இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரணாப் முகர்ஜி இல்லத்தில் பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு இறுதி அஞ்சலி https://ift.tt/3lvVDfb

படம்
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவரின் இல்லத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் மலர்கள் தூவி இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர். குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மாமியார், மருமகள் உயிரிழப்பு https://ift.tt/3gQV9wl

படம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மாமியார், மருமகள் இன்று உயிரிழந்தனர். ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவர், தனது வீட்டைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஆக.30) இரவு எதிர்பாராத விதமாக வீட்டுக்கு செல்லும் மின்கம்பி அறுந்து வேலியின் மீது விழுந்தது. இதையறியாது, வேலியைப் பிடித்துக்கொண்டு இன்று (செப்.1) காலை குடிநீர் பிடித்த மகாதேவன் மனைவி ராதிகா (37), தாய் செ.ராஜகோகிலா (65) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அந்த இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய- அமெரிக்க உறவு விரிவும், ஆழமும் பெறுவதில் பெரும் பங்காற்றியவர்: பிரணாப் முகர்ஜிக்கு ஜோ பிடன் உட்பட தலைவர்கள், அமைப்புகள் இரங்கல்  https://ift.tt/3lBIoJN

படம்
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனது இரங்கல் செய்தியில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறும்போது உலகச் சவால்களை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து எதிர்கொள்ளும் என்று முகர்ஜி ஆழமாக நம்பிக்கை கொண்டவர் என்று தெரிவித்துள்ளார். ஜோ பிடன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களும் அமைப்புகளும் முகர்ஜியின் மரணத்துக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் அரசியல்வாதிகள், நிபுணர்களில் ஒரு தனித்துவமான ஆளுமை பிரணாப் என்று புகழ்ந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மையநீரோட்ட வளர்ச்சியில் சிறுபான்மையினரைக் கொண்டு வர சிறப்பு முயற்சிகள் தேவை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் https://ift.tt/2QIHDR2

படம்
வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் இணைய வேண்டியது அவசியம். சிறுபான்மையினரை மையநீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்கு அரும்பெரும் முயற்சிகள் தேவை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். இந்தியாவில் பல சாதிகள், பல மொழிகல், பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம் என்றார் அசோக் கெலாட். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இங்கிலாந்தில் கோவிட்-19 காரணமாக மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

படம்
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் இன்று முதல் இங்கிலாந்தில் திறக்கப்படவுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் இதற்குரிய கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளுக்கு வரவேண்டும். நேரடி தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று பிரிட்டன் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்களின் ஊடுருவல் முறியடிப்பு; லடாக் எல்லையில் மீண்டும் போர் பதற்றம்: பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை https://ift.tt/2QF2QLt

படம்
லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக லடாக் எல்லை யில் மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. ராணுவ தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரி ழந்ததாக தகவல் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராட்சத பட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட 3 வயது சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

படம்
தைவானின் வடகிழக்கு நகரான ஹிசின்ஸுவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பட்டம் விடும் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதில், தைவான் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அதன்படி, ஹிசின்ஸுவில் நேற்று முன்தினம் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று விதவிதமான ராட்சத பட்டங்களை பறக்கவிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக, ஒரு ராட்சத பட்டத்தின் வால் பகுதியில் 3 வயது சிறுமி சிக்கிக் கொண்டாள். சுமார் 100 அடி உயரத்துக்கு சிறுமி இழுத்துச் செல்லப்பட்டாள். அதைப் பார்த்து சிறுமியின் பெற்றோரும், பார்வையாளர்களும் பயத்தில் அலறினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற அதானி குழுமம் ஒப்பந்தம் https://ift.tt/3lLphgC

படம்
மும்பை விமான நிலையத்தில் 74 சதவீத பங்கை அதானி குழுமம் வாங்குகிறது. மேலும் புதிதாக வரவுள்ள நவி மும்பை விமான நிலையமும் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. மும்பை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகித்து வரும் ஜிவிகே குழுமத்திடம் இருந்து 50.5 சதவீத பங்கையும், தென் ஆப்பிரிக்க ஏர்போர்ட் கம்பெனியிடம் 10 சதவீதமும், தென் ஆப்பிரிக்க பிட்வெஸ்ட் நிறுவனத்திடம் 13.5 சதவீதமும் பங்குகளைக் கைப்பற்றுகிறது அதானி குழுமம். இதன்மூலம் மும்பை விமான நிலையம் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜிவிகே குழுமமும், அதானி குழுமமும் நேற்று கையெழுத்திட்டன. மீதமுள்ள 26 சதவீத பங்குகள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) வசம் இருக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இணையாகக் கருதுங்கள்: பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் https://ift.tt/3jvMC3W

