இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மத்திய பட்ஜெட் 2021: தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம்; சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு https://ift.tt/3rfSBxL

படம்
சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு 63,246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்கவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. வரும் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள்; ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; புதிதாக தற்சார்பு சுகாதாரத் திட்டம் அறிமுகம் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு https://ift.tt/3oB6gh1

படம்
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது இரு தடுப்பூசிகள் இருக்கும் நிலையில் மேலும், இரு தடுப்பூசிகள் வர உள்ளன. தற்சார்பு சுகாதாரத் திட்டத்துக்கு (ஆத்ம நிர்பார்) ரூ.64 ஆயிரத்து 180 கோடி ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாாராமன் அறிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் முறைகேட்டால் ஆட்சிக் கவிழ்ப்பு; ராணுவ ஆட்சி: மியான்மர் ராணுவம் விளக்கம்

படம்
தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தங்கள் கட்டுப்பாடுக்குள் அரசு வந்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்கும் மியாவாடி செய்தி நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “மியான்மர் அரசை திங்கட்கிழமையன்று அந்நாட்டு ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைநகரிலிருந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலையையும் ராணுவம் அங்கு அமல்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும்; அமித் ஷா, கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: டெல்லி காங்கிரஸ் தீர்மானங்கள் நிறைவேற்றம் https://ift.tt/2L5bDHt

படம்
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும், அமித் ஷா,கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என 3 தீர்மானங்களை டெல்லி காங்கிரஸ் நேற்று நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என முதன்முதலாக டெல்லி பிரிவு காங்கிரஸ் குரல் எழுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்கள் இனிவரும் நாட்களில் தீர்மானம் நிறைவேற்றலாம் எனத் தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை அறிவிப்பு; ராணுவ ஆட்சி- தலைவர்கள் சிறை வைப்பு: உலக நாடுகள் கண்டனம் 

படம்
மியான்மரில் ஆட்சியை கைபற்றியுள்ள அந்நாட்டு ராணுவம் ஓராண்டுக்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் ஆம்னி கார் மோதி விபத்து: 6 பேர் பலி; 3 பேர் படுகாயம்  https://ift.tt/3pDCNnM

படம்
கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 8 பேர் பெங்களூரிலுள்ள ஒன்டர்லா சுற்றுலாத் தளத்திற்கு ஆம்னி கார் மூலம் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வாகனம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வந்துகொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்ற அரசுப் பேருந்தில் இருந்து இறங்கிய தேவராஜ் என்பவர் சாலையைக் கடக்க முயன்றபோது அவர் மீது மோதியது. மேலும், ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

11 புயல்களில் 6,000 மீன்பிடி படகுகள், 40,000 மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை https://ift.tt/3oJJ7Jv

படம்
கடந்த ஆண்டில் ஏற்பட்ட 11 புயல்களின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6,000 மீன்பிடி படகுகள், 40,000 மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இந்திய கடலோர காவல் படை தனது 45வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது. கடந்த 1978ம் ஆண்டு 7 தளங்களுடன் தொடங்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை, இன்று 156 கப்பல்கள் மற்றும் 62 விமானங்களுடன் ஒரு வலுவான படையாக வளர்ந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா பாதிப்பு; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,68,235 ஆக குறைவு https://ift.tt/3aAHZCX

படம்
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,68,235 ஆகக் குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பெருந்தொற்று; உலக சுகாதார நிறுவனம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதல் நாடு இந்தியா: ஹர்ஷ்வர்தன் பெருமிதம் https://ift.tt/36uJ2D1

படம்
கரோனாவை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதல் நாடு இந்தியா என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவழி மருத்துவர்களின் கருத்தரங்கில், டாக்டர் ஹர்ஷ்வர்தன், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். ‘‘இந்தியாவில் கோவிட் - ஒரு வெற்றி கதை’’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மரில் ராணுவ புரட்சி- ஆங் சான் சூச்சி சிறைபிடிப்பு

படம்
மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூச்சி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலாவுக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு; ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடியுடன் வெளியே வந்தார்: சொகுசு விடுதியில் நெருக்கமானவர்களுடன் ஆலோசனை https://ift.tt/39xQtvc

