இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உதய்பூரில் பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51 லட்சத்தில் அலங்காரம் https://ift.tt/Lp7u1KS

படம்
உதய்பூர்: ​ ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி பெற்ற பாலேஸ்​வரி மாதா கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் தற்​போது நவராத்​திரி திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. இதையொட்டி பாலேஸ்​வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்​புடைய கரன்சி நோட்​டு​களால் நேற்று முன்​தினம் பக்​தர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்​டு​களால் இந்த அலங்​காரம் நடை​பெற்​ற​தாக கோயிலை நிர்​வகிக்​கும் பாலேஸ்​வர் யுவ மண்​டல் கமிட்டி தெரி​வித்​துள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்

படம்
ஹைபா: இஸ்​ரேலின் ஹைபா நகரில் இந்​திய வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறிய​தாவது: வரலாற்று சங்​கத்தை சேர்ந்த ஒரு​வர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழு​மை​யான ஆராய்ச்சி செய்த புத்​தகம் ஒன்றை வழங்​கி​னார். அதில், இந்த நகரத்தை ஒட்​டோ​மான்​களிட​மிருந்து விடு​வித்​தது ஆங்​கிலேயர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள் தான் என்​பதை ஆதா​ரங்​களு​டன் விளக்​கி​யிருந்​தார். ஆனால், அது​வரை இந்த நகரம் பிரிட்​டிஷ் வீரர்​களால்​தான் விடுவிக்​கப்​பட்​டது என்​ப​தாக எங்​களுக்கு தொடர்ச்​சி​யாக போ​திக்​கப்பட்டு வந்​தது. அப்​படிப்​பட்ட தீரம் மிகுந்த இந்​திய வீரர்​களுக்கு இங்கு அஞ்​சலி செலுத்​து​வது பெரு​மை​யாக உள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 1990 முதல் 26 சதவீதம் அதிகரிப்பு https://ift.tt/XsUdA7o

படம்
புதுடெல்லி: இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து 'தி லான்​செட்' இதழில் வெளி​யான ஆய்வு முடிவு​களின்​படி, இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு 33 ஆண்​டு​களில் 26% அதி​கரித்​துள்​ளது. 1990-ல் 1 லட்​சம் மக்​கள்​தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்​று​நோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்​துள்​ளது. இது​போல் புற்​று​நோய் காரண​மாக ஏற்​படும் உயி​ரிழப்பு 21% அதி​கரித்​துள்​ளது. அதேவேளை​யில் அமெரிக்கா மற்​றும் சீனா​வில் 33 ஆண்​டு​களில் புற்​று​நோய் பாதிப்பு மற்​றும் உயி​ரிழப்பு ஆகிய இரண்​டும் கணிச​மாக குறைந்​துள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா-பூடான் இடையே ரயில் இணைப்பு திட்டம்: வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு https://ift.tt/t6bFuP4

படம்
புதுடெல்லி: இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் உடன் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதாவது: பனார்ஹட்-சாம்ட்சே மற்றும் கோக்ரஜார்- கெலெபு இடையே எல்லை தாண்டிய இரண்டு ரயில் வழித்தட இணைப்புகளை நிறுவ இந்தியா மற்றும் பூடான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இது பூடானுடனான முதல் ரயில் இணைப்புத் திட்டமாகும். பூடான் வெளியுறவுச் செயலாளரின் வருகையின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது

படம்
குய்சோ: உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது. சீனா​வின் குய்சோ மாகாணத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் பாலத்​துக்கு ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. தரை மட்​டத்​திலிருந்து 625 மீட்​டர் உயரத்​தில் இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது. இரு மலைகளை இணைக்​கும் வித​மாக இந்​தப் பாலம் மிக​வும் அழகுட​னும், சிறப்​பாக​வும் அமைந்​துள்​ளது. இது​வரை இப்​பகு​தி​யைக் கடக்க 2 மணி நேரம் எடுத்​துக்​கொண்ட நிலை​யில் தற்​போது பாலத்​தின் உதவி​யால் இரண்டே நிமிடத்​தில் இப்​பகு​தி​யைக் கடந்து விட முடி​யும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் மணிப்பூரில் கைது https://ift.tt/yaw9xhH

