இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவனத்தை திசைதிருப்பும் ஆயுதமானது சமூக ஊடகம்: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை https://ift.tt/wQoFKZs

படம்
கோவா: கோவா மாநிலத்தின் மர்மகோவா பகுதியில் உள்ள ஜி.ஆர்.காரே சட்டக் கல்லூரியில் ‘ஜிஆர்கே - சட்ட பேச்சுகள்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை நீதிபதி மகேஷ் சோனக் பேசியதாவது: நாம் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களை போற்றும் யுகத்தில் வாழ்கிறோம். ஆனால், சிந்திக்க முயற்சிக்கும் மனிதர்களை பற்றி சந்தேகப்படுகிறோம் அல்லது எச்சரிக்கையாக இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கு சில சிறப்புகள் உள்ளன. இயந்திரங்களும், கணிப்பு நெறிமுறைகளும் எவ்வளவு புத்திசாலித்தன மாகவும் இருக்கட்டும். ஆனால், நாம் நமது சிந்திக்கும் திறனையும், விவேகமாக செயல்படும் திறனை யும் அவற்றுக்கு அடமானம் வைத்தால், அது சோகமான நாளாகவும், சோகமான உலகமாகவும் இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புவிக்கு அப்பால் 9.2 லட்சம் கி.மீ.தொலைவில் ஆதித்யா விண்கலம்: சூரியனின் எல் 1-ஐ நோக்கி சீரான பயணம் https://ift.tt/zFLnb3O

படம்
சென்னை : ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் ஈர்ப்பு மண்டலத்தை விட்டு முழுமையாக விடுபட்டு, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் செல்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து விண்கலத்தில் உள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு, அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அக்.7-ம் தேதி வரை அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு https://ift.tt/Klx0JCt

படம்
மும்பை : ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பெறாது என்றும், அதேநேரத்தில் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், அவற்றுக்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போக்சோ சட்டத்தில் வயதை குறைக்க கூடாது: மத்திய அரசுக்கு சட்ட குழு பரிந்துரை https://ift.tt/1Aj9ou5

படம்
புதுடெல்லி : 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 2012-ம் ஆண்டு போக்சோ சட்டத்தைக் கொண்டுவந்தது. அதேசமயம், 18 வயதுக்குட்பட்டவர்கள் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவு கொண்டாலும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் உறவுகொள்வதற்கான வயது வரம்பை 18-லிருந்து 16 -ஆக குறைக்க கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தாவில் ட்ரோன்களில் மளிகை, மருந்து விநியோகம் https://ift.tt/wj2mRcI

படம்
கொல்கத்தா : டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ட்ரோன்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ட்ரோன் சேவையை தொடங்க உள்ளது. இதுகுறித்து ஸ்கை ஏர் நிறுவன துணைத் தலைவர் இஷான் குல்லார் கூறும்போது, ‘‘கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் ட்ரோன்கள் மூலம் மளிகை பொருட்கள், மருந்து பொருட்களை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்ய உள்ளூர் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். முதல்கட்டமாக நியூ டவுன் பகுதியில் பொருட்களை ட்ரோன்கள் வாயிலாக விநியோகம் செய்வோம்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் வீட்டுக்குள் 500 பேர் கொண்ட கும்பல் நுழைய முயற்சி https://ift.tt/dqUSBFX

படம்
இம்பால் : மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் வசிக்கும் வீட்டை 500 முதல் 600 பேர் கொண்ட கும்பல் முற்றுகையிட்டு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர். மணிப்பூரில் மாதக்கணக்கில் மைத்தேயி, குகி இனத்தவர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த கலவர சம்பவங்களால் இதுவரை அங்கு 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஏராளமான பேர் வீடுகளை விட்டு வெளியே அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே.வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி குற்றச்சாட்டு https://ift.tt/9LOjfGl

படம்
புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையில 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் மேற்கு வங்கத்தில் அதிகரித்துள்ளன. முதல்வர் மம்தா தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அறிய முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி https://ift.tt/AWty562

