இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருப்பூர் | சரக்கு வாகனம் மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு https://ift.tt/oYbCJ6h

படம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம்சவுடாம்பிகை நகரை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன் (19), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். காங்கயம் - திருப்பூர் சாலையில் நேற்று முன்தினம் இருசக்கரவாகனத்தில் அமிர்தவாசன் சென்றபோது, நீலக்காட்டுப்புதூர் பிரிவுஅருகே சாலையில் திரும்பியசரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே அமிர்தவாசன், உயிரிழந்தார். இதுகுறித்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவை | கடந்த ஓராண்டில் திருடுபோன ரூ.3.63 கோடி மதிப்பிலான நகை, பணம் மீட்பு https://ift.tt/liX8qrn

படம்
கோவை: கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைந்த, திருடுபோன செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமை வகித்து, மொத்தம் ரூ.24.95 லட்சம் மதிப்பிலான 146 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வண்ணாரப்பேட்டை நடைபாதை கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியதாக கவுன்சிலர் கணவர் கைது https://ift.tt/AFEn3bp

படம்
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நடைபாதை கடை வியாபாரிகளை மிரட்டி, மாமூல் வசூலித்ததாக கவுன்சிலரின் கணவரை தனிப்படை போலீஸார் விழுப்புரத்தில் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் 27 ஆண்டுகளாக பலர் நடைபாதை கடைகள் வைத்து துணி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன்(32), தினமும் தலா ஒரு கடைக்கு ரூ.200 வீதம் மாமூல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. சிலர் பயந்து, ஜெகதீசனுக்கு மாமூல் கொடுத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூரியன் முதல் சந்திரன் வரை பல திட்டங்களை செயல்படுத்தி 2023-ல் சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ https://ift.tt/gEYHFKB

படம்
புதுடெல்லி: ஆதித்யா, சந்திரயான்-3, ககன்யான்விண்கலங்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆர்எல்வி ராக்கெட்டை தரையிறக்குவது உட்பட அறிவியல் சோதனைகள் பலவற்றை இந்தாண்டு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ 2023-ம் ஆண்டில் அறிவியல் திட்டங்கள் பலவற்றை மேற்கொள்ளவுள்ளது. மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட ஆர்எல்வி ராக் கெட்டை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏரோனாடிக்கல் பரிசோதனை மையத்தில் இன்னும் சில மாதங்களில் இஸ்ரோ தரையிறக்கி பரிசோதிக்கவுள்ளது. சூரியனை பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆதித்யா என்ற விண்கலத்தையும் இஸ்ரோ இந்தாண்டு அனுப்பஉள்ளது. இது தவிர நிலவுக்குசந்திரயான்-3 விண்கலத்தையும் இஸ்ரோ அனுப்புகிறது. விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற் காக மேற்கொள்ளப்படும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா விண் கலத்தை இந்தாண்டின் இறுதியில் இஸ்ரோ அனுப்புகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தந்தை இறந்த போது பிரதமர் மோடி என்ன செய்தார்? - விஎச்பி தலைவர் திலீப் திரிவேதி நெகிழ்ச்சி https://ift.tt/b5mNxQE

படம்
புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். டெல்லியில் இருந்து வந்த பிரதமர் மோடி, வட்நகரில் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பணிக்கு திரும்பினார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாயார் இறந்த நிலையிலும், உடனடியாக பிரதமர் பணிக்கு திரும்பியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹீராபென் | பிரதமர் நரேந்திர மோடியை செதுக்கியவர் https://ift.tt/PWd9Qoh

படம்
காந்திநகர்: குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம், விஸ்நகரில் பிறந்த ஹீராபென் அவரது குடும்பத்தில் மூத்த பெண். அவரது 16-வது வயதிலேயே வட்நகரை சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியுடன் திருமணம் நடைபெற்றது. புகுந்த வீட்டிலும் அவர்தான் மூத்த மருமகள். இளம்வயது என்ற போதிலும்குடும்பத்தினரை அரவணைத்து செல்லும் பக்குவம் ஹீராபென்னுக்கு இருந்தது. காலை 4 மணிக்கே கணவர் தாமோதர்தாஸ் கடைக்கு சென்றுவிடுவார். அவருக்காக அதிகாலையிலேயே ஹீராபென் எழுந்துவிடுவார். தாய், தந்தையை பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்றளவும் அதிகாலையில் எழும் பழக்கத்தை பின்பற்றுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் கைது - சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை https://ift.tt/0j4iZDs