படம்
இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் கும்பி பஜாரில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் (பிஎல்ஏ) சேர்ந்த ஞானேஷ்வர் சிங் (49) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் பிஎல்ஏ அமைப்புக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கியதாக அரசு தெரிவித்துள்ளது. பிஎல்ஏ அமைப்பைச் சேர்ந்த லைஷ்ராம் ஜிதன் சிங் (56) இம்பால் மேற்கு மாவட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே அமைப்பைச் சேர்ந்த சோபி சிங் (50) இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்க துர்கா பூஜை பந்தலில் ‘அசுரன்’ வேடத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலை https://ift.tt/uU8KG6o

படம்
கொல்கத்தா: ​நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள துர்கா பூஜை பந்​தலில், அசுரன் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காக்ரா சமஷான்​கட் துர்கா பூஜை கமிட்டி நிர்​வாகி பிரதீக் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்​துள்​ளார். அத்​துடன் எச்​-1பி விசா கட்​ட​ணத்தை பல மடங்கு உயர்த்தி உள்​ளார். இதன் மூலம் இந்​தி​யர்​கள் பாதிக்​கும் சூழ்​நிலை உரு​வாகி உள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு https://ift.tt/9Rn1y3G

படம்
ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார். இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குகிறது’ - கரூர் சம்பவத்துக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் https://ift.tt/OBMrmaW

படம்
புதுடெல்லி: கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வேதனையளிக்கிறது. அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது https://ift.tt/xoRVNvF

படம்
லே: லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்து வழங்​கக் கோரி​யும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் சமூக ஆர்​வலரும், கல்​வி​யாள​ரு​மான சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்தார். வேறு சில அமைப்​பு​களும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தன. லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்​குள்ள லே உச்ச அமைப்பு (எல்​ஏபி) சார்​பில் நடத்​தப்​பட்ட போராட்​டம் கடந்த புதன்​கிழமையன்று வன்​முறை​யாக மாறியது. போராட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த முயன்ற பாது​காப்​புப் படை​யினர் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் 4 பேர் உயி​ரிழந்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​திக்க 30 நிமிடம் காத்​திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்

படம்
வாஷிங்​டன்: பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர். இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம் மாலை 4.52 மணிக்கு சென்​றனர். அப்​போது அதிபர் ட்ரம்ப் பல்​வேறு அலு​வல்​களில் ஈடு​பட்​டிருந்​தார். அவரை சந்​திப்​ப​தற்​காக ஷெபாஸ் ஷெரீப்​பும், அசிம் முனிரும் சுமார் 30 நிமிடத்​துக்கு மேல் காத்​திருந்​தனர். அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்​சிகளை முடித்​துக் கொண்டு வந்​தார். பின்​னர் பிரதமர் ஷெபாஸ், ராணுவ தளபதி அசிம் ஆகியோரை தனது ஓவல் அலு​வல​கத்​தில் அதிபர் ட்ரம்ப் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்!

படம்
ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர். ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.26) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று உரையாற்றினார். தனது உரையில் அவர், “பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது. அந்த அங்கீகாரம், இஸ்ரேலியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் வெட்கப்பட வேண்டும். சிறிய ஆதரவுடன் சுமார் ஏழு மோதல்களை இஸ்ரேல் கையாள்கிறது” என்று பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மறைந்த கன்னட எழுத்தாளர் பைரப்பா உடலுக்கு முதல்​வர் சித்தராமையா அஞ்சலி https://ift.tt/AymtZG9

படம்
பெங்களூரு: பத்ம பூஷன் விருதுபெற்ற கன்னட எழுத்​தாள‌ர் எஸ்​.எல்​.பைரப்பா (94) உடல் நலக்​குறை​வால் பெங்​களூரு​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார் (94). கர்​நாடக மாநிலம் ஹாசன் மாவட்​டத்​தில் உள்ள சென்​னப்​பட்​ணா​வில் 1931-ல் பைரப்பா பிறந்​தார். 20-க்​கும் மேற்​பட்ட நாவல்​களை எழு​தி​யுள்​ளார். அவை கன்​னடத்​தில் இருந்து தமிழ், தெலுங்​கு, இந்தி உட்பட 10-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்​டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி - முழு விவரம் https://ift.tt/VMcKhat