படம்
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் உயிரிழந்த மருத்துவர்களை, ராணுவத்தில் போரின்போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இணையாகக் கருத வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடிதம் எழுதியுள்ளது. அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணியும் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது

படம்
உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வோல்டோ மீட்டர் வெளியிட்ட தரவுகளின்படி, “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,981 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 369 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. 1,87,226 பேர் பலியாகி உள்ளனர்.34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து: செப்.30 வரை நீட்டிப்பு https://ift.tt/31KqA7A

படம்
இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவை ரத்து, செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடியவகையில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜப்பானின் புதிய பிரதமர்: செப்டம்பர் 17 ஆம் தேதி அறிவிப்பு

படம்
ஜப்பானின் புதிய பிரதமர் செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், “ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாகிரேடிக் கட்சி தலைமையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு செப்டம்பர் 1 ஆம் தேதி கூடுகிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 13 மற்றும் 15 ஆம் தேதிக்குள்ளாக கட்சியிலிருந்து பிரதமரைத் தேர்ந்தெடுத்து 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்: கெடு விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  https://ift.tt/2GcOsbA

படம்
நீதித்துறையையும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் விமர்சித்தமைக்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார். நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிழக்கு லடாக்கில் மீண்டும் மோதல்: சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிப்பு https://ift.tt/2EScdop

படம்
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டே ஏரிப் பகுதியின் தென்பகுதி கரையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்து, தடுத்து நிறுத்தினர் என்று இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன, இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தின் தரப்பிலும் அதிகமான உயிர் சேதம் ஏற்பட்டபோதிலும் அதை வெளியிடவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரேசிலில் கரோனா பலி 1,20,800 ஆக அதிகரிப்பு

படம்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,20,800 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் பலியாகியுள்ளனர். 16,158 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை கரோனாவுக்கு 1,20,800 பேர் பலியாகியுள்ளனர். 38,62,311 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா முடிவுக்கு வரும்வரை தலைவர் தேர்தல் சாத்தியமல்ல; காந்தி குடும்பமே பதவிக்கு உகந்தது: காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து https://ift.tt/31ISuR7

படம்
கரோனா பரவல் முடிவிற்கு வரும்வரை காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சாத்தியமல்ல என்றும், இப்பதவிக்குக் காந்தி குடும்பமே உகந்தது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துக் கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தல் தேல்வியால் ராகுல் ராஜினாமா செய்தும், அகில இந்திய காங்கிரஸில் உருவான பிரச்சனைகள் முடிவிற்கு வந்தபாடில்லை. இதன் உச்சமாக குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் பத்திரிகைகளில் கசிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜிஎஸ்டி பற்றாக்குறைக்கு மாநிலங்களைக் கடன்வாங்கச் சொல்வது நியாயமற்ற சிந்தனை: மத்திய அரசு மீது தேவகவுடா விமர்சனம் https://ift.tt/34QHTpg

படம்
ஜிஎஸ்டி வரிவருவாய் பற்றாக்குறைக்கு மாநிலங்கள் ரிசர்வ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருப்பது நியாயமற்ற சிந்தனை. மத்திய அரசு தனது பொறுப்பைச் சுருக்கிக்கொள்ள முடியாது என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடா விமர்சித்துள்ளார். 41-வது ஜிஎஸ்டி கூட்டம் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. அப்போது, அவர் பேசுகையில், “நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா பாதிப்பு: 36 லட்சத்தை கடந்தது https://ift.tt/2QBrsoD

படம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 512 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா; குணமடைந்தார் அமித் ஷா;  எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் https://ift.tt/31ML5AB

படம்
கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்ததை தொடர்ந்து இன்று வீடு திரும்பினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா வைரஸால் கடந்த 2-ம் தேதி பாதிக்கப்பட்டார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்ற அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருச்சி அருகே திருமணமான ஒன்றரை மாதத்தில் ஆற்று நீருக்குள் மூழ்கடித்து மனைவியை கொன்ற கணவன் https://ift.tt/3hIZV09

