கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 27 பேரிடம் ரூ.78.74 லட்சம் மோசடி செய்ததாக துணை ஆட்சியர், வட்டாட்சியர் மீது வழக்கு https://ift.tt/muBIi8e
கிருஷ்ணகிரி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கிருஷ்ணகிரியில் 27 பேரிடம் ரூ.78.74 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, துணை ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன் (39) மற்றும் இட்டிக்கல் அகரம், தேவசமுத்திரம், நக்கல்பட்டி, கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 26 பேர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வெவ்வேறு காலகட்டங்களில் புகார் அளித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்