படம்
புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ரயிலில் இருந்து ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை, இலக்கை நோக்கிசெலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதன்மூலம், ரயில் ஏவுதளம் வைத்துள்ள ஒருசில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு தேவையான பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரிக்கிறது. தரையில் இருந்து மட்டுமின்றி, ராணுவ வாகனங்கள்,போர்க்கப்பல்களில் அமைக்கப்படும் ஏவுதளம் என பல வகையான ஏவுதளங்களில் இருந்து இந்த ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு படைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயதின் அடிப்படையில் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடலாமா? - வாக்காளர்களுக்கு வயது குறித்த புரிதல் இல்லை https://ift.tt/EGxVqu9

படம்
பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது, பாஜக மற்றும் சங் பரிவாருக்குள் “வயது வரம்பு” விதி இருப்பதாக கூறப்படுவது தொடர்பான ஊகங்கள் அதிகரித்தன. எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓய்வு பெற்றதை ஊடகமும், அரசியல் முணுமுணுப்புகளும் சுட்டிக்காட்டின. மோடி ஏன் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இவை அனைத்தும் நல்ல கேள்விகள். பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் தகுந்த பதில்கள் தெளிவாக வழங்கப்பட்டன. உண்மைகளுக்கு மாற்றாக அவற்றுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. தற்போது பிறந்தநாள் முடிவடைந்துள்ள வேளையில், ஒரு விரிவான பகுப்பாய்வு அவசியமாகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐ.நா. சபையின் ஏஐ சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை பரிந்துரைத்தது இந்தியா https://ift.tt/BMeZgGq

படம்
சென்னை: ஐ.​நா. சபை​யின் டிஜிட்​டல் மற்​றும் வளரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான அலு​வல​கத்​தின் சிறப்பு மைய​மாக சென்னை ஐஐடியை மத்​திய அரசு பரிந்​துரை செய்​துள்ளது என்று மின்​னணு​வியல், தகவல் தொழில்​நுட்​பத்துறை செயலர் எஸ்​.கிருஷ்ணன் தெரிவித்தார். தற்​போதைய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) காலச்​சூழலில் சவால்​களை திறம்பட கையாள்​வதற்​காக டிஜிட்​டல் மற்​றும் வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான அலு​வல​கத்தை (ODET) ஐக்​கிய நாடு​கள் சபை அமைத்​துள்​ளது. அதன்​படி, ஒவ்​வொரு நாடும் ஐ.நா. சபை​யின் இந்த அலு​வல​கத்​தால் ஆதரிக்​கப்​பட்ட கல்வி நிறு​வனங்​களை அடை​யாளம் காட்ட வேண்​டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் https://ift.tt/VWf1z2E

படம்
புதுடெல்லி: ர​யில்​வே​யில் பணி​யாற்​றும் 10.91 லட்​சம் ஊழியர்​களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்​னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்ளது. தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்​டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் போனஸ் வழங்​கப்​படும். இந்​நிலை​யில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3,787 ஆதரவற்றோர் உடல்களுக்கு இறுதிச் சடங்கு: ‘உதவும் சேவகர்கள்’ அமைப்பினரின் மனிதாபிமானம் https://ift.tt/SGYB4dp

படம்
குண்டூர்: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி சின்னராவூரு தோட்டா எனும் பகுதியை சேர்ந்தவர் ஷேக் இனாயத்துல்லா. இவரும் இவரது 4 நண்பர்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1996-ம் ஆண்டில், இண்டர்மீடியட் (பிளஸ்-2) படிக்கும் போது, தங்கள் பகுதியில் ஒரு சாலையின் ஓரத்தில் பசி மயக்கத்தில் பிச்சை எடுத்து வந்த ஒரு பெண்மணி மயங்கி விழுந்து கிடந்துள்ளார். அவருக்கு இவர்கள், தண்ணீர், உணவு போன்றவற்றை தினமும் வழங்கினர். இதனால் அப்பெண்மணி பிச்சை எடுக்கும் தொழிலையும் கைவிட்டிருந்தார். ஆனால், சிறிது நாட்களிலேயே அப்பெண்மணி மரணமடைந்தார். அந்தப் பெண்ணின் உறவினர் களில் சிலர் அதே பகுதியில் வசித்து வந்தாலும், சடலத்தை வாங்க மறுத்து விட்டனர். இதனால், ஷேக் இனாயத்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் பணத்தை செலவிட்டு, அந்தப் பெண்மணியின் ஈமச் சடங்குகளை செய்தனர். அப்போது முதற்கொண்டு இவர்கள் தொடர்ந்து இதேபோன்ற சேவைகளை செய்ய முடிவு செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது'  https://ift.tt/BxHwtO8