படம்
திருச்சி அருகே தாம்பத்ய உறவுக்கு மறுத்ததால் திரும ணமான ஒன்றரை மாதத்தில் மனைவியை ஆற்று நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர். திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியிலுள்ள வாழவந்தபுரத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ்(30). இவருக்கும் கிறிஸ்டி ஹெலன் ராணி (26) என்பவருக்கும் கடந்த ஜூலை10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பழைய கொள்ளிடம் பாலத்துக்கு அடியில் ஆடைகள் இன்றி கிறிஸ்டி ஹெலன் ராணி இறந்து கிடந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையை சேர்ந்த பேராசிரியர் உதவியுடன் உள்ளூர் மொழிகளில் வழக்கு நிலவரத்தை அறிந்து கொள்ள இணையதளம் அறிமுகம்: உச்ச நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார் https://ift.tt/3hE1aOi

படம்
உள்ளூர் மொழிகளிலேயே வழக்கு நிலவரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக, புதிய இணையதளத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி நேற்று தொடங்கி வைத்தார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் பொதுமக்கள் வழக்கு நிலவரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக புதிய இணையதளம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இணையதளத்தில் வழக்கு நிலவரங்களை ஆங்கில மொழியில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதளத்தில் ஆங்கிலம் மட்டுமன்றி, அவரவர் உள்ளூர் மொழிகளிலும் வழக்கு நிலவரங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரசேவகர்கள் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும் நினைவகம்: ராமர் கோயில் வளாகத்தில் அமைக்க திட்டம் https://ift.tt/2ERJwrH

படம்
பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி நிலப்பிரச்சினை கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 500 ஆண்டுகளாக ராமர் கோயில் போராட்டத்தில் கலந்துகொண்ட கரசேவகர்களின் தியாகத்தை அங்கீகரிக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதற்காக ராமர் கோயில் வளாகத்தில் கரசேவகர்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்யும் வகையில் ஒரு நினைவகம் அமைக்கும் திட்டம் உள்ளதாக தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீர் பகுதியை ரத்த பூமியாக மாற்ற வேண்டாம்: பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா கோரிக்கை https://ift.tt/34MCz6d

படம்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. அப்போது தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் ஸ்ரீநகரின் குப்காரில் உள்ள வீட்டில் 6 கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஓர் அறிக்கையை வெளியிட்டனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அதுவரை போராடுவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த 22-ம் தேதி பரூக் அப்துல்லாவின் வீட்டில் 6 கட்சிகளின் தலைவர்களும் மீண்டும் ஒன்றுகூடி, சிறப்பு அந்தஸ்தை மீட்க உறுதியேற்று மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றமில்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் https://ift.tt/3hJYJK2

படம்
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இயற்கையை பாதுகாக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் அறிவுரை https://ift.tt/31IX55U

படம்
இந்து ஆன்மிக சேவா அறக்கட்டளை சார்பில் இயற்கையை பாதுகாப்பது தொடர்பான விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது: நமது முன்னோர்கள் இயற்கையை போற்றி பாதுகாத்தனர். இயற்கையை தங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக கருதினர். அவர்களைப் பின்பற்றி நாம் வாழ வேண்டும். நமது தேவைக்கு இயற்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதிபலனாக நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை என்று மக்கள் கருதுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் ரூ.2,000 கோடி நிதி மோசடி: நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது https://ift.tt/2GgaGJT

படம்
கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டத்தின் வகயார் கிராமத்தைச் சேர்ந்த பாப்புலர் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தின் மீது நிதி மோசடி புகார்கள் வந்துள்ள நிலையில் காவல் துறை விசாரணையில் இறங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரசாந்த் பூஷனுக்கு இன்று தண்டனை விவரத்தை அறிவிக்கிறது உச்ச நீதமன்றம்  https://ift.tt/3hJ94pL

படம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார். நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு https://ift.tt/3bb3OIP

படம்
மத்திய பிரதேசத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளத்தில் கரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள்: 2,154 பேர்:சுகாதார அமைச்சர் ஷைலஜா தகவல் https://ift.tt/2QCeNS6

படம்
கேரளத்தில் நேற்று புதிதாக 2,154 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து 1,766 பேர் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 23,658 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இந்த தகவலை சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

100 நாட்கள்; 100 திட்டங்கள்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்த ஓணம் போனஸ் https://ift.tt/31MvIIp

