். உலகின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்படுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: காவல் துறை, சிஆர்பிஎஃப் படையினருடன் ஆளுநர் அவசர ஆலோசனை https://ift.tt/zSTV6Wo

படம்
புதுடெல்லி: மணிப்​பூரில் ஆளுநரின் பரிந்​துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்​படுத்தப்பட்டுள்​ளது. மாநிலம் முழுவதும் பாது​காப்பு பலப்​படுத்தப்பட்​டுள்​ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்​பூரில் பழங்​குடி அந்தஸ்து கோரும் மைதேயி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்​குடியின மக்கள் போர்க்​கொடி உயர்த்தினர். இதன்​காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குகி சமுதா​யங்​களுக்கு இடையே மோதல் ஏற்பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். 32 பேரை காணவில்லை. 5,000-க்​கும் மேற்​பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்​கப்​பட்டன. கோயில்​கள், தேவால​யங்கள் சேதப்​படுத்​தப்​பட்டன. சுமார் 65,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம் பெயர்ந்​தனர். இதில் பெரும்​பாலானோர் நிவாரண முகாம்​களி​லேயே வசிக்​கின்​றனர். மாநிலம் முழு​வதும் 11,000-க்​கும் மேற்​பட்ட வழக்​குகள் பதிவு செய்​யப்​பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணை...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

படம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து அமெரிக்க அதிபர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். உலகின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்படுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இமாச்சலில் சைவ உணவகத்தை தொடங்கும் கங்கனாவுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து https://ift.tt/aC9GPHN

படம்
காதலர் தினத்தையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுத்த சைவ உணவகத்தை இன்று திறக்கும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்துக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் கங்கனா ரனாவத். இவர் பாஜக எம்.பி.யாக உள்ளார். கடந்த காலங்களில் இவர் கூறும் கருத்துகள் காங்கிரஸ் கட்சியினரின் முக்கிய தலைவர்களை உடனடியாக ஆத்திரமூட்டும் வகையில் அமையும். இதற்காக அவரை பலமுறை காங்கிரஸ் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குழந்தை ராமர் சிலையை பாதுகாத்த தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் காலமானார் https://ift.tt/WyE6h52

படம்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசா​ரியாக இருந்​தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு கடந்த சில மாதங்​களாக உடல்​நலம் குன்றி இருந்​தது. லக்னோ சஞ்சய் காந்தி இன்ஸ்​டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1976-ம் ஆண்டு அயோத்தி சம்ஸ்​கிருத மகா வித்​யால​யா​வில் உதவி ஆசிரியராக சேர்ந்​தார். ராமரின் தீவிர பக்தரான சத்யேந்திர தாஸ், ராமர் கோயிலுக்கான கரசேவை​யிலும் பங்கேற்​றார். கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட போது உள்ளே வைக்​கப்​பட்​டு இருந்த குழந்தை ராமர் சிலைக்கு அருகில் இருந்​தார். சிலை சேதம் அடையாமல் தனது மடியில் வைத்து பத்திர​மாகப் பாது​காத்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்