படம்
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொர் ஆண்டும் மத்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்,ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மாஸே (12த் ஃபெயில்) ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம்: ஹிண்டன்பர்க் அறிக்கை நிராகரிப்பு பற்றி கவுதம் அதானி கருத்து https://ift.tt/xBHRzMY

படம்
புதுடெல்லி: அதானி குழு​மம் பங்​குச் சந்​தை​யில் முறை​கேடு செய்​த​தாக அமெரிக்​கா​வின் ஹிண்​டன்​பர்க் ரிசர்ச் நிறு​வனம் கடந்த 2023-ல் குற்​றம்​சாட்​டியது. இதனால், அதானி குழும பங்​கு​கள் சரிந்​தன. இதுகுறித்து இந்​திய பங்​குச் சந்தை பரிவர்த்​தனை வாரி​யம் (செபி) விசா​ரணை நடத்​தி​யது. இரண்டு ஆண்டு விசா​ரணைக்​குப் பிறகு, அதானி குழு​மம் மீதான குற்​றச்​சாட்​டு​களுக்கு போதிய ஆதா​ரம் இல்லை என கடந்த சில தினங்​களுக்கு முன்பு செபி தெரி​வித்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எச்1பி விசா கட்டண உயர்வு கெடுபிடி: அதிக நிபந்தனைகள் இல்லாத ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா - முழு விவரம்

படம்
வாஷிங்டன்/ பெய்ஜிங்: எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு அந்த நாட்டு நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேர்வதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எச்1பி விசா கட்டண உயர்வால் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு அவசரமாக புறப்பட்ட இந்தியர்கள் https://ift.tt/5Mvjto6

படம்
புதுடெல்லி: எச்​1பி விசா கட்டண உயர்வு விவ​காரத்​தால் இந்​திய இளைஞர்​கள் திரு​மணத்தை ரத்து செய்​து​ விட்டு அமெரிக்கா​வுக்கு புறப்​பட்டு சென்​றுள்​ளனர். அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா வழங்​கப்​படு​கிறது. ரூ.1.32 லட்​ச​மாக இருந்த இந்த விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு திடீரென ரூ.88 லட்​ச​மாக உயர்த்​தி​யது. புதிய கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது. அமெரிக்​கா​வில் எச்​1பி விசா​வில் சுமார் 7.50 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களின் மனை​வி, பிள்​ளை​கள் என சுமார் 6 லட்​சம் பேரும் அமெரிக்​கா​வில் வசிக்​கின்​றனர். இதில் 75 சதவீதம் பேர் இந்​தி​யர்​கள் ஆவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எச்1பி விசாவுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம்: ட்ரம்பின் புதிய ஆணை குறித்து அமெரிக்க அரசு விளக்கம்

படம்
வாஷிங்டன்: எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு உயர்த்தியது. இந்த புதிய கட்டண முறை நேற்று (செப்.21) முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டண விதிகள் குறித்து முதல் நாளில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், அமெரிக்காவின் மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், தாய்நாட்டுக்கு சென்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப அறிவுறுத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது  https://ift.tt/Vz7r4RK

படம்
திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது. திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் இடமான ‘பரகாமணி’யில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் (ஆண்கள் மட்டும்) உண்டியல் பணத்தை எண்ணுவது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெளிநாட்டு கரன்சிகளை திருடி வந்துள்ளார். உண்டியல் பணத்தை எண்ணும்போது அடிக்கடி கழிப்பறைக்கு சென்ற அவர், வெளிநாட்டு கரன்சியை பிளாஸ்டிக் கவரில் வைத்து ஆசன வாயில் திணித்து திருடி வந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக அதிகரிப்பு: அமெரிக்காவில் இன்று முதல் அமலுக்கு வருகிறது - முழு விவரம்!

படம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விடுப்புக்காக இந்தியா சென்றுள்ள ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு ஐ.டி. நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் பானிபூரி கேட்டு பெண் தர்ணா: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி https://ift.tt/hiwcZGm

படம்
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பானிபூரி கேட்டு அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்வலம், அரசியல் பேரணி, அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை. ஆனால், குஜராத்தில் பெண் ஒருவர் பானிபூரி தரக்கோரி நடுரோட்டில் தர்ணா செய்த விநோத சம்பவம் நடந்தேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, ரூ.20 கொடுத்து கடைக்காரரிடம் பானிபூரி கேட்டுள்ளார். அந்தப் பெண் எதிர்பார்த்ததோ ஆறு. ஆனால், கடைக்காரர் கொடுத்ததோ நான்கு.. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண் இரண்டு பானிபூரிக்கு நீதி கேட்டு நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் இந்திய இளைஞர் கொலை