படம்
வேலூர் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்,அனுமதி பெற்ற அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. பின்னர் அவை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எளிமையானவர், அன்பானவர், இனிமையானவர் : அக்கம்பக்கத்தினர் உருக்கம் https://ift.tt/I9bm0fD

படம்
காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் ரேசான் பகுதியில் இளையமகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்தார். அப்பகுதியை சேர்ந்த கீர்த்திபென் என்பவர் கூறும்போது,”கடந்த 7 ஆண்டுகளாக ஹீராபென் இங்கு வசிக்கிறார். அவரை நாள்தோறும் சந்திப்போம். அவர் எளிமையாக வாழ்ந்தார். அனைவரிடமும் அன்பு செலுத்தினார். இந்த குடியிருப்பின் ராஜ மாதாவாக இருந்தார். எனது சொந்த தாயை இழந்தது போன்று உணர்கிறேன்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இங்கிலாந்து நபருக்கு 2 ஆண்டு சிறை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/eT80ZG5

படம்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற வழக்கில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் (47) என்பவரை, கியூ பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாபில் ஜாதி குறியீடு கொண்ட 56 பள்ளிகளுக்கு பெயர் மாற்றம் https://ift.tt/qaM8i2h

படம்
சண்டிகர் : பஞ்சாபில் ஜாதி குறியீடு கொண்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு அம்மாநில அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. பஞ்சாபில் ஜாதி அடிப்படையில் பெயர் கொண்ட பள்ளிகளின் பெயரை மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழந்த வழக்கில் திருப்பம் - கூட்டாளிகளுடன் சேர்ந்து உறவினரே கொன்றது அம்பலம் https://ift.tt/h4RQMLI

படம்
சென்னை : தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவராக இருந்த டி.மஸ்தானை, அவரது உறவினரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த மஸ்தான் (66),, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். 2005-ல் திமுகவில் இணைந்து, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளராக பணியாற்றினார். மருத்துவரான மஸ்தானின் மனைவி சிவபாக்கியமும் மருத்துவர். இவர்களது மகன் ஹாரிஸ் ஷாநவாஸ், மகள் ஹரிதா. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமரின் தாயார் 100-வது வயதில் காலமானார் - அரசு மரியாதை தவிர்ப்பு; எளிமையான இறுதிச் சடங்கு https://ift.tt/Axq8UT5

படம்
காந்திநகர் : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்று காலமானார். குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அரசு மரியாதை இல்லாமல், எளிமையான முறையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. 1923 ஜூன் 18-ம் தேதி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் பிறந்தவர் ஹீராபென். அருகில் உள்ள வட்நகரைச் சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியை சிறுவயதிலேயே திருமணம் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

''ஒரு போற்றத்தக்க நூற்றாண்டு, கடவுளின் காலடியை சேர்ந்தது'' - தாயாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உருக்கம் https://ift.tt/qJK9Mli

படம்
அகமதாபாத் : உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் வீட்டில் ஹீராபென் மோடி வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார் https://ift.tt/alCTxrm

படம்
குஜராத் : உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலாய் லாமாவை உளவுபார்த்த சீன பெண் உளவாளி பிடிபட்டார் https://ift.tt/nlj5ik6

படம்
பாட்னா : இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு வருவது வழக்கம். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அவர் கோயிலுக்கு வரவில்லை. தற்போது அவர் புத்த கயாவில் முகாமிட்டு மகாபோதி கோயிலில் வழிபாடுகளை நடத்தி வருகிறார். திபெத் சுதந்திர போராட்டத்தை தலாய் லாமா தூண்டி வருவதாக குற்றம் சாட்டி வரும் சீன அரசு, அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தற்போது புத்த கயாவில் தங்கியிருக்கும் தலாய் லாமாவை சீனாவை சேர்ந்தபெண் உளவாளி சோங் ஜியோலன் வேவு பார்ப்பதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக மாநில சிறையில் சாவர்க்கர் படம் திறப்பு https://ift.tt/ecM0Qi2