படம்
கரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில், அதிமுக கொடியுடன் வெளியே வந்த அவருக்கு தொண்டர்கள் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவின் உறவினர்கள் அவருக்கு சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியதால் 21-ம் தேதி உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மம்தா மட்டுமே டிஎம்சி கட்சியில் இருப்பார்: மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து https://ift.tt/2L5gxEq

படம்
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜீப் பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நேற்று பாஜகவில் சேர்ந்தார். அவருடன் திரிணமூல் காங்கிரஸில் (டிஎம்சி) இருந்து விலகிய முக்கிய பிரமுகர்கள் பைஷால் டால்மியா, ஹவுரா முன்னாள் மேயர் ரதின் சக்கரவர்த்தி, பிரபிர் கோஷல், நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோரும் பாஜகவில் சேர்ந்தனர். பின்னர், ஹவுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் மேற்கு வங்கம் எல்லா துறைகளிலும் பின்னோக்கிச் செல்கிறது. மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி அநீதி இழைக்கிறார். அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் கட்சிக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு தனது சுயலாபத்துக்காக மத்திய அரசை எதிர்க்கும் திரிணமூல் காங்கிரஸை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்க மக்களுக்கும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை, சொந்தக் கட்சியினரிடமும் உண்மையாக இல்லை. இதனால், அதிருப்தி அடைந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் ...

செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்ட 5 பேரின் அடையாளம் தெரிந்தது https://ift.tt/2MBUMwp

படம்
புதுடெல்லி: கடந்த 26-ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா நடைபெற்றபோது, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பல்வேறு இடங்களில் விவசாயிகள் போலீஸ் தடுப்புகளை தாண்டி அத்துமீறினர். போலீஸார் மீது டிராக்டர்ளை மோதும் வகையில் வேகமாக ஓட்டினர். கத்தி, வாளை காட்டி மிரட்டி போலீஸாரை விரட்டினர். மேலும் வரலாற்றுசிறப்புமிக்க செங்கோட்டையில் குவிந்து அங்குள்ள கொத்தளத்தில் தேசிய கொடியை அகற்றிவிட்டு சீக்கியர்களின் கால்சா கொடியை ஏற்றினர். டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். விவசாயிகளின் அத்துமீறல்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய சுமார் 1,700-க்கும் வீடியோக்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை டெல்லி போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டையில் கால்சா கொடியேற்றியவர்கள், அத்துமீறல்களில் ஈடுபட்ட 5 பேரை டெல்லி போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் 5 பேரின் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. செங்கோட்டை பகுதியில் நுழைந்த வாகனங்...

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் https://ift.tt/39Adkq3

படம்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். காகிதம் இல்லாத பட்ஜெட்டாக முதல் முறையாக இது தாக்கலாகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுப்பதே சரியானது: டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் பேட்டி https://ift.tt/3pxjNaC

படம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுப்பதே சரியானது என டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் கூறியுள்ளார். அவர். ‘இந்து தமிழ்’ நாளி தழுக்கு அளித்த பேட்டி: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வலிப்பு நோயை முன்கூட்டியே எச்சரிக்கும் தலைக்கவசம்: கேரள பேராசிரியர்கள், ஆய்வு மாணவர் இணைந்து கண்டுபிடிப்பு https://ift.tt/36wYuym

படம்
வலிப்பு நோய் குறித்து முன்கூட்டியேஎச்சரிக்கை விடுக்கும் தலைக்கவசத்தைகேரளாவைச் சேர்ந்த பேராசிரியர்களும்ஆய்வு மாணவரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத் தலைவர் ராஜேஷ், பேராசிரியை தஸ்லீம்மா, ஆய்வு மாணவரான பாசில் ஆகியோர் இணைந்து தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து கணினி அறிவியல் துறைத் தலைவர் ராஜேஷ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம், தொடர்களுக்கு கட்டுப்பாடுகள்; வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் https://ift.tt/36qpO1i

படம்
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். கரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து ஓடிடி எனப்படும் ஆன்-லைன் தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்கள் ஆபாசமாக உள்ளதாக ஒரு தரப்பினர் புகார் செய்து வருகின்றனர். ஓடிடியில் வெளியாகும் படங்களையும் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்னர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனைத்து கிரிப்டோ கரன்சிகளுக்கும் தடை: புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு https://ift.tt/3cpXBeU