படம்
வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் சாண்டா கிளாரா பகு​தி​யில் இந்​திய இளைஞரை போலீ​ஸார் சுட்​டுக் கொன்​றனர். தெலங்​கானா மாநிலத்​தின் மஹபூப்​நகரை சேர்ந்​தவர் முகமது நிசா​முதீன் (32). கடந்த 2016-ம் ஆண்​டில் அவர் அமெரிக்கா​வுக்கு சென்​றார். அங்கு புளோரி​டா​வில் உயர் கல்வி பயின்​றார். பின்​னர் கலி​போர்​னியா மாகாணம், சாண்டா கிளாரா பகு​தி​யில் சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக அவர் பணி​யாற்றி வந்​தார். அங்​குள்ள வாடகை வீட்​டில் முகமது நிசா​முதீனும் மற்​றொரு நபரும் தங்​கி​யிருந்​தனர். கடந்த 3-ம் தேதி இரு​வருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. அ்ப​போது நிசா​முதீன், சக நண்​பரை கத்​தி​யால் குத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீ​ஸார், முகமது நிசா​முதீனை துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் அவரது உடலில் 4 குண்​டு​கள் பாய்ந்​தன. உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் உயி​ரிழந்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால...

ஆகம கோயில்களை கண்டறியும் குழுவில் கோவிலூர் மடாலய மடாதிபதி: உச்ச நீதிமன்றம் பரிந்துரை https://ift.tt/dNEoYQn

படம்
புதுடெல்லி: ஆகம கோயில்​களைக் கண்​டறி​யும் குழு​வின் உறுப்​பின​ராக காரைக்​குடி கோவிலூர் மடால​யத்​தின் மடா​திபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரைத்​துள்​ளது. ஆகம விதி​களைப் பின்​பற்​றும் கோயில்​களில் அர்ச்​சகர்​களை நியமிக்​கும்​போது ஆகம விதி​களை கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் எனக்​கோரி அகில இந்​திய சிவாச்​சா​ரி​யார்​கள் சேவா சங்​கம் உள்​ளிட்​டவை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் தமிழகத்​தில் ஆகம விதி​களை கடைபிடிக்​கும் கோயில்​களை​யும், ஆகமம் அற்ற கோயில்​களை​யும் கண்​டறிய சென்னை உயர் நீதி​மன்​றம் நியமித்த குழு​வுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்​தது. அத்​துடன் ஆகமம் அல்​லாத கோயில்​களில் அனைத்து சாதி​யினரை​யும் அர்ச்​சகர்​களாக நியமிக்க உத்​தர​விட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: துணை ராணுவ படையினர் இருவர் உயிரிழப்பு https://ift.tt/6GSHcxi

படம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் துணை ராணுவப் படையின் அசாம் ரைபிள்ஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணி அளவில் இந்த தாக்குதல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அசாம் ரைபிள்ஸ் படையின் 33 வீரர்கள் வாகனத்தில் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் பயணித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், வீரர்கள் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையினர் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை உட்பட 5 நகரங்களில் சோதனை: ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் நடவடிக்கை https://ift.tt/moE7r1Z

படம்
அமராவதி: ஆந்​திர மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக நேற்று அமலாக்​கத் துறை விசா​ரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்​ளிட்ட 5 நகரங்​களில் அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​துள்​ளனர். ஆந்​தி​ரா​வில் கடந்த ஜெகன் மோகன் ரெட்​டி​யின் ஆட்சி காலத்​தில் ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடந்​த​தாக சிறப்பு ஆய்​வுக் குழு​வின் விசா​ரணை​யில் தெரிய வந்​தது. இது தொடர்​பாக இது​வரை 29 பேரை குற்​ற​வாளி​யாக​வும், 19 நிறு​வனங்​களுக்கு இதில் தொடர்​புடைய​தாக​வும் சிறப்​புக் குழு குற்​றப்​பத்​திரி​கையை சமர்ப்​பித்​துள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி கெடு https://ift.tt/GIvRsgi

படம்
புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். அந்த நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், ஓடிபி விவரங்களை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வாக்குகள் திருடப்படுவதாகவும், இதில் பாஜகவுடன், தேர்தல் ஆணையம் கூட்டுசேர்ந்து சதி செய்வதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை https://ift.tt/u1qfjgz