படம்
வாரணாசி : கியான்வாபி மசூதியில், தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் ஆய்வை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகேயுள்ள கியான்வாபி மசூதி, கோயில் வளாகத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அங்கு அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தவேண்டும் என்று கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அங்கு தொல்பொருள் ஆய்வுத்துறை ஆய்வு மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்கா | நியூயார்க் நகரத்தை திணறடித்த திடீர் மழை: வெள்ளப்பெருக்கால் அவசர நிலை அறிவிப்பு

படம்
நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாத கால அளவுக்கு பெய்ய வேண்டிய கனமழை, வெள்ளிக்கிழமை காலை மூன்று மணிநேரத்துக்கும் கொட்டித் தீர்த்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புரூக்ளின் பகுதியில் மட்டும் சுமார் 4 அங்குலத்துக்கு மழை நீர் சேர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவிரி பிரச்சினை | குடகு மாவட்டத்தில் எதிரொலிக்காத பந்த் - வாட்டாள் நாகராஜ் கைது https://ift.tt/tLUDfwj

படம்
பெங்களூரு : தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. அங்கு போக்குவரத்து, திரையரங்கம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல செயல்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் 90 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டு ரூ.4 கோடிக்கு ஏலம்

படம்
டெக்ஸாஸ்: அமெரிக்காவின் வரலாற்றில் 1929 முதல் 1940 வரையிலான காலகட்டம் பொருளாதார பேரழுத்தக் காலகட்டம் என்று வரையறுக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப் பெரும் சரிவில் இருந்தது. இக்காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டு தற்போது 4.8 லட்சம் டாலருக்கு (ரூ.4 கோடிக்கு) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 1920-களின் முற்பகுதியில் உச்சத்திலிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் 1930-க்குப் பிறகு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எம்.பி.க்கள் ரமேஷ் பிதூரி, டேனிஸ் அலி மீதான புகார்கள் உரிமைமீறல் குழுவுக்கு பரிந்துரை: மக்களவை சபாநாயகர் நடவடிக்கை https://ift.tt/6azKFEs

படம்
புதுடெல்லி: பாஜக எம்.பி.க்கள் ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஸ் அலி ஆகியோர் மீதான புகார்களை உரிமை மீறல் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரைத்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற போது மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஸ் அலியை தீவிரவாதி என்று கூறி தகாத வார்த்தைகளால், பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி திட்டினார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். ரமேஷ் பிதூரியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊழியரின் கவனக்குறைவால் உ.பி.யில் ரயில் தடம்புரண்டு பிளாட்பாரத்தில் ஏறியது: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு https://ift.tt/EZBL7Wa

படம்
மதுரா: உ.பி.யில் ஊழியரின் கவனக்குறைவால் மின்சார ரயில் நகர்ந்து பிளாட்பாரத்தில் ஏறியது. உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மின்சார ரயில் வந்து நின்றது. பயணிகள் இறங்கியதும், அந்த ரயிலை இயக்கிய டிரைவரும் பணியை முடித்து விட்டு ரயில் இன்ஜினில் இருந்து இறங்கினார். அதன் சாவியை எடுத்து வருவதற்காக அந்த ரயிலில் ஏறிய ஊழியர் சச்சின் தனது தோளில் இருந்து இறக்கிய பையை, ரயிலை இயக்கும் ‘த்ராட்டில்’ அருகே வைத்து விட்டு, தனக்கு வந்த வீடியோ கால் அழைப்பில் மூழ்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவிரி விவகாரம் | கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழ‌ர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு https://ift.tt/gQI1k7v

படம்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழகஅரசு பேருந்துகளும், வாகனங்களும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது. டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டத்தில், “த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் விநாடிக்கு 3000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும்''என பரிந்துரை செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் வெறுப்புப் பேச்சு: எம்.பி ரமேஷ் பிதுரியை விசாரிக்க பாஜக பரிந்துரையால் சிறப்புரிமைக் குழு https://ift.tt/0kLGohf