படம்
பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு (மெய்நிகர் கரன்சி) தடை விதிக்கத் தேவையான சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கு மாற்றாக அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக கொண்டுவரப்பட உள்ள சட்டமானது ரிசர்வ் வங்கி வெளியிடும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை அங்கீகரிக்கும் வகையிலும் இருக்கும் எனமக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டஆவணங்களில் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த மசோதா நடப்புநாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கும் தடை விதிக்கவகை செய்யும் வகையில்இந்த மசோதா வடிவமைக்கப் பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி: விதிமுறைகள் வெளியீடு https://ift.tt/3taD045

படம்
திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போது திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் முழு அளவில் செயல்படலாம். கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்துதல் மற்றும் கொவிட் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தியேட்டருக்குள் இருக்கும் அரங்குகளில் உணவு பொருட்களை மக்கள் வாங்கி கொள்ளலாம். கொவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவடையும் தருவாயில் உள்ளன’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடுமுழுவதும் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல் https://ift.tt/3rkVQnF

படம்
இன்று ஒரே நாளில் சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது தேசிய போலியோ சொட்டு மருந்து தினத்தை, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 30 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2020-ல் 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகள், 1,500 கோடி ரூபாய் கடத்தல் பொருட்கள் பறிமுதல்: கடலோர காவல்படை தகவல் https://ift.tt/3apWDNg

படம்
2020-ல் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் வந்த 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகள், 1,500 கோடி ரூபாய் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கடலோர காவல்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனம் தனது 45 வது எழுச்சி தினம் பிப்ரவரி 1, 2021 அன்று கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி கடலோர காவல்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோரக்பூர் மருத்துவர் கஃபீல்கான் உள்பட 80 பேர் கண்காணிக்கப்படும் நபர்கள் பட்டியலில் சேர்ப்பு: உ.பி. போலீஸார் நடவடிக்கை https://ift.tt/3j1xYlX

படம்
உத்தரப்பிரதேசம், கோரக்பூரைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் உள்ளிட்ட 80 பேர், மாவட்ட காவல்துறையின் கண்காணிப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் மருத்துவர் கஃபீல்கான் பேசியதாகக் குற்றம் சாட்டி, அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உ.பி. அரசு கைது செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி; பிப்ரவரி 28 -க்குள் யாரும் திரிணமூலில் இருக்க மாட்டார்கள்: சுவேந்து ஆதிகாரி பேச்சு https://ift.tt/3ayP1bl

படம்
திரிணமூல் காங்கிரஸ் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி; பிப்ரவரி 28 க்குள் யாரும் அக்கட்சியில் இருக்க மாட்டார்கள் என்று சுவேந்து ஆதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிணமூலை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்று பாஜக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரை பாஜக தன் வசம் இழுத்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2-வது ஆஞ்சியோ முடிந்தது: பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் https://ift.tt/3t5NKAK

படம்
கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதி்க்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். இம்மாதம் 2-ம் தேதி கங்குலிக்கு முதல்முறையாக லேசான மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த அடைப்புகள் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி சிகிச்சை முடிந்து கங்குலி வீடுதிரும்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பகக்வாதம் ஏற்பட்ட நிலையிலும் கேரள முதியவரின் அர்ப்பணிப்புமிக்க தூய்மைப்பணி மங்கவில்லை: மன் கி பாத்தில் பிரதமர் மோடி பாராட்டு https://ift.tt/3crLtKg

படம்
தனக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட தூய்மைப் பணி மங்கவில்லை என கேரள முதியவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 73-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசு தினத்தில் தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தால் தேசமே மிகுந்த வருத்தமடைந்தது: மன் கி பாத்தில் பிரதமர் மோடி வேதனை https://ift.tt/2Ywy5MM

படம்
குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின் போது, தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தால் தேசமே மிகுந்த வேதனை அடைந்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 73-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொய் வழக்குகளில் தந்தை கைது; அரசு மிதிவண்டியை ஏற்க மறுத்த மகள்: கடிதம் எழுதி கவனத்தை ஈர்த்த பள்ளி மாணவி https://ift.tt/3cqy4SN