படம்
பெங்களூரு : கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு நிகழ்ச்சிகளிலும் இந்துத்துவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் வீர சவார்க்கரின் படம் இடம் பெறுகிறது. கடந்த 19-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸின் எதிர்ப்புக்கு மத்தியில் சவார்க்கரிடம் படம் திறக்கப்பட்டது. இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கரின் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. க‌ர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், வீர சாவர்க்கரின் புகைப்படத்தை திறந்துவைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க புதிய ‘ஆர்விஎம்’ இயந்திரம் அறிமுகம் - ஜன. 16-ம் தேதி செயல் விளக்கம் https://ift.tt/aTtNRqx

படம்
புதுடெல்லி : உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜபாளையம் | தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் சோதனை - லஞ்ச பணத்தோடு உதவியாளர் தப்பினார் https://ift.tt/Cxegdu7

படம்
ராஜபாளையம் : ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு உதவியாளர் தப்பி ஓடிய நிலையில் தொழிலாளர் நல ஆய்வாளர் முருகன்(57) மீது வழக்கு பதிவு செய்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆய்வாளராக இருப்பவர் முருகன்(57). அங்கு துப்புரவு பணியாளராக இருக்கும் மாயப்பெருமாள்(50) என்பவர் ஆய்வாளரின் உதவியாளர் போல் செயல்பட்டு வந்தார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எழும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி ஆய்வாளர் முருகன் ஆய்வு செய்துள்ளார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பணியாளர்களுக்கு ஊதியம் குறைத்து வழங்கியது தெரியவந்தது. ஆய்வு அறிக்கையில் மருத்துவமனை மேலாளரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு முருகன் அலுவலகம் வந்துவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்த 40 நாட்களுக்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் https://ift.tt/TMF1eOc

படம்
புதுடெல்லி : சீனாவில் கரோனா ஒமிக்ரான் வகை புதிய தொற்று அதிகரித்து வருகிறது. அண்டை நாடான இந்தியாவிலும் கரோனா தொற்றுஅதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்து வரும் 40 நாட்களும் முக்கியமான நாட்களாக இருக்கும் என்றும், கரோனா தடுப்புநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முன்பு கிழக்கு ஆசிய மண்டலத்தில் கரோனா அலை ஏற்பட்ட 30 முதல் 35 நாட்களில் இந்தியாவில் அதன் பாதிப்பு ஏற்பட்டு தீவிரமானதாக மாறியது. இந்தநிலையில் கடந்த 3 ஆண்டு களாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில் - சென்னை ஐசிஎப்.க்கு ரயில்வே உத்தரவு https://ift.tt/XZSFEyV

படம்
புதுடெல்லி : நாட்டில் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்த ரயில்களுக்கான பெட்டிகள் இருக்கை வசதியுடன் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 117 வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்க ஐசிஎப் ஆர்டர் பெற்றுள்ளது. இந்நிலையில், இவற்றில் 75 ரயில்கள் மட்டும் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்படும். மீதமுள்ள ரயில்களில் இரவு நேர பயணத்தின் போது தூங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே, இருக்கை வசதியுடன் 75 வந்தே பாரத் ரயில்களுடன் தயாரிப்பை நிறுத்திக் கொள்ளவும் மீதமுள்ளவற்றை தூங்கும் வசதியுடன் தயாரிக்கவும் ஐசிஎப் நிர்வாகத்துக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் 6 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை 30-ம் தேதி ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து 7-வது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily N...

காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின விழா https://ift.tt/M7a03i9

படம்
புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன தின நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: மக்களிடையே பாஜக பிரி வினையை உருவாக்கி, நாட்டில் வேலைவாய்ப்பின்மையை நீடிக்க வைக்கிறது. இந்தியா என்ற எண்ணத்தின் மீதே தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வெறுப்புணர்வை ஒவ்வொரு நாளும் பாஜக அதிகப்படுத்துகிறது. பணவீக்கம் மற்றம் வேலைவாய்ப்பின்மை ஆகியவை மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது. ஆனால், இது பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாரத் பயோடெக், பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு https://ift.tt/ndANIgq

படம்
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடெக்கிடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. அதிகபட்சமாக பயோலாஜிகல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ்களும் உள்ளன. பயோலாஜிகல் இ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் விக்ரம் பரத்கர் கூறுகையில், “நாங்கள் 30 கோடி கார்ப்வேக்ஸ் டோஸ்களைத் தயாரித்தோம். இவற்றில் 10 கோடி டோஸ்களை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு வழங்கினோம். மீதம் 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. ஆர்டர் கிடைத்ததும் உடனே அனுப்பும் வகையில் அவை தயார் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதி உயிரிழப்பு https://ift.tt/cRmlKfQ

படம்
ஜம்முவில் இருந்து காஷ்மீர் நோக்கிச் சென்ற ஒரு லாரியை சித்ரா பாலம் அருகில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் நேற்று சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். லாரி டிரைவர் தப்பியோடியதை தொடர்ந்து லாரியை சோதனையிட முயன்றனர். அப்போது லாரியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில்லாரி தீப்பற்றியது. தீயணைப்பு படை யினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர் லாரியில் கருகிய நிலையில் இருந்த 4 தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 7 ஏகே-47 ரக துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடக்கிறது தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஶ்ரீவில்லிபுத்தூர் | போக்ஸோ வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் - நீதிபதி முன்பு விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு https://ift.tt/IXpAksL

படம்
ஶ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் போக்ஸோ வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் நீதிபதி முன்பு விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (23). இவர் அப்பகுதியில் உள்ள மில்லில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பேசிய போது செல்வம் வீட்டில் வரதட்சனை கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 2019-ம் ஆண்டு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திரா | சந்திரபாபு நாயுடுவின் பேரணியில் கூட்ட நெரிசல் - கால்வாயில் விழுந்து 8 பேர் உயிரிழப்பு https://ift.tt/S8jJNg0

படம்
நெல்லூர் : ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சாலைப் பேரணியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, "இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?)" என்ற பிரச்சாரத்தை ஆந்திர மாநிலத்தில் யாத்திரை சென்றுவருகிறார். பேரணியின் ஒருபகுதியாக கந்துகூர் நகரில் ஒரு கூட்டத்தில் உரையாற்ற இருந்தார். அதன்படி, நாயுடுவின் கான்வாய் மாலையில் அப்பகுதியை அடைய தொடங்கியதும் நெரிசல் தொடங்கியது. அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்கள் சந்திரபாபு நாயுடுவை முண்டியடித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை - டெல்லி மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு https://ift.tt/XfAxsZE

படம்
புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த நாட்டில் தற்போது தினசரி பல லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. அடுத்த சில வாரங்களில் சீனாவில் நாள்தோறும் 3 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் என்றும் அடுத்த 3 மாதங்களில் 90 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்படுவர் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனம் - பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம் https://ift.tt/lT1Zsyr

படம்
திருமலை : வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை திருப்பதிதிருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், இணை நிர்வாக அதிகாரி சதா பார்கவி, திருப்பதி எஸ்பி. பரமேஸ்வர் ரெட்டி உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஓர் இடத்திலும் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். திருப்பதியில் மட்டும் 8 இடங்களில் 92 விநியோக கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 1-ம் தேதி மதியம் 2 மணியில் இருந்து சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து 4.50 லட்சம் டோக்கன்கள் பக்தர்களுக்கு ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும். திருமலையில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil N...