படம்
புதுடெல்லி : பாஜக அரசின் எம்.பி.யான ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு குழுவை அமைக்க பாஜகவும் பரிந்துரை செய்துள்ளது எனத் தெரிகிறது. பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி, 14 பேர் கொண்ட சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுனில் குமார் சிங் உட்பட 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். "வெறுப்பு பேச்சு தொடர்பான அனைத்து புகார்களையும் சிறப்புரிமைக் குழு ஆய்வு செய்யும்" என்று மக்களவை செயலக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் அக்.1 முதல் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல் - பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு https://ift.tt/blAvy06

படம்
இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மைத்தேயி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ம் தேதி பெரும் கலவரமாக வெடித்தது. இதில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மைத்தேயி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை 6-ம் தேதி குகி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை https://ift.tt/k5OjXcH

படம்
உஜ்ஜைனி: மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் உஜ்ஜைனி நகரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்நகர் சாலையில் 12 வயது சிறுமி அரை நிர்வாண கோலத்துடன் வீடு வீடாகச் சென்று உதவி கோரும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு ரத்தம் சொட்ட சொட்ட சென்று ஒவ்வொரு வீடாக கதவை தட்டி உதவி கோரியுள்ளார். ஆனால், சிறுமியை விரட்டியடித்துள்ளனர். இறுதியில் ஆசிரம நிர்வாகிகள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மைதானத்தை காலி செய்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கட்டாய ஓய்வு https://ift.tt/VZ5KEJM

படம்
புதுடெல்லி: கடந்த 1994-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு துக்கா (54). இவர் அருணாச்சல்பிரதேசத்தில் உள்நாட்டு விவகாரங்களுக்கான முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். இவரது கணவர் சஞ்சீவ் கிர்வாரும் ஐஏஎஸ் அதிகாரி. இருவரும் வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செல்ல டெல்லி தியாகராஜ் மைதானத்தில் இருந்து விளையாட்டு வீரர்களை காலி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கிர்வார் கடந்தாண்டு டெல்லியிலிருந்து லடாக்கிற்கு மாற்றப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகின் 3 பெரிய பொருளாதார  நாடுகளில் இந்தியா இடம்பெறும்: துடிப்பான குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி https://ift.tt/HI65upD

படம்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 20-வது துடிப்பான குஜராத் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சி இன்ஜினாக குஜராத்தை மாற்ற துடிப்பான குஜராத் சர்வதேச மாநாடு 2003-ல் தொடங்கப்பட்டது. அதன் பிறகுதான் ஆயிரக்கணக்கான வெற்றிக் கதைகள் உருவாகி உள்ளன. கடந்த நூற்றாண்டில் குஜராத் வர்த்தகர்கள் நிறைந்த மாநிலமாக விளங்கியது. இப்போது தொழில் உற்பத்தி முனையமாக உருவெடுத்துள்ளதால் குஜராத்துக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய சட்ட ஆணையம் ஆதரவு https://ift.tt/KYXMrHW

படம்
புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மக்களவை, அனைத்து சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நேரம் மற்றும் தேர்தல் செலவை குறைக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதன பேச்சு சர்ச்சை: பிஹாரில் விஎச்பி பேரணி; போலீஸ் விடுமுறை ரத்து https://ift.tt/y4Lzjms

படம்
பாட்னா: தமிழகத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்து மதத்தின் மீதான தாக்குதலை தடுக்கவும், சனாதனத்தை காப்பாற்றவும் விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்புகள் வட மாநிலங்களில் ஷவுர்ய ஜாக்ரண் யாத்திரையை நடத்த உள்ளன. அடுத்த 2 வாரங்களுக்கு பிஹாரின் வெவ்வேறு நகரங்களில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2024 ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: அனைத்து சமூக குருமார்களுக்கு அழைப்பு https://ift.tt/nmEODl2

படம்
புதுடெல்லி : அடுத்த வருடம் ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் அனைத்து சமூக குருமார்கள் உள்ளிட்ட சுமார் 8,000 பேரை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உ.பி. அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகளை இன்னும் நான்கு மாதங்களில் முடித்து அடுத்த வருடம் ஜனவரியில் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 53 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனை: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பு குறித்து விசாரணை https://ift.tt/caCKsNE