படம்
மாநிலத்தின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த 100 நாட்களில் முடிக்கப்படும் 100 திட்டங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடிநீர் விநியோக அளவீடு; கண்காணிக்க குழு அமைப்பு: ஜல் ஜீவன் அமைச்சகம் நடவடிக்கை https://ift.tt/3gI24Ip

படம்
கிராமப்புறங்களில் தண்ணீர் விநியோக அமைப்பின் அளவீடு மற்றும் கண்காணிப்புக்கான திட்டத்தைத் தயாரிக்க தேசிய நிபுணர்கள் குழு ஒன்றை தேசிய ஜல் ஜீவன் இயக்கம் அமைத்துள்ளது. நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகளாவியத் தேவைக்கு சேவைகளை அளிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு ஆதரவு வசதிகளுடன் கூடிய உலகத்திலேயே மிகவும் துடிப்பான விஷயங்களின் இணையச் (IoT) சூழல் அமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா காலத்தில் முதியோர்களுக்கு ஆதரவும், சிறப்பு கவனமும் தேவை: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு https://ift.tt/34Kwwz4

படம்
கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று காலத்தில் முதியோர் மீது சிறப்பு கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம் என குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார். சுகாதார நெருக்கடி மிக்க இதுபோன்ற நிலையில், வயது முதிர்ந்தோர் சந்திக்கும் அபாயத்தின் அளவு அதிகம் என்று கூறிய அவர், வீடுகளில் முதியோர் இருந்தால், கோவிட்-19 தொடர்பான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை குடும்பத்தினரும், இளைஞர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கைக்குப் படகில் கடத்த முயன்ற 1,700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; மண்டபம் பகுதியை சேர்ந்த மூவர் கைது https://ift.tt/3b92k1S

படம்
படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.1.36 கோடி மதிப்பிலான 1,700 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி நிலையத்தைச் சேர்ந்த கடலோர காவல் படை வீரர்கள், அபிராஜ் என்ற ரோந்து கப்பலில் நேற்று (ஆக.29) மன்னார் வளைகுடா பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சந்தேகமான வகையில் நாட்டுப் படகு ஒன்று சென்று கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உணவு எப்படியோ உள்ளமும் அப்படியே: பிரதமர் மோடி பேச்சு https://ift.tt/3hHcR75

படம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அதில் உணவு, ஊட்டச்சத்து ஆகியவற்றின் இன்றியமையாத முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். இன்று அவர் இது தொடர்பாக பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்; பராமரிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை: என்சிஆர்பி தகவல் https://ift.tt/3bbqsRw

படம்
கடந்த 2019-ம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் உள்ள சிறைகளின் கொள்ளவுக்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். பாராமரிப்புக்கு போதுமான அளவு ஊழியர்கள் இல்லை என தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிபிஆர்) தகவல் தெரிவித்துள்ளது. 2019-ம்ஆண்டு நிலவரப்படி நாட்டில் உள்ள சிறைகளின் நிலவரம் குறித்து என்சிஆர்பி வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

என்பிஆர், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2020-ம் ஆண்டில் நடக்க வாய்ப்பில்லை https://ift.tt/2EEpUaX

படம்
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்), மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றின் முதல்கட்டப்பணிகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் மிகவும் முக்கியத்தவும் வாய்ந்த என்பிஆர் பதிவேடு, மக்கள் தொகைக்கணக்கெடுப்பை வீடுதோறும் சென்று நடத்தும் சூழல் இல்லை , இரு பணிகளும் ஒத்திவைக்கப்படலாம், கரோனா தாக்கம் குறையாதப ட்சத்தில் ஓர் ஆண்டு தாமதமும் ஆகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி விவசாயிகளைப் போற்றிய மோடி https://ift.tt/31DCaB8

படம்
நாட்டு மக்களுக்கு இன்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி விவசாயிகளைப் போற்றிப் பேசினார். இன்றைய உரையில் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸால் உருவான பிரச்சினைகளைத் தீர்க்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அக்கறை காட்டவில்லை: ஒவைசி குற்றச்சாட்டு https://ift.tt/2QG034E

படம்
கரோனா வைரஸால் உருவான வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக்க கூட்டணி அரசு அக்கறைகாட்டவில்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி பொதுக்கூட்டம் ஒன்றில் காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா காலத்தில் பண்டிகைகளில் எளிமையைக் கடைபிடியுங்கள்: மன் கி பாத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை https://ift.tt/2YMhlS6