மைசூருவில் கார் விபத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் காயம்: இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தகவல் https://ift.tt/OetKuFS

படம்
பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் மைசூருவில் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த பிரஹலாத் மோடி உள்ளிட்ட 6 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி (66). தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அரண்மனையை பார்த்துவிட்டு பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்காவுக்கு மெர்சடிஸ் பென்ஸ் எஸ்யூவி காரில் சென்றார். கட்கலா என்ற இடத்தில் சென்றபோது கார் சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 12 பேருக்கு கரோனா https://ift.tt/cFBdwDJ

படம்
பெங்களூரு : சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 12 பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த 37 வயதான பயணி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக சீனாவுக்கு சென்று விட்டு பெங்களூரு வந்த போது கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிமுக தலைமை அலுவலகத்தில நிர்வாகியிடம் திருட்டு https://ift.tt/ueW9mil

படம்
சென்னை : ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளத் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தெற்கு ஒன்றியதுணைச் செயலாளர் உச்சிமாகாளி (41) என்பவரும் வந்திருந்தார். கூட்டம் 10 மணிக்குத் தொடங்கிய நிலையில், 11.30 மணியளவில் அவர் கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் யாரோ நெரிசலைப் பயன்படுத்தி திருடி உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூக்குவழியாக செலுத்தப்படும் கரோனா மருந்தின் சந்தை விலை ரூ.800 ஆக இருக்கும் - பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு https://ift.tt/VzsmLv7

படம்
ஹைதராபாத் : மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து, தனியார் சந்தையில் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படும் என்று பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மூக்குவழியாக செலுத்திக் கொள்ளும் பாரத் பயோடெக்கின் ‘இன்கோவாக்’ கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) இம்மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை | கஞ்சாவிற்கு பதில் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரிப்பு? - மருந்தாளுநர் உட்பட இருவர் கைது https://ift.tt/VwtxoMi

படம்
மதுரை : மதுரை மாநகரை கஞ்சா இல்லாத நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். போலீஸாரின் தீவிர நடவடிக்கையால் கஞ்சாவிற்கு பதில் அதிக போதை தரும் மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், காவல் துணை மோகன்ராஜ் மேற்பார்வையில் மதிச்சியம் காவல் ஆய்வாளர் சேதுமணிமாதவன் தலைமையிலான தனிப்படையினர் சந்தேகப்படும்படியான இளைஞர்களை கண்காணித்தனர். மதிச்சியம் பகுதியில் டிச., 26ம் தேதி ஆசாரித்தோப்பு சங்கு மகால் அருகே வைகை வடகரை ரோட்டில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரை போலீஸார் வழிமறித்தனர். வாகனத்தை நிறுத்திவிட்டு இருவர் தப்பிய நிலையில், ஒருவர் பிடிபட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு பயணிகளில் 0.5% பேருக்கு கரோனா https://ift.tt/XxV0mJK

படம்
புதுடெல்லி : சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. கடந்த 2 நாட்களில் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்துக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளில் 0.5 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஜெனஸ்டிரிங்ஸ் டயகனாஸ்டிக் மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

என்ஐஏ அதிகாரிகள் என கூறி ரூ.2.30 கோடி பறித்த வழக்கில் 2 பேர் கைது: ரூ.1.65 கோடி மீட்பு https://ift.tt/yUg9K36

படம்
சென்னை: என்ஐஏ அதிகாரிகள் என கூறி வியாபாரியிடம் ரூ.2.30 கோடி பறித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, மண்ணடி, மலையப்பன் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா (36). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இவரிடம் என்ஐஏ அதிகாரிகள் என கூறி கும்பல் ஒன்று ரூ.2.30 கோடியை பறித்துக் கொண்டு தப்பியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு https://ift.tt/x0KkcyP

படம்
பெங்களூரு : கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், பெலகாவியில் நேற்று கூறியதாவது: மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. அதேவேளையில் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப் பது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை மக்கள் தாமாக முன்வந்து பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி, திரையரங்கு, உணவகம், மதுபான விடுதி, கேளிக்கை விடுதி, உள் அரங்குகள் உட்பட அனைத்து பொது இடங்களிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 2 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே திரையரங்கு,உணவகம், கேளிக்கை விடுதிகளில் அனுமதிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத்தை அடுத்து 2-வதாக புலந்த்ஷெகர் சிறை உணவுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து https://ift.tt/UKvoTn7