படம்
புதுடெல்லி : காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த விசாரணையின் தொடர்ச்சியாக, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 53 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கனடாவில் கடந்த ஜூன் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை இந்திய முகவர்கள் கொன்றதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சட்டவிரோத கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் ஆட்சியில் 6 லட்சம்; பாஜக ஆட்சியில் 9 லட்சம் பேருக்கு வேலை - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் https://ift.tt/vqfczhT

படம்
புதுடெல்லி: முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் 9 ஆண்டு காலத்தில் 6 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டது. தற்போதைய பாஜக ஆட்சியில் 9 ஆண்டுகளில் 9 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழா நாடு முழுவதும் 46 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லியில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் ஒரு காலத்தில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை https://ift.tt/pVwUuKv

படம்
புதுடெல்லி/ பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் கடந்த 12-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இதுவே உத்தரவாக பிறப்பிக்கப்ப‌ட்டது. இதற்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதனத்தை அழிக்க காங்கிரஸ் முயற்சி: போபால் பாஜக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு https://ift.tt/dQw8fD5

படம்
போபால்: பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடியான தீன்தயாள் உபத்யாயாவின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பாஜக தொண்டர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிக நீண்ட காலம் ஆட்சி நடத்தியது. ஆனால் ஊழல் ஆட்சியால் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. யுபிஐ திட்டம் கொண்டு வரப்பட்டபோது மிகக் கடுமையாக விமர்சித்தது. இப்போது யுபிஐ பணப் பரிமாற்றத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மோடி என்றால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று அர்த்தம். பாஜக அளித்த வாக்குறுதிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அந்த கட்சி ஆட்சியில் இருக்கும்வரை வறுமை ஒழிக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர். from இந்து...

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில் தலித் பெண்ணின் ஆடையை களைந்து சித்ரவதை https://ift.tt/tBXdeI4

படம்
பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐஜத - ஆர்ஜேடி கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாட்னா மாவட்டம், மோசிம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த தலித் தொழிலாளி ஒருவர் ரூ.1,500 கடன் வாங்கியிருந்தார். அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை. கடன் வாங்கிய தொழிலாளியின் மனைவி கடந்த 23-ம் தேதி இரவு குடிநீர் பிடிப்பதற்காக குடத்துடன் பொது குழாயடிக்கு சென்றார். அப்போது பிரமோத்தும் அவரது கூட்டாளிகளும் தொழிலாளியின் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கடன் மற்றும் வட்டி பணத்தை தருமாறு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். பிரமோத்தின் மகன் அன்சூ குமார், பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: உதயநிதியை கண்டித்து டெல்லியில் துறவிகள் ஆர்ப்பாட்டம் https://ift.tt/xOnu7mJ

படம்
புதுடெல்லி: சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கொசு, டெங்கு காய்ச்சல் போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்றார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லி கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள துறவிகளும், தலைவர்களும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியின் துறவிகள் மகா மண்டலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி மற்றும் திமுக தலைவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மகனின் தவறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு https://ift.tt/zXKUsk5

படம்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசு பேருந்துகள் அத்திப்பள்ளி சோதனை சாவடி வரை இயக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டன. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், தமிழகத்துக்கு காவிரிநீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களின் கவனத்தை திசை திருப்பி தேர்தலில் வெற்றி பெறும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு https://ift.tt/Vj2tXcQ

படம்
புதுடெல்லி: மக்களின் கவனத்தை திசைதிருப்பி தேர்தலில் வெற்றிபெறும் வியூகத்தை பாஜக கடைபிடித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ள வீடியோவில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: கர்நாடகாவில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், தேர்தல்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பி வெற்றி பெறும் வியூகத்தை பாஜக தொடர்ச்சியாக கடைபிடித்து வருவது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. மக்களை சுயமாக சிந்திக்க விடாமல் பாஜக இந்த கொள்கையை தந்திரமாக கையாண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐடி ஹார்டுவேர் உதிரிபாகங்கள் தயாரிப்பு அதிகரிக்க வாய்ப்பு https://ift.tt/l9WF0an