படம்
பரேலி: உ.பி பரேலி​யில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்​டின் மீது துப்​பாக்கிக் சூடு நடத்​திய இரு​வர் என்​க​வுன்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். பாலிவுட் நடிகை திஷா பதானி​யின் வீடு உத்தர பிரதேசம் பரேலி​யில் உள்​ளது. இங்கு கடந்த 12-ம் தேதி மர்ம நபர்​கள் இரு​வர் துப்​பாக்கிச் சூடு நடத்​தினர். இதில் யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை. துப்​பாக்கிச் சூடு நடத்​தி​ய​வர்​கள் கோல்டி பிரார் மற்​றும் ரோஹித் கோதாரா கும்​பலைச் சேர்ந்த ரவீந்​திரா, அருண் என தெரிய​வந்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பசுவதை தடை சட்டத்தை வலியுறுத்தி பிஹாரில் சங்கராச்சாரியார் கட்சி போட்டி https://ift.tt/qI6OHUK

படம்
புதுடெல்லி: உத்​த​ராகண்​டின் சமோலி மாவட்​டத்​தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்​களில் ஒன்​றாக கருதப்​படு​கிறது. இதன் தலை​வர் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்த் சரஸ்​வ​தி. இவர் சங்​க​ராச்​சா​ரி​யார்​களில் ஒரு​வ​ராக​வும் கருதப்​படு​கிறார். இவர் துறவி​கள் சார்​பில், புதி​தாக ஓர் அரசி​யல் கட்சி தொடங்க உள்​ளார். இக்​கட்சி சார்​பில் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 243 தொகு​தி​களி​லும் வேட்​பாளர்​களை நிறுத்த உள்​ளார். இதற்கு முன்​பாக பிஹாரின் மதுபனியி​லிருந்து இவர் யாத்​திரை தொடங்​கி​யுள்​ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இனிமேல் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறும் https://ift.tt/Br2jhAl

படம்
புதுடெல்லி: வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக இம்முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

20 ஆண்டு பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பயன் கிடைக்கும் https://ift.tt/U2tORGm

படம்
புதுடெல்லி: இரு​பது ஆண்​டுக்கு மேல் பணி​யாற்​றி, விருப்ப ஓய்வு பெறும் மத்​திய அரசு ஊழியர்​களுக்கு முழு ஓய்வூதிய பயன் பெற உரிமை உள்​ளது. மத்​திய பணி​யாளர் ஓய்​வூ​தி​யம் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் நலத் துறை மத்​திய சிவில் சேவை விதி​கள், 2025–ஐ கடந்த 2-ம் தேதி அரசிதழில் அறி​வித்​தது. இவ்​வி​தி​கள், தேசிய ஓய்​வூ​திய திட்​டத்​தின் (NPS) கீழ் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை (UPS) விருப்​ப​மாகத் தேர்ந்​தெடுக்​கும் மத்​திய அரசு ஊழியர்​களின் ஓய்​வூ​திய நன்​மை​கள் மற்​றும் பணி​சார் விஷ​யங்​களை ஒழுங்​குபடுத்​துகின்​றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் சாலைகளில் போக்குவரத்து முடக்கம்: ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம் https://ift.tt/Qju14IE

படம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிட​ரால் சேத​மான சாலைகள் விரைந்து சீரமைக்​கப்​ப​டாத கராணத்​தால் போக்​கு​வரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால், ஆயிரக்​கணக்​கான டன் ஆப்​பிள்​கள் குறித்த நேரத்​துக்கு அனுப்ப முடி​யாமல் தேக்​கமடைந்து அழுகி வரு​வது விவ​சா​யிகளை​யும், வர்த்​தகர்​களை​யும் வேதனை அடைய செய்​துள்​ளது. கடந்த மாதம் கனமழை மற்​றும் மேகவெடிப்பு காரண​மாக ஸ்ரீநகர்​-ஜம்மு தேசிய நெடுஞ்​சாலை கடுமை​யாக சேதமடைந்​துள்​ளது. ஏறக்​குறைய 300 மீட்​டர் நீளத்​துக்கு சாலைகள் வெள்​ளத்​தால் அடித்​துச் செல்​லப்​பட்டு காணா​மல் போ​யுள்​ளது. மேலும் ஆங்​காங்கே பெரிய பனிப்​பாறை சரிவு​களும் ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக செனானி-உதம்​பூர், நஷ்ரி-பனிஹால் நெடுஞ்​சாலைகளில் பாதிப்பு அதி​க​மாக காணப்​படு​கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘நன்றி நண்பரே’ - பிறந்தநாள் வாழ்த்து கூறிய ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி ரிப்ளை https://ift.tt/O1syJgt

படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்த சூழலில் அவரை தன் நண்பர் என குறிப்பிட்டு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார். கடந்த ஜூன் 17-ம் தேதிக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக் கொள்வது இதுவே முதல் முறை என தகவல். இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பு நடவடிக்கை இருநாட்டு உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்ற காரணத்தால் கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வக்பு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு https://ift.tt/cXI0gy1

படம்
புதுடெல்லி: வக்பு சட்ட திருத்​தத்​துக்கு முழு​வது​மாக இடைக்​காலத் தடை விதிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. வக்பு சட்ட திருத்​தத்தை எதிர்த்து தாக்​கல் செய்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்​டின் ஜார்ஜ் மசி அமர்வு விசா​ரித்து இடைக்​கால தீர்ப்பை வழங்கி தேதி குறிப்​பி​டா​மல் ஒத்தி வைத்​தது. முகாந்​திரம் எழவில்​லை: இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நேற்று அளித்த இடைக்​கால தீர்ப்பில் கூறி​யிருப்​ப​தாவது: ஒட்டு மொத்த வக்பு சட்ட திருத்​தத்​துக்​கும் தடை விதிக்​கும் முகாந்​திரம் எழவில்​லை. இருப்​பினும் சில விதி​களுக்கு இடைக்​காலத் தடை விதிக்க வேண்​டிய அவசி​யம் உள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளா: இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர் https://ift.tt/OeEKuaS

படம்
திருவனந்தபுரம்: புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் விருப்பப்படி அவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்துள்ளார் கேரளாவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமியருமான சஃபீர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கடினம்குளம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது பெனடிக்ட் மென்னி உளவியல் - சமூக மறுவாழ்வு மையம். அங்கு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 44 வயதான ராகி எனும் பெண் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், மரண படுக்கையில் இருந்தபோது தனது கடைசி ஆசையை சொல்லி உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து

படம்
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “நேட்டோ நாடு​கள் குழு​வாக இணைந்து சீன பொருட்​கள் இறக்​குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்​டும். அப்​படிச் செய்​தால்​தான் ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அபாயகர​மான போரை முடிவுக்​குக் கொண்​டுவர முடி​யும் என நான் நம்​பு​கிறேன். ரஷ்​யா​விட​மிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்​ணெய் வாங்​கு​கிறது. இதன் மூலம் கிடைக்​கும் பணத்​தில் ரஷ்யா, உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்​துகிறது. எனவே, கூடு​தல் வரி விதித்​தால் ரஷ்​யா​விட​மிருந்து எண்​ணெய் வாங்​கு​வதை சீனா நிறுத்​தி​விடும்’’ என கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில், ஸ்லோவே னியா சென்​றிருந்த சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யி, அந்​நாட்டு துணைப் பிரதமரும் வெளி​யுறவு மற்​றும் ஐரோப்​பிய விவ​காரங்​கள் துறை அமைச்​சரு​மான டன்ஜா பஜோனை சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் லுப்​லி​யானா நகரில் வாங் யி கூறும்​போது, “வர்த்தக போரில் பங்​கேற்க சீனா விரும்​ப​வில்​லை. அமைதி பேச்​சு​வார்த்தை மூலம் பிரச்​...

காங்கிரஸுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு https://ift.tt/CGug5Or

படம்
தாரங்: சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு கடையிலும் சுதேசி பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார். மிசோரம், மணிப்​பூர், அசாம் மாநிலங்​களில் பல்​வேறு அரசு நலத்​திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் தொடங்​கி​வைத்​தார். அன்​றைய தினம் இரவு அசாமின் குவாஹாட்டி நகரில் அவர் தங்​கி​னார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்

படம்
காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகள் பணத்தை தண்ணீர்போல செலவழிப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷமாக இருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. இந்த செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மிசோரமில் முதல் ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர்: ரூ.9 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் https://ift.tt/nqaJstM