படம்
பொய் வழக்குகளில் தந்தை கைது செய்யப்பட்டதால் அரசு தரும் மிதிவண்டியைப் பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை எனக் கூறி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கவனத்தை ஈர்த்துள்ளார் மேற்கு வங்க பள்ளி மாணவி ஒருவர். இச்சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மம்தாவுக்கு மேலும் பின்னடைவு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜீவ் பானர்ஜி அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்  https://ift.tt/2NSAJKT

படம்
முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியில் அமைச்சராக இருந்து கடந்த சில நாட்களுகு முன் பதவியை ராஜினாமா செய்த ராஜீவ் பானர்ஜி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ராஜீவ் பானர்ஜி தவிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள், பலரும் பாஜகவில் இணைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எங்களை பாஜக பி டீம் என்பதா; காங்கிரஸ், திரிணமூல் கட்சி எம்எல்ஏக்கள் என்னைக் கேட்டு பாஜகவுக்கு சென்றார்கள்?: ஓவைசி கேள்வி https://ift.tt/3rcf1Qp

படம்
எங்களைப் பார்த்து பாஜக பி டீம் என்பதா, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் என்னைக் கேட்டா பாஜகவுக்கு சென்றார்கள் என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கலந்துகொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி குடியுரசு தின வன்முறை: சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் https://ift.tt/2L4MAEB

படம்
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து சிறப்பு விசாரணைக் குழுவை ஏற்படுத்தி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸாருக்கும் , விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 300-க்கும்மேற்பட்ட போலீஸாரும், விவசாயிகளும் காயமடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டன என்ற கேள்விக்கே இடமில்லை: விவசாயிகள் அமைப்பினர் நம்பிக்கை https://ift.tt/39weSRB

படம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்ற கேள்விக்கே இடமில்லை என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவி்த்துள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 2-ம் தேதி 12-வது சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அ ரசுக்கும், விவாசயிகளுக்கும் இடையே நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போக்ஸோ சட்டத்தில் சர்ச்சை தீர்ப்பு: மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை நிரந்தமாக்கும் உத்தரவை திரும்பப்பெற்றது உச்சநீதிமன்ற கொலிஜியம் https://ift.tt/36uVjYe

படம்
போக்ஸோ சட்டத்தில் இரு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை இந்த மாதத்தில் வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு பெண் நீதிபதி புஷ்பா கானேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க அளித்த ஒப்புதலை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்பப் பெற்றுள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட இருவரை சமீபத்தில் நீதிபதி புஷ்பா கனேடிவாலா விடுவித்தார். இந்த தீர்ப்புகளுக்கு கடும் கண்டனம் எழுந்ததைப் புரிந்து கொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜியம் இந்த முடிவை எடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கால்நடை கடத்தல் வழக்கில் 12 பேர் பணியிட மாற்றம்: 3 பிஎஸ்எப் அதிகாரிகள் பணி நீக்கம் https://ift.tt/36qP8Ez

படம்
வங்கதேச எல்லையில் கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த 3 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய - வங்கதேச எல்லையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அடிக்கடி மாயமாகி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், பிஎஸ்எப் படையினரே கால்நடை கடத்தலில்ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இந்தியப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளை கடத்தி, அவற்றை வங்கதேசத்துக்கு பிஎஸ்எப் வீரர்கள் சிலர் விற்று வந்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலீஸாரை தாக்கிய வழக்கில் தெலங்கானா பாஜக எம்எல்ஏ.வுக்கு ஓராண்டு சிறை தண்டனை https://ift.tt/3rjN8pJ

படம்
தெலங்கானா மாநிலம், கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங். கடந்த 2015 டிசம்பரில் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு இறைச்சி உண்ணும் விழாவுக்கு மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜாசிங் தனது ஆதரவாளர்களுடன் அங்கு செல்ல முயன்றார். இதையடுத்து தடையை மீறி பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய முயன்றதாக ராஜாசிங்கை போலீஸார் கைது செய்தனர். அவரை செகந்திரபாத்தில் உள்ளபொல்லாரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களைசந்திக்க அனுமதிக்காததால் போலீஸாரை ராஜாசிங் தாக்கியதாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை: செங்கோட்டையில் ஆதாரங்களை திரட்டியது தடயவியல் குழு https://ift.tt/3cuSWbx