படம்
புதுடெல்லி : உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெகர் சிறைக் கைதிகளுக்கு அளிக்கும் உணவுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் இந்த அந்தஸ்தை பெறும் 2-வது சிறை இதுவாகும். நாடு முழுவதிலும் உள்ள சிறைச் சாலைகளில் கைதிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம் உரிய அமைப்புகளால் இதுவரை சோதிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் சமீப காலமாக இப்பணியில் மத்திய அரசின் இந்தியஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஈடுபட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சி மாற எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 100 கோடி பேரம் - வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/gUzsuiw

படம்
ஹைதராபாத் : தெலங்கானா மாநில ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியிலிருந்து பாஜகவிற்கு மாற ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ. 100 கோடி வீதம் 4 எம்.எல்.ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்ற தெலங்கானா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய, நந்தகுமார், ராமச்சந்திரபாரதி மற்றும் சிம்ஹயாஜி ஆகியோர் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தலா ரூ. 100 கோடி வழங்குவதாக பேரம் பேசியதாக, பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏவான ரோஹித் ரெட்டி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா அரசு உத்தரவிட்டதின்பேரில் இவ்வழக்கை சிறப்பு விசாரணை குழு நடத்தி வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டியது பாஜக https://ift.tt/DNLblAC

படம்
அவுரங்காபாத் : மகாராஷ்டிரா மாநிலம் அவுரங் காபாத் பாஜக தலைவர் ஷிரிஷ் போரல்கர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை போற்றும் விதமாக பூமியிலிருந்து 392.01 ஓளிஆண்டு தூரத்தில் ஒரு நட்சத்திரத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரமானது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயரைச் சூட்டுவதற்காக சர்வதேச விண்வெளி அமைப்பில் பதிவு செய்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

''ராகுல் காந்தி ஒரு சூப்பர் ஹியூமன்'' - காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் https://ift.tt/bCJlIrs

படம்
புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. தலைவர் ராகுல் காந்தி நேற்று (டிச.26) காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் அவர் இந்த நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி அவர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக ராகுல் காந்தி தலைவர்களில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது நேற்றுமுன்தினம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படாததால் நேற்று காலை ராகுல் காந்தி தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கஞ்சா எரிப்பு: குண்டூர் போலீஸார் நடவடிக்கை https://ift.tt/MnxhySD

படம்
குண்டூர்: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 457 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கஞ்சாவை போலீஸார் எரித்து அழித்தனர். ஆந்திர மாநிலம், குண்டூர், விஜயவாடா, கோதாவரி மாவட்டங்களில் இந்த ஆண்டு மொத்தம் 457 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கஞ்சாவை, காக்கிநாடா மாவட்டம், கிர்லம்பூடி பகுதியில் போலீஸார் தீயிட்டு எரித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆவடியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு https://ift.tt/HkvspEt

படம்
ஆவடி: ஆவடி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கிய சிறுமி நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிழந்தோர் எண்ணிக்கை 2 ஆனது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ரோஜா (64). இவது மகன் சங்கர்ராஜ், மருமகள் அனிதா, பேத்தி கீர்த்தி (11), பேரன் கவுதம் ஆகியோருடன் வசித்துவந்தார். கடந்த 19-ம் தேதி இரவு, உணவு தயாரிப்பதற்காக வீட்டில் உள்ள எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது, சிலிண்டர் வெடித்து சிதறி வீட்டினுள் தீப்பற்றியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எஸ்-400 ஏவுகணைகள் ஜனவரியில் ஒப்படைப்பு https://ift.tt/JIKAFuc

படம்
புதுடெல்லி: ரஷ்யாவிலிருந்து அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளின் 3-வது தொகுப்பு 2023 ஜனவரி, பிப்ரவரியில் இந்தியா வந்தடையும். எஸ்-400 அதிநவீன ஏவுகணையாகும். இந்த ஏவுகணை 400கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கும். சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், 2018-ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் ரூ.35,000 கோடி மதிப்பில் 5 தொகுப்பு எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரையில் இரண்டு தொகுப்பு ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெரும்பாலானோருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதால் பி.எப்.7 வைரஸால் அதிக பாதிப்பு இருக்காது: மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையம் தகவல் https://ift.tt/Z8tQ4XR

படம்
புதுடெல்லி: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார். மத்திய அறிவியல், தொழில் துறையின் கீழ் சிஎஸ்ஐஆர் அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஹைதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும் (சிசிஎம்பி) ஒன்றாகும். இந்த ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