படம்
புதுடெல்லி : இந்தியாவில் லேப்டாப் உட்பட ஐடி ஹார்டுவேர் தயாரிப்புகளுக்கான உதிரிபாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு மத்திய அரசு விரைவில் கட்டுப்பாடுகள் கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஐடி ஹார்டுவேர் உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்நாட்டில் பல மடங்கு உயரும் என்று எதிர்பாக்கப்படுகிறது. தற்சமயம் ஐடி ஹார்டுவேர் தயாரிப்புகளுக்கான உதிரிபாகங்கள் உள்நாட்டிலிருந்து 1 பில்லியன் டாலர் மதிப்பில் பெறப்படுகிறது. சீனாவிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வரும்பட்சத்தில் உள்நாட்டு கொள்முதல் 20 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பூமியில் பகல் இரவு சமமாக இருக்கும் புகைப்படம்: ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு

படம்
பாரிஸ் : ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பகல், இரவு சம அளவு ஏற்படும். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ஈஎஸ்ஏ கூறும்போது, ‘‘குளிர்காலம் வருகிறது. பகல் இரவு பாதியாக இன்று பிரிந்தது. இந்த செயற்கைக்கோள் படம்காலை 09.00 மணிக்கு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்பேஸ்.காம் இணையதளத்தில், ‘‘பூமியின் வடக்கு அரைகோள பகுதியில் இலையுதிர் காலம் தொடங்கியது. தெற்கு அரை கோளத்தில் வசந்த காலம் தொடங்கியது. தற்போது சூரியன் தென் திசையில் பயணிக்கிறது’’ என்றுதெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema,...

உலகின் 2-வது பெரிய கோயில் அக்டோபரில் திறப்பு

படம்
ராபின்ஸ்வில்லே (நியூ ஜெர்சி): அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 முதல் 2023 வரையிலான 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12,500 தன்னார்வலர்கள் இந்த கோயிலை கட்டி உள்ளனர். 183 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயில் உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹர்தீப் சிங் நிஜார் கொலை சம்பவம் பற்றி உளவு தகவல் அளித்தது அமெரிக்கா?

படம்
நியூயார்க்: ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளும் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள ‘5 ஐஸ்’ (5 கண்கள்) என்ற பெயரில் கூட்டணியை கடந்த 1941-ல் உருவாக்கின. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலையில் இந்திய ஏஜென்ட்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத் தகுந்த உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதை எதிர்ப்பதா? - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் கண்டனம் https://ift.tt/AOhE74v

படம்
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் 2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம், கேரளா, மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன. இதனால், கேரளாவில் காங்கிரஸும், இடதுசாரிகளும் தனித்தனியாக போட்டியிடும் என கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

``இந்தியா, அதுவே பாரத்" -  கவனம் ஈர்த்த ராகுல் காந்தியின் ஜாலி பதில் https://ift.tt/M34ELtA

படம்
டெல்லி : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அரசியலுக்கு அப்பாற்பட்டு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தது கவனம் ஈர்த்தது. `நெட்ஃப்ளிக்ஸ் அல்லது ஜிம்முக்குச் செல்வீர்களா?' என்ற கேள்விக்கு `ஜிம்முக்குச் செல்வேன்!' என்று ஜிம்மை தேர்ந்தெடுத்தார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது இருந்த அவரின் தாடி குறித்து கேள்வி கேட்டதற்கு, "காங்கிரஸுக்கும் என்னிடமிருக்கும் பிரச்சினையே. தாடி, உணவு, உடை ஆகியவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எதுவாக இருந்தாலும் அப்படியே இருந்துவிடுவேன்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

`வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தல்'- பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் குற்றச்சாட்டு https://ift.tt/xcU3De0

படம்
டெல்லி : பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி என நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உட்பட பலர் போராட்டம் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 எப்ஜஆர் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6-ம் நாள் திருப்பதி பிரம்மோற்சவம் | அனுமன் வாகனத்தில் மலையப்பர் பவனி: தங்க தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு https://ift.tt/mPV4c9J