படம்
அய்சால்: மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். பிரதமர் நரேந்​திர மோடி வடகிழக்கு மாநிலங்​களில் 2 நாள் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதன் ஒரு பகு​தி​யாக மிசோரம் மாநிலம் அய்​சால் நகரில் உள்ள விமான நிலை​யத்​துக்கு நேற்று காலை சென்​றடைந்​தார். அங்​கிருந்து லம்​முவல் கிர​வுண்டு பகு​திக்கு ஹெலி​காப்​டரில் செல்ல திட்​ட​மிட்​டார். ஆனால் கனமழை காரண​மாக அங்கு செல்​ல​வில்​லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டம் குறித்து இந்தியா பரிசீலனை https://ift.tt/SYXnABP

படம்
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்​ஸிட​மிருந்து இந்​தியா வாங்​கிய ரஃபேல் போர் விமானத்​தை​யும் விமானப்​படை பயன்​படுத்​தி​யது. அப்​போது அதன் செயல்​பாடு சிறப்​பாக இருந்​தது. அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்​ரானிக் சாதனம், பாகிஸ்​தான் போர் விமானங்​கள் ஏவிய பிஎல்​-15 என்ற சீனா தயாரிப்பு ஏவு​கணை​களை திசை திருப்​பியது. இதனால் ரஃபேல் போர் விமானங்​களை மீண்​டும் வாங்க விமானப்​படை விருப்​பம் தெரி​வித்​துள்​ளது. மேலும் 114 ரஃபேல் போர் விமானங்​களை பிரான்ஸ் நாட்​டின் டஸ்ஸோ ஏவி​யேஷன் நிறு​வனத்​துடன் இணைந்து இந்​தி​யா​விலேயே ரூ.2 லட்​சம் கோடி மதிப்​பில் தயாரிக்​கலாம் எனவும் விமானப்​படை கூறி​யுள்​ளது. இதுகுறித்து, பாது​காப்​புத்​துறை செய​லா​ளர் தலை​மையி​லான பாது​காப்பு கொள்​முதல் வாரி​யம் ஆலோ​சிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும்: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/riLCXv2

படம்
இம்பால் : மணிப்​பூர் மக்​கள், அமைப்​பு​கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி - குகி சமு​தா​யங்​களுக்கு இடையே மோதல் ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்​தது. இதில் 258 பேர் உயி​ரிழந்​தனர். 1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. 60,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர். மணிப்​பூரில் சுமார் 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக வன்​முறை நீடித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்: பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்து  https://ift.tt/LJm7Qds

படம்
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேபாளத்தின் முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி!

படம்
காத்மண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி https://ift.tt/FaSeuK3

படம்
புதுடெல்லி: விகாஸ் திரி​பாதி என்​பவர் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனுவை, டெல்லி மாவட்ட கூடு​தல் தலைமை நீதி​மன்ற நீதிபதி வைபவ் சவு​ராசியா நேற்று முன் தினம் விசா​ரித்​தார். மனு​தா​ரர் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “சோனியா காந்தி இந்​திய குடி​யுரிமையை 1983-ம் ஆண்டு ஏப்​ரலில் பெற்​றுள்​ளார். ஆனால், அவரது பெயர் டெல்லி சட்​டப்​பேரவை தொகுதி வாக்​காளர் பட்​டியலில் 1980-ம் ஆண்டே இடம்​பெற்​றுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: 10 நக்சலைட்கள் சுட்டுக் கொலை https://ift.tt/IZekdoD

படம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் முக்கிய கமாண்டர்கள் உட்பட 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 16 பேர் சரணடைந்தனர். வரும் 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சல் தீவிரவாதத்தை நாட்டில் இருந்து முற்றிலுமாக அகற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சரணடையும் நக்சல்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேபாள கலவரம்: கள சூழலை காட்டிய பிரிட்டிஷ் யூடியூபரின் வீடியோ பதிவு

படம்
காத்மாண்டு: நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக ‘ஜென் இசட்’ தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு கலவரம் ஏற்பட்டது. இந்த சூழலில் அங்கு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கலைந்து செல்லும் வகையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும் இதற்கு பலன் இல்லாமல் போனது. இந்நிலையில், இந்த போராட்டம், இளைஞர்கள் மீதான தாக்குதல், இளைஞர்கள் மேற்கொண்ட தாக்குதல் என பல கோணங்களில் ‘நேபாள வன்முறை’ சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, அதை தனது யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார் பிரிட்டன் நாட்டை சேர்ந்த யூடியூபர் ஹேரி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்