படம்
குடியரசு தினத்தன்று டெல்லியில்விவசாயிகள் நடத்திய டிராக்டர்பேரணியில் பெரிய வன்முறைவெடித்தது. இந்த வன்முறையின்போது போராட்டக்கார்களில் ஒருபிரிவினர், வரலாற்றுச் சின்னமான செங்கோட்டைக்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த போலீஸாரை விரட்டி விரட்டி தாக்கினர். இதில் சுமார் 300 போலீஸார் காயம் அடைந்தனர். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் செங்கோட்டையின் குவிமாடங்கள் மீது ஏறி, அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினர். இதில் செங்கோட்டை சேதம் அடைந்துள்ளதால் ஜனவரி 31 வரை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தொல்பொருள் துறை தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டிலேயே முதல் முறையாக காஷ்மீரில் பனிக் குடில் உணவகம் https://ift.tt/2YuhMjB

படம்
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையும் ஒன்று. இந்தியாவில் இப்போது கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவை அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக, விருந்தோம்பல் துறையினர் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், காஷ்மீரின் குல்மார்க் நகரில் உள்ள கோலஹோய் ஸ்கை ரிசார்ட், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பனிக் குடில் உணவகத்தை திறந்துள்ளது. 15 அடி உயரம், 26 அடி சுற்றளவுடன் அமைந்துள்ள இந்த உணவகத்தின் கூரை, மேசை உள்ளிட்டவை பனிக்கட்டிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆர்க்டிக் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 16 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இந்தக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுள் சூடான, சுவையான, புதுமையான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இதை ஏராளமானோர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர். இதைப் பார்த்த இணையவாசிகள், அங்கு நிலவும் வெ...

‘பொருளாதார ஆய்வறிக்கையை காகிதத்தில் அச்சிடாததே சிறந்த முடிவு’- ப.சிதம்பரம் https://ift.tt/3j3Fr3P

படம்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை டிஜிட்டல் பதிவாக மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று,"பொருளாதார ஆய்வறிக்கை எதற்காக தாக்கல்செய்யப்படுகிறது என்ற அடிப்படை தன்மையைக்கூட அது பூர்த்தி செய்யவில்லை. புரியாத விஷயத்தை அச்சிடாமல், மின்னணு பதிவாக மட்டும்பதிவேற்றியது மிகச் சிறந்த முடிவாகும். சரிவிலிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மோடி அரசு வகுத்துள்ள தொலைநோக்குக் கொள்கை மின்னணு பதிவாக இருப்பதே சிறந்த முடிவாகும். ஒரு காலத்தில் பொருளாதார ஆய்வறிக்கையானது மிகவும் எளிமையாகவும் வருங்காலம் குறித்த வழிகாட்டுதலையும் கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது பிற நலனுக்கானதாகவும், அந்த நலன் தெளிவில்லாததாகவும் உள்ளது. அரசு சுயமாக பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில் செயல்படுத்திய திட்டங்களை விளக்குவதாக இது உள்ளது. ஆனால் பொருளாதார ஆய்வறிக்கையின் அடிப்படை இலக்கான தொலைநோக்கு பார்வையைக் கொண்டதாக அது இல்லை" குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil...

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்: வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தல்; 7 நாட்களில் சென்னை திரும்ப திட்டம் https://ift.tt/3cqvCfd

படம்
கரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். மருத்துவர்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், பெங் களூருவிலேயே 7 நாட்கள் தங்கி யிருக்க சசிகலா முடிவெடுத்துள்ள தாக தெரிகிறது. அதன்பின்னர் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப் பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உறவினர்கள் சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இந்தியா வருகிறது இஸ்ரேல் புலனாய்வு குழு https://ift.tt/3ptVRF7

படம்
டெல்லி குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இஸ்ரேல் புலனாய்வு குழு இந்தியா வருகிறது. மத்திய டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. இந்திய, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவின் 29-வது ஆண்டு விழா இஸ்ரேல் தூதரகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது தூதரகம் அருகே சில மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. இதில் சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் மிகப் பெரிய புத்தர் சிலை: புத்தகயாவில் 100 அடியில் அமைகிறது https://ift.tt/3pB1fWX