படம்
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்திலும், மாலை தங்க தேரிலும், இரவு யானை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 9 நாட்கள் வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாரணாசியில் ரூ.451 கோடியில் கிரிக்கெட் மைதானம்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் https://ift.tt/1ieobpx

படம்
வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.451 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். வாரணாசி ரிங் சாலை அருகேயுள்ள காஞ்சரி பகுதியில் 30.6 ஏக்கர் பரப்பில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு சார்பில் ரூ.121 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்காக பிசிசிஐ சார்பில் ரூ.330 கோடி செலவிடப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத விவகாரம் | இந்தியாவுக்குதான் அமெரிக்கா ஆதரவு தரும்: பென்டகன் முன்னாள் அதிகாரி தகவல்

படம்
புதுடெல்லி: இந்திய உறவா அல்லது கனடா உறவா என முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தால், அமெரிக்கா இந்தியாவுக்குதான் ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்தார். கனடாவின் வான்கூவர் நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா நாட்டுஅதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம்: டெல்லியில் முதல் ஆலோசனை கூட்டம் https://ift.tt/FWcbCvo

படம்
புதுடெல்லி : ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை டெல்லியில் நேற்று நடைபெற்றது. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செல்வாக்கு இழக்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: கருத்துக் கணிப்பில் தகவல்

படம்
புதுடெல்லி : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015-ம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான இப்சோஸ், கனடா மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தற்போது பிரதமர் தேர்தல் நடத்தப்பட்டால், கன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொலிவர் 40 சதவீத வாக்குகள் பெறுவார் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சை பேச்சு - தமிழக அரசு, உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் https://ift.tt/LRQG9vo

படம்
புதுடெல்லி : சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நவ.10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்.2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில்தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜாமீன் மனு தள்ளுபடி - சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி https://ift.tt/eDJ62gO

படம்
விஜயவாடா: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2018-ல் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக கூறி, சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அவருக்கு 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது. இதையடுத்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது ஏன்?: ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்.பி. ஒவைசி விளக்கம் https://ift.tt/E7Fn3hD

படம்
புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி. அசதுதீன் ஒவைசி விளக்கம் அளித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாநாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதன்மூலம், நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் 33% பெண்கள் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் மக்களவையில் அனைத்து கட்சிகளின் 454 எம்.பி.க்களும் வாக்களித்து ஆதரவை தெரிவித்தனர். ஆனால், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் அசதுதீன் ஒவைசி, இம்தியாஸ் ஜலீல் ஆகிய 2 எம்.பி.க்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவில் உறக்க நிலையில் உள்ள லேண்டர், ரோவர் மீண்டும் இயங்குமா?: தீவிர முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் https://ift.tt/IfZmOQy

படம்
சென்னை : நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் ஆகியவை ஆக.23-ம்தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 12 நாட்கள் ஆய்வு செய்து பலஅரிய தகவல்களை நமக்கு அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நிலஅதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/2P4tKiJ

படம்
புதுடெல்லி : காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் விநாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்க‌ உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த மாதம் அவசர மனு தாக்கல் செய்தது. இதை விசாரிக்க, நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் தனி அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

''இது வெறும் சட்டம் அல்ல'' - மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி https://ift.tt/MSCo2Gq

படம்
புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் அரசியல் கட்சிகளின் நேர்மறை சிந்தனையைக் காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக நேற்றுமுன்தினம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா சட்டமாக மாற இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் மட்டும் தேவை. 454 எம்.பி.க்கள் ஆதரவுடன் நேற்று மக்களவையில் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா https://ift.tt/i8GojKp

படம்
புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒருமனதாக ஆதரவு கிடைத்தது. ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்த மசோதா சட்டமாக மாற இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் மட்டும் தேவை. 454 எம்.பி.க்கள் ஆதரவுடன் நேற்று மக்களவையில் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது தமிழகம் 8 மக்களவை தொகுதிகளை இழக்கலாம்: ஆய்வறிக்கையில் தகவல் https://ift.tt/Jrb81gA

படம்
புதுடெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின், மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், உத்தர பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தென் மாநிலங்களவை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்