படம்
கரோனா காலத்தில் வரும் பண்டிகைகளின் போது மக்கள் ஒழுக்கத்தையும், சமூகவிலகலோடு இருந்து எளிமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தினார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 67-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்: அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தற்சார்பு: இந்திய ரக நாய்கள் அருமை; இதையே வளருங்கள்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பரிந்துரை  https://ift.tt/2QDFW7q

படம்
பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை பேசி வருகிறார். அதில் நம் நாடு வளர்ச்சி தொடர்பான, தேசியம் தொடர்பான பல விஷயங்களை அவர் சுவாரஸ்யமாகத் தெரிவிப்பதுண்டு. இன்று மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் தற்சார்பு இந்தியா பற்றி பேசிய அவர் இந்திய ரக நாய்கள், போலீஸ், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நாய்கள் குறித்துப் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் இரண்டிற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் தடை – முதல்வர் யோகியின் அதிரடி யோசனை https://ift.tt/3jrrHif

படம்
இரண்டிற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றவர்கள் உத்திரப்பிரதேசத்தின் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட உள்ளது இதற்கான சட்டதிருத்தம் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை செய்து வருகிறார் உ.பி.யில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் மீதான பேச்சுக்கள் சமீப நாட்களாக எழுந்துள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பால் உ.பி.யின் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராகி வருவதாக அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கருத்து கூறி இருந்தார் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் இதுவரையில்லாமல் ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு தொற்று; 35 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு: ஒரு வாரத்தில் 5 லட்சம் பேர் பாஸிட்டிவ் https://ift.tt/32BeDjz

படம்
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 761 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிர்தது 761 பேர் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 35 லட்சத்து 42 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமூக ஊடக நிறுவனம் மட்டுமல்ல, மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ராகுல் காந்தி: பாஜக ஐடி பிரிவு தலைவர் சாடல் https://ift.tt/31E5iYY

படம்
பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியத் தலைமை ஆளும் பாஜகவுடன் உள்கையாகச் செயல்படுகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக உரக்கப் பேசி வருகிறது. நேற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் கேரா, பேஸ்புக் மட்டுமல்ல வாட்ஸ் அப் குழுமமும் ஆளும் பாஜகவுக்கு நெருக்கம் என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார், அதனால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக தலைவர்களின் வெறுப்பு உமிழும் பேச்சுகளை சமூக ஊடகங்களில் நீக்காமல் அதனை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் சாடி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; போலீஸ் துணை ஆய்வாளர் உயிரிழப்பு https://ift.tt/2YHpdob

படம்
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே நேற்று இரவு போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீஸ் துணை ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீநகரின் பதான்சவுக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீன ஆன்லைன் சூதாட்ட செயலிகளை நடத்தும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: பெரிய வலைப்பின்னல் அம்பலம்- அமலாக்கத்துறை அதிரடி  https://ift.tt/34JxGLd

படம்
சீன ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் செயலியை நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் ரூ.46.96 கோடி பெறுமான வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆன்லைன் சீன சூதாட்டச் செயலிகள் 90க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்நிலையில் அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமையன்று இந்த நிறுவனங்களின் அலுலவகங்களில் ரெய்டு நடத்தியது. இதோடு மட்டுமல்லாமல் இந்நிறுவனங்களின் இயக்குநர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் வீடுகளிலும் டெல்லி, குருகிராம், மும்பை, புனே என்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை விவரத்தை உச்ச நீதமன்றம் திங்கட்கிழமை அறிவிக்கிறது https://ift.tt/2ERzBT1

படம்
நீதித்துறையையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் விமர்சித்தமைக்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்றம் நாளை(திங்கள்கிழமை) அறிவிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதிகள் பிஆர் கவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு தண்டனை விவரங்களை அறிவிக்கிறது. பிரசாந்த் பூஷனுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நியாயமான விலை, அத்தியாவசிய மருந்துகள் கிடைத்தல்: மோடியின் லட்சியத்தைப் பூர்த்தி செய்வதாக தேசிய மருந்து விலை நிர்ணைய ஆணையத்துக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு https://ift.tt/32Au4bO

படம்
நியாயமான விலை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைத்தல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுவதற்காக தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தை அதன் 23-வது நிறுவன நாளில் மத்திய அமைச்சர்கள் கவுடா மற்றும் மண்டாவியா பாராட்டினர். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்