படம்
பவுத்த மதத்தை தோற்றுவித்த கவுதம புத்தரின் 100 அடி சிலை கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. புத்தகயாவில் உள்ள ஒரு கோயிலில் இது அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது. கொல்கத்தாவின் பாராநகர் பகுதியில் கோஷ்பாரா என்றஇடத்தில் உள்ள ஒரு மைதானத்தில் மின்ட்டு பால் என்ற கலைஞர் இதனை உருவாக்கி வருகிறார். புத்தர் கையைத் தலைக்குக்கொடுத்தவாறு படுத்திருக்கும்தோரணையில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்தச் சிலை, பைபர்கிளாசில் தயாரிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரான்ஸில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

படம்
பிரான்ஸில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் கூறும்போது, “ஐரோப்பா அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்தவர்களில் அவசியமான பயணம் மேற்கொள்பவர்களுக்கே அனுமதி வழங்கப்படும். மேலும், கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாத்மா காந்தி நினைவு தினம்: டெல்லியில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் உண்ணாவிரதம் https://ift.tt/3ti2FYX

படம்
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் சங்கத் தலைவர்கள் நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25-ம் தேதி வரை விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வீட்டுக்கு ஒருவரை டெல்லி போராட்டத்திற்கு அனுப்பி வைக்க பஞ்சாப் கிராமம் முடிவு: மறுப்பவர்களுக்கு அபராதம் https://ift.tt/3alsYEV

படம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு வீட்டுக்கு ஒருவரை அனுப்பி வைக்க பஞ்சாப் கிராமம் முடிவு செய்துள்ளது. அப்படி அனுப்பி வைக்க மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா எதிரொலி: ஏரோ இந்தியா கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் விளக்கக் குறிப்புகள், கைப்பிரதிகள் https://ift.tt/3r64y9a

படம்
கரோனா எதிரொலியாக 2021-ம் ஆண்டின் ஏரோ இந்தியா கண்காட்சியில் விளக்கக் குறிப்புகள், கைப்பிரதிகள் பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 13-வது ஏரோ இந்தியா – 2021 சர்வதேச விமானக் கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் 3-ந் தேதி பெங்களூரூவில் உள்ள ஏலஹங்கா விமானப்படை தளத்தில் தொடங்க உள்ளது. 5-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உத்தேசித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பிரபுத்த பாரதா'-வின் 125-ம் ஆண்டு விழா; பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார் https://ift.tt/2MyaTep

படம்
1896-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான 'பிரபுத்த பாரதா'-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் நாளை 3.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார். மாயாவதியில் உள்ள அத்வைத ஆசிரமத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிராமப்புற இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பள்ளி மாணவர்கள்: பொருளாதார ஆய்வு சொல்வது என்ன? https://ift.tt/39wsFIb

படம்
கிராமப்புற இந்தியாவில் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 61 சதவீதமாக அதிகரித்துள்ளதாக 2020- 21ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது. இதை முறையாகப் பயன்படுத்தினால், கல்வித் துறையில் நிலவும் சமத்துவமின்மை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2020- 21ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் விவசாயிகள் போராட்ட பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை https://ift.tt/3ahSdHZ

படம்
டெல்லி எல்லையில் காஸிபூர், சிங்கு, திக்ரித் உட்பட விவசாயிகள் பேராட்டம் நடைபெறும் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25-ம் தேதி வரை விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா பாதிப்பு; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,69,824 ஆக குறைவு https://ift.tt/3t99taV

படம்
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,69,824 ஆகக் குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யார் இந்த ராகேஷ் டிகைத்? -டெல்லி காவல்துறை காவலர் பணியிலிருந்து விலகி விவசாயிகளுக்காக 44 முறை சிறை சென்றவர் https://ift.tt/3r7iO1s

படம்
டெல்லியில் போராடும் விவசாயிகளின் முக்கியத் தலைவராக இருப்பவர் பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயூ) ராகேஷ் டிகைத். பிகேயூவின் தேசிய செய்தித் தொடர்பாளருமான இவர், கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் திடீர் எனப் பிரபலமாகி உள்ளார். உத்தரப்பிரதேச மேற்குப்பகுதியில் உள்ள முசாபர்நகரின் சிசவுலி கிராமத்தில் ஜூன் 4, 1969 இல் பிறந்தவர் ராகேஷ். இவரது தந்தையும் நாட்டின் விவசாய சங்கங்களின் தலைவராக இருந்து புகழ் பெற்றவரான மஹேந்தர்சிங் டிகைத். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்