547 வீடுகளுக்கான முன்பதிவு தொடக்கம்: சொகுசு கப்பலில் குடியேறுகிறார் அமெரிக்க இளைஞர்

படம்
வாஷிங்டன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிஸ்டர் புன்டன், ஷானோன் லீ ஆகியோர் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு ஸ்டோரிலைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் எம்.வி.நேரேட்டிவ் என்ற சொகுசு கப்பலை தயாரித்து வருகிறது. குரேஷியா நாட்டில் வடிவமைக்கப்படும் சொகுசு கப்பல் 741 அடி நீளம், 98 அடி அகலம், 18 மாடிகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இதில் 547 வீடுகள் அமைக்கப்படுகின்றன. அதோடு பள்ளி, கல்லூரி, ஆன்லைன் கல்வி வசதி, மருத்துவமனை, வங்கி, சந்தை, திரையரங்கம், நூலகம், ஓட்டல், உடற்பயிற்சி கூடம், யோகா கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கப்பலில் உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் மிதக்கும் நகரமாக சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று: விரைவில் இருமடங்கு அதிகரிக்கும் என தகவல்

படம்
செஜியாங்: சீனாவின் செஜியாங் மாகாணத்தில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுவதாகவும் விரைவில் அது இருமடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானதோடு, மக்களும் உளவியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால் சீனாவின் தீவிர ஊரடங்குக்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதையடுத்து அந்நாட்டில் கரோனா தொற்றின் புதிய திரிபு மிக வேகமாக பரவி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால்...

திரிபுரா | மக்கள் நலனுக்காக நடமாடும் பொது சேவை மையம் அறிமுகம் https://ift.tt/NZexi1J

படம்
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் தொலை தூரங்களில் வசிக்கும் கடைகோடி பகுதியை சேர்ந்த மக்களும் பயனடையும் வகையில் நடமாடும் பொது சேவை மையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த மாநிலத்தில் இணையதள சேவை அறவே கிடைக்காத பகுதிகளுக்கு இந்த நடமாடும் பொது சேவை மையங்கள் பெரிதும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா தலைமையில் இந்த முயற்சி தொடங்கி வைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவிற்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் இணையலாம்: ராகுல் காந்தி எச்சரிக்கை https://ift.tt/0NXhCsA

படம்
புதுடெல்லி: சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடனான உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரையை அவர் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கினார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்த நடைவழி பயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது. வரும் ஜனவரி மாதம் மீண்டும் பயணம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலை மீட்பு: சோழர்கால கோயிலில் திருடியதாக 2 பேர் கைது https://ift.tt/FIZ3DYk

படம்
சென்னை: சோழர் கால கோயிலில் திருடப்பட்ட 300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலையை, சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்மீட்டு, 2 பேரைக் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஞ்சநேயர் சிலை ஒன்று திருடப்பட்டதாக அப்பகுதி காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு 2020-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 345 பவுன் தங்க நகைகள் பறிமுதல் https://ift.tt/y0nKgZv

படம்
மேல்மருவத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த இரு நபர்களை பிடித்து அவர்களது உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அவர்களது பையை சோதனை செய்த போது அதில் ஏராளமான நகைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சந்த் ஜெயின் மற்றும் அபிலேஷ் என்பதும் நகைப்பட்டறை வைத்துள்ளதும் பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட சுமார் 2,760-கிராம் எடையுள்ள 345 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எங்களுக்கு மணப்பெண்கள் எங்கே? - திருமணமாகாத ஆண்கள் மகாராஷ்டிராவில் பேரணி https://ift.tt/6cCQy7H

படம்
மும்பை : கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய உதவும் சோதனைக்கு தடை இருந்தும் அதை கடுமையாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவில் ஆண் - பெண் விகித்தாச்சாரம் குறைந்தால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. பல மாநிலங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 800 பெண்கள் என்றும் சில மாநிலங்களில் அதற்கும் குறைந்த நிலையிலும் உள்ளது. இதனால் திருமணத்துக்கு பெண்கள் இல்லாத சூழ்நிலையில், ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்